search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • பெண்கள் எப்படி உட்கார வேண்டுமோ அந்த நிலையில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர்.
    • தீபம் காட்டும்பொழுது பெருமாளின் உதடுகள் புன்னகை பூக்கும் நிலையில் இருப்பதை காணலாம்.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது.

    19.01.2000 அன்று மகாசம்ப்ரோஷனம் நடந்தேறியது.

    அருள்மிகு வைகுண்டநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருக்கும் கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்.

    பெருமாளின் கையில் சக்கரம் பிரயோக நிலையில் உள்ளது. இது ஓர் அபூர்வ அமைப்பு.

    மேலும் மற்றொரு கையில் கணையாழி (மோதிரம்) காணப்படுகிறது.

    அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு சீதனமாக கணையாழியைக் கொண்டு வந்ததாக 'கர்ண பரம்பரை' வரலாறு கூறுகிறது.

    பெண்கள் எப்படி உட்கார வேண்டுமோ அந்த நிலையில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர்.

    அருகிலேயே ஸ்ரீமார்க்கண்டேய மாமுனியும் காட்சி தருகிறார்.

    கருடாழ்வார் அபூர்வ அமைப்புகளுடன் காட்சி தருகிறார்.

    தீபம் காட்டும்பொழுது பெருமாளின் உதடுகள் புன்னகை பூக்கும் நிலையில் இருப்பதை காணலாம்.

    ஸ்ரீ அனுமனுக்கு தனிச் சந்நிதியும், கனகவல்லித் தயாருக்கு தனிச்சந்நிதியும், ஸ்ரீஆண்டாளுக்கு தனிச்சந்நிதியும் பிரகாரத்துக்குள் அமைந்துள்ளன.

    திருக்கோயிலின் நுழைவு வாயிலின் யாழிகள் இருபுறமும் அழகிய தோற்றத்துடன் அமைந்து காணப்படுகின்றன.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயிலில் 'வைகானச' ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இத்திருக்கோயிலில் 3 கால பூஜைகள் நித்திய பூஜைகளாக நடைபெற்று வருகின்றன.

    ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி இவ்வாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • காஞ்சி மாநகரில் திருமணம் செய்து கொள்வதாகவும் அசரீரியாய் அறிவித்தார்.
    • எனவே வைகுண்டப் பெருமாளை ‘சீர்பெருமாள்’ என்றும் ‘தடைநீக்கும் பெருமாள்’ என்றும் அழைக்கிறார்கள்.

    பூவுலகில் பார்வதியை மணமுடிக்க பரமன் வருவதை அறிந்த திருமால், பூவுலக முறைப்படி திருமணம் நடைபெறுவதால் தன் குடும்பம் சீராக கணையாழியை வலக்கரத்தில் எடுத்துக்கொண்டு,

    இறைவனின் திருமணத்திற்கு தடையேதும் இருப்பின் அதனை விலக்கிடவே வலக்கரத்தில் அருளாழி என்னும் சக்கரம்,

    உடன் செலுத்தக்கூடிய நிலையில் பிரயோகச் சக்கரமாக தயார் நிலையில் வைத்துக் கொண்டு, புவிமாது திருமாது (பூமிதேவி, ஸ்ரீதேவி)

    புடைசூழ மாங்காட்டை வந்தடைந்தார்.

    இறைவியின் தவத்தால் பூவுலகில் தோன்றிய சிவபெருமான் சுக்கிர முனிவரின் கடுந்தவத்தால் இறைவிக்கு காட்சி கொடுக்காமல் அம்மையிடம் காஞ்சி மாநகர் வந்து தவம் செய்வதை தொடர்வாய் என்றும்,

    காஞ்சி மாநகரில் திருமணம் செய்து கொள்வதாகவும் அசரீரியாய் அறிவித்தார்.

    எனவே திருமாலும் காஞ்சி மாநகருக்கு புறப்பட்டார்.

    அம்மனின் தவம் காஞ்சி மாநகரிலும் தொடரும் என்றும் பின்னர்தான் திருமணம் நிகழ்வதாகவும் எனவே அதுவரையில் இங்கேயே தங்கும்படியும் மார்க்கண்டேய மகரிஷி (இருடி) திருமாலிடம் வேண்டினார்.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் (சீர் பெருமாள்):

    மார்க்கண்டேய மகிரிஷியின் வேண்டுதலுக்கிணங்க திருமால் அருள்மிகு வைகுண்டப் பெருமாளாக எழுந்தருளினார்.

    இறைவன் இறைவி திருமணத்திற்கு இடையூறு நிகழா வண்ணம் பிரயோகச் சக்கரத்துடன் இருக்கும் இவர் தன் தங்கைக்கு சீர்கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழியுடன் (மோதிரம்) காட்சி தருகிறார்.

    எனவே வைகுண்டப் பெருமாளை 'சீர்பெருமாள்' என்றும் 'தடைநீக்கும் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள்.

    • குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும்.
    • பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    சித்திரைத் திருவிழா -10 நாட்கள்.

    இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர்.

    இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விஷேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர்.

    ஆண்களுக்கும் இது பொருந்தும்.

    குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும்.

    பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    உத்தியோக உயர்வுக்காவும், உடல் சார்ந்த குறைகள் நீங்கவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

    நேர்த்திகடன்:

    அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்) புடவை சாத்துதல், பால் அபிசேகம், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்யலாம்.

    • பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது.
    • மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது.

    நிறைமணி தரிசனம்

    பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது.

    ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர்.

    புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தவ மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர்.

    இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    முத்தேவியருடன் தங்கத்தேர்

    தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரசுவதி, இலக்குமி மூவரும் உலா வருகின்றனர்.

    சப்தமாதர்களில் ஒருத்தியான பிராம்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள்.

    தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர்.

    மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது.

    இதற்கு இடதுபுறம் தவ காமாட்சி சன்னிதி உள்ளது.

    • எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார்.
    • இவரை, “சீர் பெருமாள்” என்றும் அழைக்கிறார்கள்.

    சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்குத் திருமணச்சீர் கொண்டு வந்தார்.

    ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார்.

    அப்போது மார்க்கண்டேயர் பெருமாளை இங்கேயே தங்கும்படி வேண்டினார்.

    எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார்.

    பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார்.

    இவரை, "சீர் பெருமாள்" என்றும் அழைக்கிறார்கள்.

    • அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள்.
    • சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார்.

    திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார்.

    அதைக் கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றித் தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார்.

    அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார்.

    அப்பகுதியைத் திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார்.

    எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.

    அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள்.

    அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார்.

    இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன்.

    • இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள்.
    • நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம்.

    கருவறையில் அம்பாளாகப் பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி

    மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.

    இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது.

    இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள்.

    இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம்.

    கருவறையில் உள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    • சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.
    • இச்சக்கரத்திற்கு விசயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது.

    இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்கரம் மிகவும் விசேஷமானது.

    43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்கரம், "அஷ்டகந்தம்" என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது.

    இந்த அர்த்தமேரு ராஜயந்திரமாகும்.

    இதற்கு கூர்மம் (ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அமைத்து, அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து, அதன்மேல் ஸ்ரீசக்ர இயந்திரம் வரையப்பட்டுள்ளது.

    இந்த அர்த்தமேரு மிகப்பெரியது. இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.

    இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். எனவே இதற்கு அபிசேகம் கிடையாது.

    சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.

    இச்சக்கரத்திற்கு விசயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது.

    அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும்.

    • அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் யாவும் தோன்றின.
    • முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

    ஒரு சமயம் சுரர் அசுரர்கள் யாவரும் பாற்கடலைக்க டைந்தபோது, அதிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள்.

    அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் யாவும் தோன்றின.

    அந்தச் செல்வங்களோடு உடனாக வந்து லட்சுமிதேவியே, ஐஸ்வர்ய மகாலட்சுமி எனப் போற்றப்பட்டாள்.

    இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.

    பாற்கடலின் மேற்பகுதியில் ஐராவதம் படுத்த நிலையில், அதன் மீது உலகத்தாயான இவள், தன் பின் இரு கரங்களில் தாமரைகளைக் கொண்டும்,

    முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

    பாதங்களில் தேவர்கள அர்ச்சித்த பொற்காசுகளும் நறுமலர்களும் குவிந்துள்ளன.

    ஐஸ்வர்ய லட்சுமியின் பின்புறம் விரும்பியதை கொடுக்கும் கற்பக விருட்சம், இவளின் செல்வத்தை காவல் புரியும் விநதிய வாசினி எனும் துர்கை, குளிர்ந்த இனபம் நல்கும் சந்திரன் மற்றும் மணமாலையை ஏந்திய தேவப் பணிப் பெண்ணான அப்சரஸ் நிற்கின்றாள்.

    இந்த மணமாலையை சூட்டித்தான் லட்சுமி பின்னாளில் விஷ்ணுவை மணந்தாள்.

    பெண்களுக்கு விரைவில் திருமணம் நிறைவேற இவளே, தனது பார்வையால் அனுகிரக்கிறாள்.

    இவளின் இடப்பக்கத்தில் நோய்களைப் போக்குத் தன்வந்தரிரி, தெய்விகப் பசுவான காமதேனு, வலப்புறத்தே நினைத்த மாத்திரத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லும் உச்சைச்வரஸ் எனும் தெய்விக குதிரை ஆகியவை விளங்குகின்றன.

    இவளின் திருவடியை வழிபடுவோர், விரைந்து செயல்படும் ஆற்றல் உறுதி பெறலாம்.

    • இவளை வழிபட்டால் முயற்சி தானாகவே வரும். வீரம் வரும். வீரத்தோடு விவேகமும் வரும்.
    • நைவேத்யம் காய்ச்சிய பசும்பால் மற்றும் அக்கார அடிசில்.

    கோலாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடியவள் வீரலட்சுமி.

    இவள், சிம்மத்தின் மீது ஆரோகணித்து வில், வாள், அம்பு, கேடயம் ஏந்தி வருபவள் என்றும் நான்கு கரத்துடன் விளங்குபவள் என்றும் ஒரு தியானம் கூறுகிறது.

    வீரத்தால் விளைவது வெற்றியாகும்.

    வெற்றியை நல்கும் வீரலட்சுமி, வெற்றித் திருமகள், ஜெயலட்சுமி எனப்படுகிறாள்.

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஈம் ஓம் க்ரோம் ப்ரோம் க்ரௌம் ஜ்ரௌம் ச்ரௌம் ஜ்ரௌம் ஸ்வாஹா என்று கூறி

    புஷ்பங்களை திருவிளக்கின் பாதத்தில் போட்டு பூஜிக்க வேண்டும்.

    அல்லது லலிதா திரிசதீ நாமா வளியில் 61 முதல் 80 வரையிலான நாமாளவளிகளைச் சொல்லி

    குங்குமத்தினாலோ, சிவப்பு புஷ்பங்களாலோ, மல்லிகையாலோ அர்ச்சனை செய்யலாம்.

    நைவேத்யம் காய்ச்சிய பசும்பால் மற்றும் அக்கார அடிசில்.

    வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, தை மாத மகா சங்கராந்தி, திருவோண நட்சத்திரம்,

    நவராத்திரி காலங்களில் விசேஷமாக பூஜித்தல் நன்று.

    இவளை வழிபட்டால் முயற்சி தானாகவே வரும். வீரம் வரும். வீரத்தோடு விவேகமும் வரும்.

    பெருவீரர்களும், இவளை உபாசிக்கும் வீரரிடம் சரணடைவர். நீதிமன்ற வழக்கிலும் வெறறியடையச் செய்பவள் இவளே.

    • ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீமகாவிஷ்ணுவை மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.
    • திருமாலே, சாஸ்திரப்படி மூதேவியை உத்தாலகருக்குத் திருமணம் செய்து வைத்தாராம்.

    பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய பல பொருட்களுடன் ஸ்ரீமகாலட்சுமியும் மூதேவியும் தோன்றினார்கள்.

    ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீமகாவிஷ்ணுவை மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.

    அவ்வமயம் மூதேவி, மூத்தவளான தன் கலயாணத்துக்கு பின்னர்தான் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீமகாவிஷ்ணுவை மணக்கலாம் என்று திட்டவடடமாகக் கூறி விட்டாள்.

    மூதேவியை மணந்து கொள்ள யாருமே முன் வராதபோது, உத்தாலகர் என்ற ரிஷி, தானாகவே முன் வந்து,

    தன் தவ வலிமையால் மூதேவியின் தீய செயல்கள் எல்லாவற்றையும் அகற்றி விடுவதாகக் கூறி, மூதேவியை மணந்து கொண்டார்.

    திருமாலே, சாஸ்திரப்படி மூதேவியை உத்தாலகருக்குத் திருமணம் செய்து வைத்தாராம்.

    பின்புதான் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும், ஸ்ரீமகாலட்சுமிக்கும் திருமணம் நடந்ததாம்.

    அந்த நாளே தீபாவளித் திருநாளாகும்.

    • மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும்.
    • அந்த வகையில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது.

    அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.

    இதனால்தான் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளார்கள்.

    மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும்.

    அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம்.

    மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன்.

    அவருக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார்.

    ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களாகும்.

    அந்த வகையில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது.

    அன்றைய தினம் சிவன் கோயில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள்.

    அன்று தான் உமா மகேஸ்வர விரதமும் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×