search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
    • இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    தன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப்படுத்த படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார்.

    அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.

    வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர்.

    இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.

    மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது.

    • உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.
    • நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது.

    1. நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது.

    2. பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார்.

    3. உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.

    4. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.

    5. பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

    6. சென்னை&திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

    7. விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவுக்கு இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    8. விழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.

    9. கெடிலம் பகுதியில் இருந்து இத்தலத்துக்கு வர மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கிறது.

    10. 1800 ஆண்டுகள் பழமையான இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும்.

    11. பரிக்கல் தலத்தில் இருந்து பூவரசன் குப்பம் தலம் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

    12. இத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.

    13. காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசாந்தி பூஜை, 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால பூஜை, இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ராக்கால பூஜை நடைபெறும்.

    14. இத்தலத்தில் ரூ.10 கட்டணம் செலுத்தி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யலாம்.

    15. இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி நடத்தப்படுகிறது.

    16. ஆந்திராவைச் சேர்ந்த பலர் இத்தல நரசிம்மரை குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

    எனவே தெலுங்கு வருடப் பிறப்பு இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    17. முதல் அமைச்சரின் அன்னதானத்திட்டம் இத்தலத்தில் செயல்படுத்தப்படுகிறது.

    தினமும் 50 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    18. இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.

    19. திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது.

    20. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணை, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.

    21. இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

    22. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபாடுகள் செய்வது குறிப்பிடத்தக்கது.

    23. வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.

    24. இத்தலத்தின் புராண கால பெயர் ''பரகலா'' என்பதாகும்.

    25. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    • அந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டன.
    • சுவாதி உள்பட நரசிம்மருக்கு உகந்த நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் எத்தனையோ பழமை சிறப்புகள் கொண்டது.

    அந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    அவற்றில் பல வழிபாடுகள் கால ஓட்டத்தில் மறைந்து விட்டன.

    அந்த வழிபாடுகளில் சில தற்போது மீண்டும் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன.

    அதில் ஈரத்துணியுடன் 48 தடவை பரிக்கல் ஆலய முதல் பிரகாரத்தை சுற்றி பிரதட்சணம் செய்யும் வழிபாடு புத்துயிர் பெற்றுள்ளது.

    யார் ஒருவர் "ஓம் நமோ நாராயணா" என்று உச்சரித்தப்படி பரிக்கல் லட்சுமி நரசிம்மரை நினைத்து மனம் உருகி ஈர உடையுடன் 48 தடவை பிரதட்சணம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    அவர்கள் என்ன வேண்டுதல் வைக்கிறார்களோ அதை லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி வைப்பார்.

    இந்த வழிபாட்டுக்கு உதவும் வகையில் பரிக்கல் ஆலயம் அருகில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன.

    இரவில் அங்கு தங்கி விட்டு அதிகாலை எழுந்து குளித்து விட்டு ஈரத்துணியுடன் 48 தடவை ஆலய பிரதட்சணம் செய்யலாம்.

    சுவாதி உள்பட நரசிம்மருக்கு உகந்த நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டு தோறும் பல திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

    தைத்திங்கள் 5ம் நாள் பரிக்கல் நரசிம்மர் புறப்பாட்டில் ஊர்வலமாக பெண்ணையாறு சென்று அங்கு ஒரு நாள் இரவு தங்குவார்.

    இது ஒரு பிரார்த்தனை திருத்தலம்.

    இங்கு பக்தர்களுடைய விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால், அதற்கு இங்கு பொதுமக்களால் அர்ச்சகரை கொண்டு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    பொதுவாக மனிதர்களுக்கு மூன்று விதமான துன்பங்கள் நேரிடும்.

    1. கடன் தொல்லை.

    2. பக்கத்திலுள்ளவர்களாலோ அல்லது உறவினர்களால் ஏற்படும் பகை.

    3. வியாதியினால், மருந்துகளாலோ குணப்படுத்த முடியாத படி மிகப் பெரிய தொல்லை.

    இப்படிப்பட்ட தொல்லைகளிலிருந்து விடுபட ஒரு சிறப்பு பூஜை இக்கோவிலில் நடத்தப்படுகிறது.

    • சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன.
    • மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள் இங்கே காணப்படுகின்றன.

    சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன.

    பல்லாயிரக்கணக்கான புகழ் பெற்ற மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள், (பாண்டிய அரசர்களின் சின்னம் மீன் சின்னம்) இங்கே காணப்படுகின்றன.

    13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பெருஞ்சிங்கம் என்ற பாண்டிய அரசனுடைய பெரும் பங்களிப்பை இது குறிக்கிறது.

    14ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருபுவனம் சக்கரவர்த்தி கோனிர்மாய் கொண்டானுடைய பங்களிப்பைப் பற்றியும் நாம் அறிகிறோம்.

    மற்றொரு கல்வெட்டின் மூலம் அருகிலுள்ள கிராமங்களான திருவெண்ணை நல்லூர், அனத்தூர், சித்தனூர் முதலிய கிராம மக்களுக்கு வரி தள்ளுபடியை வழங்கியதாகவும், அக்கிராம மக்கள் அந்த தொகையை இத்திருக்கோவிலைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவும் மற்றும் கோவில் திருப்பணிக்காகவும் பயன்படுத்தியதாகச் சாசனம் இங்கே உள்ளது.

    முதலாம் ராஜராஜ சோழன் பரிக்கல் கோவிலின் திருக்குளத்தை வெட்டி இத்தலத்தில் திருப்பணி செய்துள்ளான்.

    இத்திருக்கோவிலின் குடமுழுக்கை பல்லவ அரசர்கள் நாயக்க மன்னர்கள் நிறைவேற்றியதாகவும் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன.

    • விஷ்ணுவின் அவதாரங்களில் 4வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.
    • அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதாரமாகும்.

    விஷ்ணுவின் அவதாரங்களில் 4வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.

    இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.

    மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல.

    அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதாரமாகும்.

    இதன் காரணமாக மற்ற அவதாரங்களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு.

    நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.

    எனவேதான் "நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை" என்பார்கள்.

    எத்தனையோ தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்து முறையிட்டு, எதுவும் நடக்காமல் சலிப்படைந்தவர்கள், நரசிம்மரிடம் சரண் அடைந்து நினைத்தது நிறைவேற காண்பார்கள்.

    எனவே நரசிம்மர் தனது பக்தர்களைத் தக்க சமயத்தில் காத்து அருளும் கடவுளாக கருதப்படுகிறார்.

    • சோழர் காலமான கி.பி.1051ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது
    • மூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

    திருத்தலம் புதுச்சேரி & விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.

    புராணக் கதைகள் மூலம் இந்த ஊருக்கு சிங்கர்குடி, சிங்கிரிகுடி, கிருஷ்ணரண்ய கோவில் என்னும் பெயர்கள் உள்ளன.

    அபிஷேகப்பாக்கம், அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் இச்சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது.

    இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

    கல்வெட்டுக்களின் மூலம், சோழ அரசர்களின் நன்கொடையும், பின்னர் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர அரசரின் நன்கொடையும் இத்தலத்துக்கு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    மூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

    மற்றும் பல திவ்ய தேவதைகள் கிழக்கு மூலையில் உள்ளனர்.

    லீலாவதி என்கிற ஹிரண்யகசிபுவின் மனைவி, குழந்தை பிரகலாதன் அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், தேவகுரு வசிஷ்ட மகரிஷி ஆகியோரது சிலா உருவங்கள் சாமியின் கீழ் நிலைமேடையில் இத்திருக்கோவிலில் உள்ளன.

    முதன்மைக் கடவுளான திருவந்திபுரம் தேவநாதன்தான் இங்கு நரசிம்மராக சேவை சாதிக்கிறார் என்பர்.

    ஆனால் திருமங்கையாழ்வார் நரசிம்ம சாமிதான் திருவந்திபுரத்தில் தேவநாத சாமியாக உள்ளார் என்று பாடியிருக்கிறார்.

    ஸ்ரீஅஹோபில மடத்தில் 4வது தலைமை பீடாதிபதியின் பிருந்தாவனமும் இங்குள்ளது.

    ஸ்ரீவைகாசன ஆகமவிதிகளின் படியும், ஸ்ரீநரசிம்ம சாமியின் அனுஷ்டான விதிகளின்படியும் இக்கோவிலில் பூஜைகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீநரசிம்மர் அவருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் மனித உடலில் சிங்கமுகத்தில் கோபமாகவும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் அகன்ற மார்பை உடையவராகவும், வாயையும் உடையவராகவும் விளங்குகிறார்.

    இங்கு நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார்.

    பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.

    அவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் மிக அற்புதமாக சேவை சாதிக்கிறார்.

    மேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

    வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களால் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.

    யார் இந்த ஸ்ரீநரசிம்மர் குடி கொண்டுள்ள சிங்கர்குடிக்கு வந்து வணங்க வருகிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பகவான் அருளால் நீங்குகின்றன.

    மேலும் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும், தீர்காயுளுடன் கூடியதாகவும் விளங்குகிறது.

    இங்கே ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவம், பிரம்மோற்சவம் (10நாட்கள்) கொண்டாடப்படுகின்றன.

    பெருமாள் உற்சவமூர்த்தி பாண்டிச்சேரி கடற்கரைக்கு ஊர்வலமாக புறப்பாடு எழுந்தருளி தீர்த்தவாரி (மாசி மகத்தில்) உற்சவம் கண்டருள்கிறார்.

    • இத்திருக்கோவிலின் தல விருட்சம் மகிழமரம்.
    • பெரிய விளக்கு, மாவிளக்கு ஏற்றி பெருமாளுக்குப் பூஜை செய்வார்கள்.

    இந்த திருக்கோவில் முதலில் சிவப்பு செங்கற்களாலும், சுண்ணாம்பு மற்றும் மரத்தாலும் கட்டப்பட்டிருந்தது.

    முஸ்லிம்களின் படையெடுப்பால் இக்கோவில் மிகவும் சிதைந்து போய், சிதிலமடைந்து அழிந்து போய் விட்டது.

    கர்நாடக அரசன் நரசிம்மன் என்பவன் இத்திருக்கோவிலை மறுபடியும் கறுப்பு பளிங்கு கற்களால் கட்டினான்.

    இப்பொழுதும் மாத்வ மதத்தைச் சேர்ந்த கர்நாடக மாநிலத்தவர்கள் பரிக்கல் நரசிம்ம சுவாமியை தங்களுடைய குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

    எவரெவர் தங்களுக்குச் சிறந்த வேலையும், வேலையில் உயர்ந்த பதவியும் அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் நிச்சயம் பேரருள் புரிகின்றார்.

    தங்களுடைய விருப்பம் நிறைவேறிய பின் பக்தர்கள் இந்த நரசிம்ம சுவாமிக்கு தைலம், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், சந்தனம் மேலும் வஸ்திரம் முதலியவற்றை நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்கின்றார்கள்.

    சில நேரங்களில் தங்களுடைய முடியையும் காணிக்கையாகக் கொடுக்கின்றார்கள்.

    அவர்கள் பெரிய விளக்கு, மாவிளக்கு (அதாவது அரிசி மாவு, நெய் முதலியவற்றை கலந்தது) ஏற்றி பெருமாளுக்குப் பூஜை செய்வார்கள்.

    மேலும் சில பக்தர்கள் காதுகுத்தல், அங்கபிரதட்சணம் (அதாவது ஈரத்துணியுடன் பிரகாரத்தில் உருண்டு பிரண்டு அங்கபிரதட்சணம்) செய்வார்கள்.

    ஸ்ரீபரிக்கல் நரசிம்ம சுவாமிக்கு எப்பொழுதெல்லாம் அபிஷேகம் செய்யப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கும், கனகவல்லித் தாயாருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    இத்திருக்கோவிலுக்கு உள்ளே ஒரு கிணறு உள்ளது.

    அதற்கு அருகில் "நாககோபம்" கருடன், கோமுகி, தீர்த்தமும் உள்ளது. இத்திருக்கோவிலின் தல விருட்சம் மகிழமரம்.

    • அவன் ஒரு நரசிம்மர் திருக்கோவிலைக் கட்ட விரும்பினான்.
    • அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார்.

    மகாலட்சுமியின் அன்பான அரவணைப்பால் பகவான் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி தன் கோபத்தைத் தணித்து சாந்த மூர்த்தியான இடம் இதுவாகும்.

    இங்கு மகாலட்சுமி அவளுடைய வலது கரத்தால் சுவாமியை தழுவியும், பகவான் தன்னுடைய இடது கரத்தால் தாயாரை அரவணைத்தும் சேவை சாதிக்கிறார். ஆகவே இது பரிக்கல் எனப்படும்.

    வசந்தராஜன் விருத்தாசலத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.

    அவன் ஒரு நரசிம்மர் திருக்கோவிலைக் கட்ட விரும்பினான்.

    வசந்தராஜனுக்கு பரகாசுரன் என்ற அரக்கன் பல தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.

    அவன் அரக்கன் இரண்யகசிபுவின் உறவினன்.

    இந்த தொல்லைகளிலிருந்து விடுபட வசந்தராஜன் கடும் தவம் புரிந்தான்.

    அவனுடைய குருவின் ஆணைப்படி இந்த இடத்தில் தவம் புரிந்தான்.

    நரசிம்ம மூர்த்தி அவனுடைய தவத்தை மெச்சி அந்த அசுரனைக் கொன்றார்.

    அந்த அசுரனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்ரரூபத்தைக் கண்டு அஞ்சி வசந்தராஜன் ஸ்ரீலட்சுமித் தாயாரிடம் பகவானை சாந்தப்படுத்தும்படி வேண்டினான்.

    ஸ்ரீலட்சுமி தாயாரின் அரவணைப்பால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்தமாகி தன்னுடைய கொடூரமான முக பாவத்தை மாற்றிக் கொண்டு ஸ்ரீகனகவல்லித் தாயாரை தன்னுடைய மடியில் வீற்றிருக்கும்படி செய்தார்.

    அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார்.

    தேவர்களும், முனிவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்க்ள.

    இதனால் வசந்தராஜன் ஸ்ரீநரசிம்ம சுவாமியிடம் இங்கேயே தங்கும்படி வேண்டினான்.

    அந்த அசுரனின் பெயரால் இந்த இடம் "பரிக்கல்புரம்" என்றாகிப் பிறகு நாளடைவில் பரிக்கல் எனப்பட்டது.

    • ஸ்ரீசுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடை பெறுகின்றன.
    • எல்லா மாதங்களிலும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    எல்லா மாதங்களிலும், சுவாதி நட்சத்திரத்தன்று இந்த நரசிம்மரை மக்கள் வழிபடுகிறார்கள்.

    சுவாதி நட்சத்திரம் ஸ்ரீநரசிம்மருடைய அவதார திருநட்சத்திரம்.

    அன்று சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் முதலியன நடைபெறுகின்றன.

    ஸ்ரீசுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடை பெறுகின்றன.

    புரட்டாசி மாதத்தில் எல்லா சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவம், 3வது சனிக்கிழமை பூஜையையும், இத்திருக்கோவிலில் மிகச் சிறப்பான விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

    மற்றொரு சிறப்பான விழாவாக பெண்ணையாறு பூஜை பொங்கல் பண்டிகைக்கு பிறகு வரும் 5ம் நாள் (சுவாதி நட்சத்திரம்) அன்று கொண்டாடப்படுகிறது.

    எல்லா மாதங்களிலும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    அக்டோபர் மாதத்தில் நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது.

    9ம் நாள் சிறப்பாக விசேஷ ஹோமம் செய்யப்படுகிறது.

    உற்சவமூர்த்தி ஸ்ரீநரசிம்மருடைய புறப்பாடு (1 கி.மீ. தூரத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் தை (தமிழ்) மாதம் 5ம் நாள் நடைபெறும்.

    எவர் ஒருவர் இங்கு வந்து எம்பெருமானை வணங்கி அதே நாளில் தீர்த்தவாரி செய்கிறார்களோ அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் முழுமையான சிறப்பான வாழ்க்கையும் பகவானுடைய ஆசியால் நிச்சயமாக அமைகின்றது.

    • அந்த இலையில் லட்சுமி நரசிம்மருடைய உருவம் தெரிந்தது.
    • அந்த முனிவர் நரஹரியும் அங்கு பகவானின் ஒரு அம்சமாக உள்ளார்.

    பூவசரங்குப்பம் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 15 கி.மீ. தூரத்திலும், பாண்டிச்சேரியிலிருந்து 32 கி.மீ. தூரத்திலும், கடலூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    மூலமூர்த்தி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவருடைய தேவி அமிர்தவல்லி தாயார் இவர்கள் இக்கோவில் உள்ள பிரதான மூர்த்திகளாவார்கள்.

    தலபுராணத்தின்படி வடக்கு கடற்கரையிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் வசித்து வந்த சப்தரிஷிகள் எம்பெருமானை நோக்கி அவருடைய தரிசனத்திற்காக தவம் செய்தனர்.

    அவர்களால் பகவானுடைய கடும் கோபத்தீயை தாங்க முடியாமல் போகவே அவரை சாந்த மூர்த்தியாக தரிசிக்க விரும்பினர்.

    அதனால் இங்கு அமிர்தவல்லி தாயார் அவர்களுக்கு காட்சியளிப்பதற்காக பகவானுடைய மடியில் தாம் வீற்றிருந்து ஓரக்கண்ணால் பகவானையும், மற்ற கண்ணால் முனிவர்களையும் அருள்பாலித்தார்.

    பகவானுடைய கோபத் தீயைத் தணிப்பதற்காக தாயார் அவரைக் கனிவுடன் நோக்கி அவரது இடது பக்கத்து மடியில் வீற்றிருந்து காட்சியளிக்கிறார்.

    தாயார் லட்சுமியின் கருேணாகடாட்சத்தால் ஸ்ரீநரசிம்மர் அமைதி தவழ்ந்த முகப்பொலிவுடன் காட்சி அளிக்கிறார்.

    பூவசரங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா?

    பல்லவ அரசர்கள் ஜைன மதத்தை தழுவி விஷ்ணு கோவில் களையும் சிவன் கோவில்களையும் இடித்து தகர்த்து நாசமாக்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் திருக்கோவில்களை தகர்ப்பதை தடுத்து நிறுத்துவதற்காக அரும்பாடுபட்டனர்.

    ஆனால் பல்லவ அரசன் தன்னை எதிர்த்தவர்களை சிறையில் அடைத்தான்.

    நரஹரி என்ற முனிவர் இதைக் கண்டு பொங்கி எழுந்தார்.

    அவருடைய எதிர்ப்பைக் கண்ட அரசன் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தான்.

    முனிவர் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வருமாறு பகவானிடம் வேண்டினார்.

    இத்தருணத்தில் அரசனுக்குப் பல தொல்லைகளும் துன்பங்களும் தோன்றின.

    முடிவில் அரசன் தன் தவறுக்காக மனம் வருந்தினான்.

    இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும்,

    முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் அரசன் நரஹரி முனிவரைத் தேடி அலைந்தான்.

    கடைசியாக ஒரு பூவரச மரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த அரசனுடைய கனவில் தோன்றிய பெருமாள் "நீ உன்னுடைய சாபத்திலிருந்து விமோசனம் பெறுவாய் முனிவர் இங்கு வந்து உன்னை ஆசீர்வதிப்பார்" என்று கூறினார்.

    அரசன் உறங்கி விழித்தவுடன் பெருமாளைக் காண முடியவில்லை.

    அப்போது அந்த பூவசர மரத்திலிருந்து ஒரு இலை அரசன் மேல் விழுந்தது.

    அந்த இலையில் லட்சுமி நரசிம்மருடைய உருவம் தெரிந்தது.

    அவனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தபோது, நரஹரி முனிவரும் அங்கு வந்து அரசனை ஆசீர்வதித்தார் அரசனும் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான்.

    அந்த முனிவரின் விருப்பத்தின்படி அரசனும் பூவரசங் குப்பத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு ஒரு திருக்கோவில் எழுப்பினான்.

    அந்த முனிவர் நரஹரியும் அங்கு பகவானின் ஒரு அம்சமாக உள்ளார்.

    • ஆனால் நரசிம்ம அவதாரம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
    • பிரகலாதனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகமும் செய்து வைத்தார்.

    தீயசக்திகளை அழிக்க கடவுள் அவதாரம் எடுப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள்.

    ஒரு கடவுள் எந்த நோக்கத்துக்காக அவதாரம் எடுக்கிறாரோ, அந்த நோக்கம் முடிந்ததும், அந்த அவதாரமும் நிறைவு பெற்றுவிடும்.

    மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்தார்.

    ராவணனை அழித்ததும் அவர் அவதாரம் முடிந்து போனது.

    அதுபோல தான் கிருஷ்ண அவதாரமும். கம்சனை வதம் செய்த பிறகு அந்த அவதாரம் முடிவுக்கு வந்துவிட்டது.

    ஆனால் நரசிம்ம அவதாரம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

    நொடியில் தோன்றி தன் பக்தன் பிரகலாதனுக்காகக் காட்சி கொடுத்த இணையற்ற சிறப்பு அந்த அவதாரத்துக்கு உண்டு.

    இரண்யனை வதம் செய்து அழித்த பிறகு நரசிம்மர் உடனே தன் அவதாரத்தை முடித்துக் கொள்ளவில்லை.

    அதற்கு பதில் தன் பக்தன் பிரகலாதன் சீரும், சிறப்புமாக வாழ எல்லாவித ஏற்பாடுகளையும் செய்தார்.

    ராஜநீதிக்கான சாஸ்திரங்களை அவர் பிரகலாதனுக்கு சொல்லிக் கொடுத்தார்.

    ஒரு நாட்டை ஆள்வதற்கு ஏற்ப பிரகலாதனை தயார்படுத்தினார்.

    எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார்.

    அதுமட்டுமின்றி பிரகலாதனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகமும் செய்து வைத்தார்.

    தொடர்ந்து வழிகாட்டவும் உறுதி அளித்தார்.

    எனவே நரசிம்மர், ராஜபரிபாலனம் செய்ய உகந்தவர் என்று புகழப்படுகிறார்.

    இதனால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி இலக்கை குறி வைத்து இத்தலத்து இறைவனிடம் சரண் அடைவது அதிகரித்தபடி உள்ளது.

    அரசுப் பணிகளில் இருப்பவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற விரும்புபவர்கள் இத்தலத்துக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    இந்த வழிபாடு பூவரசன்குப்பம் தலத்தில் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.

    ×