search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 271609"

    • புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக்கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான்.
    • இப்பகுதியில் உள்ள பிற சிவன் கோவில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது.

    பீமாசங்கர் கோவில் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி என்னும் ஊரில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

    இக்கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக்கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணக்கதை.

    பீமாசங்கரர் கோவில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக்கோவில் 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டது. இக்கோவிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவனால் கட்டப்பட்டது.

    புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக்கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான். இப்பகுதியில் உள்ள பிற சிவன் கோவில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக்கோவில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முனைவர் மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கம், ராம்குமார், பிரபு, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முனைவர் மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னையில், நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கம், ராம்குமார், பிரபு, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா பேசியதாவது, சிவாஜி அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்களில் ஒன்று நேரம் தவறாமை. இன்றுவரைக்கும் என்னுடைய ஸ்டுடியோவில் என் கார் சரியாக ஏழு மணிக்கு நுழைந்து விடும். ஒரு நாள் நான் தாமதமாக வந்து விட்டேன். என்ன ராசா நீயுமா லேட்டு என்று கேட்டார். இல்லண்ணே நான் சரியாகத்தான் வந்தேன். நீங்க முன்கூட்டியே வந்து விட்டீங்க என்றேன்.

     

    உண்மையில் நான் தாமதமாக வரவில்லை. நான் சரியான நேரத்திற்குத் தான் வந்திருந்தேன். அவர் தான் சீக்கிரம் வந்துவிட்டார். ரிக்கார்டிங்கில் உள்ளே வந்து அவருடைய அனுபவங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். அதையெல்லாம் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

     

    ஒருமுறை திரையுலகம் சார்பில் சிவாஜிக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக வசூல் செய்யப்பட்டது. இன்று இருக்கும் நடிகர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜியின் பெயர் இருக்கிறது. அவருக்குக் கொடுக்கப்படும் பரிசில் யார் பெயரும் இருக்கக்கூடாது அதற்கு ஆகும் முழு பணத்தையும் நான் கொடுத்துவிடுகிறேன்.

    இளையராஜா

    இளையராஜா

     

    அதனைத் தெரிந்து கொண்ட சிவாஜி, யாரை மறந்தாலும் இளையராஜாவை மறக்கக் கூடாது என என்னிடம் தெரிவித்தார். அவருக்கான மரியாதையை இந்த சினிமாவோ, அரசோ செய்யவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒருவன் செய்து விட்டான் என்றால் அது இளையராஜா ஒருவன் தான். இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல் படத்திலேயே தமிழகத்தையே தன் வசப்படுத்தியவர் அவர் மட்டும்தான்.
    • முதல் மரியாதையில் அவரது இயல்பான நடிப்பு இப்போது பார்த்தாலும் ஆச்சரியத்தைத் தருகிறது.

    சிவாஜி மகா கலைஞன். நடிப்பிற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மேடை நாடகமெனும் விருட்சத்திலிருந்து சினிமாவில் விழுந்த கனி. சிவாஜியின் திரை வாழ்வு நான்கு பரிமாணங்கள் கொண்டது. சிவபெருமானுக்கும், அப்பருக்கும் கூட உருவம் தந்து இருபதாம் நூற்றாண்டில் உருவாகி வந்த சைவ - தமிழ் எழுச்சி மரபிற்கு அடையாளமாக இருந்தார்.

    அதே தருணத்தில் கலைஞரின் வசனங்களைத் தொடர்ந்து பேசி தமிழ் கலாச்சார மீட்டுருவாக்கத்தின் முகமாக இருந்தார். கட்டபொம்மன், வ.உ.சி போன்ற பல ஆளுமைகளை தன் நடிப்பால் உணர வைத்து இந்திய தேசியத்தின் தமிழ் முகமாகவும் இருந்தார். இப்படி வெவ்வேறு பரிமாணங்களில் இங்கு உருவாகி வந்த பல்வேறு கலாச்சார மீட்டுருவாக்க அலைகளின் வெகுஜன முகமாக அவர்தான் இருந்தார். 


    பீம்சிங், கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் உருவாக்கிய தமிழ் நிலத்தின் கூட்டுக் குடுப்பக் கலாச்சாரப் பிரதிநிதியாகவும் , பல்வேறு இயக்குநர்கள் உருவாக்கிய பெண்களைக் கவர்கிற அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காதலனாகவும் திகழ்ந்தார். ராஜபார்ட் ரங்கதுரை, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களின் வழியாக கலைஞர்களின் உடல் மொழிகளை அச்சு அசல் அப்படியே பிரதியெடுத்து அந்த அனுபவத்தைத் திரையில் கடத்தினார்.

    ஈகோவும், பாசமும் ஒருங்கே நிரம்பிய மேல்தட்டு மனிதர்களின் விசித்திரமான குணச்சித்திரத்தை திரையில் (கௌரவம், பார் மகளே பார் ) அற்புதமாகப் பிரதிபலித்தார் அவருடைய சோதனைக்காலம் எழுபதுகளின் பின்பகுதியில் தொடங்கி தொண்ணூறுகள் வரை தொடர்ந்தது.

    ராதா, அம்பிகாவையெல்லாம் தொந்தியோடு அணைத்தபடி அவர் ஆடிய ஆட்டம் உண்மையில் நமக்கான சோதனைக் காலம்.. ஆனால் அவருடைய மிக முக்கியமான இரு படங்களும் இந்தக் காலகட்டத்தில்தான் வந்தன. மிகை நடிப்பு என்று அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் மட்டுமே காரணமில்லை.அவரால் எந்த விதமான பாவத்திலும் நடிக்க முடியும். ஆனால் அவர் காலகட்டத்தில் திரையுலகின் சூழல் அதுதான்.

    முதல் மரியாதையில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு இப்போது பார்த்தாலும் ஆச்சர்யத்தைத் தருகிறது. கத்தி மேல் நடக்கிற மாதிரியான பாத்திரப் படைப்பு அவருடையது. 'ப்பூ' வென்று ஊதித் தள்ளியிருப்பார். தேவர் மகனில் இடைவேளை வரை மிகச் சிறந்த நடிகரான கமலை கவனிக்கவே விடாமல் அவரே என் கண்களை ஆக்ரமித்திருந்தார். அந்த அளவுக்கு பெரிய தேவராகவே வாழ்ந்திருப்பார். 


    கமலுக்கு வாய்த்த இயக்குநர்களும், சூழலும் , காலகட்டமும் அவருக்கு வாய்க்கவில்லை. ஒருவேளை வாய்த்திருந்தால் தமிழில் உருவான சர்வதேசக் கலைஞனாக அவர் மலர்ந்திருக்க முடியும். தான் நடித்த பல படங்களின் காட்சிகளை நண்பர்களிடம் வேறொரு பாணியில் வெகு இயல்பாக நடித்துக் காட்டியிருக்கிறார். கமல் சொன்னதுதான் உண்மை 'ஒரு சிங்கத்துக்கு சைவச் சாப்பாடு போட்டுக் கொன்று விட்டோம். தமிழில் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிற எந்த நடிகரும் முதல் படத்திலேயே மக்களின் மனங்களை வென்றவர்களில்லை.

    எம்.ஜி.ஆர், ஜெமினி, ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்று அத்தனை பேருமே மெல்ல மெல்ல வளர்ந்து மக்கள் அபிமானத்தைப் பெற்றவர்கள்தாம். ஆனால் ஒரே விதிவிலக்கு சிவாஜி மட்டும்தான்‌. முதல் படத்திலேயே தமிழகத்தையே தன் வசப்படுத்தியவர் அவர் மட்டும்தான். அவரை பிரான்ஸ்காரன் மிகச்சரியாக அடையாளம் கண்டிருக்கிறான். தேசிய விருது வழங்கும் கமிட்டிக்கு அடையாளம் தெரியவில்லை என்பது மிகப்பெரிய சோகம்.

    அவர் தோற்ற ஒரே இடம் அரசியல்தான். குடும்ப வாழ்க்கை உட்பட மற்ற அனைத்திலும் அவர் வெற்றிகரமான மனிதர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை இழந்த பிறகும் கூட திரையுலகிலும், சமூகத்திலும் அவர் மிகப் பெரிய சக்கர்வர்த்திக்கான தோரணையோடுதான் வலம் வந்தார். அந்த கம்பீரம் குறையவே இல்லை.அதுமாதிரியான மரியாதை இனி ஒருவருக்கு வாய்க்காது.

    என் அம்மா, சித்திகள், என்று எல்லோரும் அவருடைய ரசிகைகள். என் வயதில் இருக்கிற எல்லோருடைய அம்மாக்களின் நினைவிலிருந்து சிவாஜியைப் பிரிப்பது சுலபமில்லை. சிவாஜி வெறுமனே படங்களின் கதாநாயகன் இல்லை. தமிழர்களின் பெருமிதம். ஒரு தலைமுறையின் கலைஞன். அவருடைய புகழ் நிலைத்து நிற்கட்டும்.‌

    -மானசீகன் 

    ×