என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தே பாரத்"

    • புதிதாக அமைய உள்ள இந்த ரெயில் நிலையம் விமான நிலையம் போன்ற அமைப்பில் இருக்கும்.
    • நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் தென்மாவட்டங்களில் அதிக வருவாயை ஈட்டி தரும் ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது. இதனால் இந்த ரெயில் நிலையத்தை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நெல்லை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகளை பார்வையிட தனி ரெயில் மூலமாக நெல்லை வந்த தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ரெயில் நிலையத்தை பார்வையிட்டார். அதனை தரம் உயர்த்துவது குறித்த ஆலோசனைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரெயில் நிலையத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள இந்த ரெயில் நிலையம் விமான நிலையம் போன்ற அமைப்பில் இருக்கும். அதற்கு தேவையான இட வசதிகள் மற்றும் பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டு அரசு நிதி ஒதுக்கிய உடன் நெல்லை ரெயில் நிலையம் சீரமைக்கும் பணி சில வருடங்களுக்குள் முடிக்கப்படும்.

    நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இயக்கப்படும். நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும். நாகர்கோவில்-நெல்லை இரட்டை வழியில் பாதை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1893-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. நாட்டில் உள்ள பழமையான ரெயில் நிலையங்களில் சந்திப்பு ரெயில் நிலையமும் ஒன்றாகும். இங்குள்ள 5 நடைமேடைகளில் தினமும் 48 ஜோடி ரெயில்கள் இந்த வழியாக செல்கிறது.

    கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.80.60 கோடி வருவாய் இருந்த நிலையில், கடந்த ஆண்டு வருவாய் ரூ.111.7 கோடியை எட்டியது. இதனால் சந்திப்பு ரெயில் நிலையத்தின் தரம் என்.எஸ்.ஜி.-2ல் இருந்து என்.எஸ்.ஜி-3க்கு உயர்ந்துள்ளது. இதன்மூலம் இங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. நெல்லையின் அமைவிடம், தற்போதைய சூழல், ரெயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் உயரும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நிலையத்தை வடிவமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான மாதிரி படம் வெளியாகி உள்ள நிலையில், சர்வதேச தரத்திலான விமான நிலையம் போல் படங்கள் காட்சியளிப்பதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இன்னும் 4 மாதங்களில் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு இயக்கப்படும் என்று பொதுமேலாளர் தெரிவித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த ரெயில் இயக்கப்பட்டால் சுமார் 3 மணி நேரம் வரை பயண நேரம் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவனந்தபுரம்- காசர்கோடு வந்தே பாரத் ரெயில் மலப்புரம் மாவட்டத்தில் நிற்பதில்லை
    • பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது

    இந்திய ரெயில்வே விரைவான பயணத்தை கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரெயில் திட்டத்தை தொடங்கியது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும். மேலும், வேகமாக செல்வதாக பயணிகள் நேரம் மிச்சமாகும். குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்வதால் பெரும்பாலான பயணிகள் தங்களது சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு சென்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இப்படி ஒரு நிலை கேரளாவில் உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோட்டிற்கு வந்தே பாரத் ரெயில் சேவை உள்ளது. இந்த ரெயில் பாலக்கோடு மாவட்டத்தின் ஷோர்னுர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். ஆனால், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருர் ரெயில் நிலையத்தில் நிற்காது. இதனால் 56 கி.மீட்டர் பயணம் செய்து ஷோர்னுர் வர வேண்டியுள்ளது.

    இதனால் மலப்புரம் மாவட்டச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், வந்தே பாரத் ரெயிலை திருர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என்று கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என கேரள மாநில உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட், மனோஜ் மிஸ்ரா, நரசிம்மா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட் ''வந்தே பாரத் ரெயில் எங்கு நிற்க வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?. அடுத்ததாக டெல்லி- மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் நாங்கள் நிறுத்தம் குறித்து அட்டவணை வெளியிட வேண்டுமா?. இது கொள்கை அளவில் முடிவு எடுக்கும் விசயம். அதிகாரிகளிடம் செல்லுங்கள்'' என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பரிசீலனை செய்யும்படி அரசை கேட்டுக்காள்ள மனுதாரர் வலியுறுத்தினார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரிப்பதாக பார்த்தால், நான் அதில் தலையிடமாட்டோன் எனத் தெரிவித்தார்.

    மேலும், ''எந்தெந்த இடத்திற்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என்பது ரெயில்வே தீர்மானிக்க வேண்டியது. குறிப்பிட ரெயில் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்க எந்தவொரு தனி மனிதருக்கும் உரிமை கிடையாது'' என கோர்ட் தெரிவித்தது.

    • வந்தே பாரத் ரெயில் பெட்டியின் பேட்டரி பெட்டியில் தீப்பிடித்ததை அடுத்து செய்தியாளர்களுடன் சந்திப்பு.
    • வந்தே பாரத் ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லை.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தீ பாதுகாப்பு குறித்த அச்சத்தை ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி ஞாயிற்றுக்கிழமை நீக்கினார். இந்த அரை-அதிவேக ரெயில்கள் இந்த முன்பக்கத்தில் சிறந்த ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

    இந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ரெயில் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி இந்தூருக்கு வந்தார்.

    கடந்த 17ம் தேதி, மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து புது தில்லி நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரெயில் பெட்டியின் பேட்டரி பெட்டியில் தீப்பிடித்ததை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லை. இந்த ரெயில்களில் தீ தடுப்புக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளும் உள்ளன.

    போபால்- டெல்லி வந்தே பாரத் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து பேட்டரி பெட்டியில் மட்டும் எரிந்தது. நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், தீ பரவுவதற்கு முன்பே அணைக்கப்பட்டது.

    வந்தே பாரத் ரெயில்களின் டிக்கெட் கட்டணம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால், அவற்றில் இருக்கைகள் 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டு ரெயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தானே எம்.பி ராஜன் விச்சாரே கோரிக்கை விடுத்திருந்தார்.
    • சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிஎஸ்எம்டியில் இருந்து ஷீரடி மற்றும் சோலாப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    சிஎஸ்எம்டி- ஷீரடி சாய்நகர் வந்தே பாரத் ரெயில் தானே ஸ்டேஷனுக்கு காலை 6:49 மணிக்கு வந்து இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு புறப்படும். கல்யாண் ஸ்டேஷனுக்கு காலை 7:11 மணிக்கு நின்று, 7:13 மணிக்கு புறப்படும்.

    ஷீரடி சாய்நகர்- சிஎஸ்எம்டி ரெயில் தானே இரவு 10:06க்கு வந்து 10:08க்கு புறப்படும். கல்யாண் நிலையத்தில் இந்த ரெயிலின் வருகை மற்றும் புறப்படும் நேரம் முறையே 9:45 மற்றும் 9:47 ஆகும்.

    சிஎஸ்எம்டி- சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே ரெயில் நிலையத்திற்கு மாலை 4:33க்கு வந்து 4:35 க்கு புறப்படும். கல்யாண் மாலை 4:53க்கு சென்றடையும், 4:55க்கு புறப்படும் என்று மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சோலாப்பூர்- சிஎஸ்எம்டி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே நிலையத்திற்கு காலை 11:50 மணிக்கு வந்து 11:52 மணிக்கு புறப்படும்.

    தானே மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த அரை-அதிவேக ரெயில்களில் ஏற தாதர் அல்லது சிஎஸ்எம்டிக்கு செல்ல வேண்டியிருப்பதால், இரண்டு ரெயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தானே எம்.பி ராஜன் விச்சாரே கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • ரெயிலின் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோரக்பூர்:

    கோரக்பூரில் இருந்து லக்னோவுக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. உத்தரபிரதேச மாநிலம் பரபாங்கி சாதாபாத் ரெயில் நிலையம் அருகே சென்ற போது திடீரெனெ ரெயில் மீது கற்கள் வீசப்பட்டது. இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த கல்வீச்சில் ஈடுபட்டது யார்?என்று தெரியவில்லை.

    இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.
    • புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

    புதுச்சேரிக்கு ரெயில் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புதுவை ரெயில்நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி ரெயில்நிலையம் அழகுற மேம்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.

    இந்த பட்டியலில் தற்போது புதுவையும் இடம்பெற்றுள்ளது. புதுவையிலிருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவை திருப்பதி இடையிலான 340 கிமீ தூரத்துக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும். இந்த ரெயில் புதுவை, விழுப்புரம் சந்திப்பு, மதுராந்தகம், சென்னை சென்ட்ரல், அரக்கோணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

    புதுவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில்சேவை வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

    • சென்னை- அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயிலில் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன.

    சென்னை:

    சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் சில நகரங்களுக்கு ரெயிலில் பயணம் நேரம் குறைகிறது. அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே உள்ள 144 கி.மீ. தூரத்தை 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே அனுமதித்து உள்ளதால் வரும் நாட்களில் பயண நேரம் குறைந்தது 20 நிமிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

    அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே தண்டவாளம் மற்றும் சிக்னல் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை- அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பெங்களூர் செல்லும் ரெயில்களின் பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். இப்போது வந்தே பாரத் ரெயிலில் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன.

    இது 4 மணி நேரமாக குறையும். சதாப்பதி அல்லது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேரம் தற்போதுள்ள 6 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் 30 நிமிடங்களாக குறையும். அரக்கோணம்-ஜோலார்பேட்டை இடையே பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் 130 கி.மீ. வேகத்தில் 124 ரெயில்களை இயக்க அனுமதி அளித்து உள்ளது.

    இதுபற்றி ரெயில் இயக்குனரகம் என்ஜின் டிரைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    எல்.எச்.பி. பெட்டிகள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயங்கும் அதே வேளையில் ஐ.சி.எப். வடிவமைப்பு பெட்டிகள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடியவை. பல ரெயில்களில் எல்.எச்.பி. பெட்டிகள் இருப்பதால் பெங்களூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், மும்பை மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம் குறைக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளதால் படிப்படியாக ஒவ்வொரு ரெயில்களையும் அதிவேகத்தில் இயக்க முடிவு செய்யப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

    பெங்களூர் மற்றும் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயில்கள் சென்னை மற்றும் அரக்கோணம் இடையே 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாகவும் தற்போது மேம்படுத்தப்பட்ட பாதையை ஜோலார்பேட்டை வரை நீட்டிப்பதன் மூலம் மற்ற ரெயில்களும் சிறந்த வேகத்தில் இயக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்தது.
    • ரெயில்கள் மீது கல் வீசிய 3 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்தது. இந்த மாதத்தில் வந்தே பாரத், ஏர்நாடு எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ், நேத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவங்கள் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிந்து கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர்.

    வந்தே பாரத் ரெயில் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவத்தில் அந்த ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் மாஹே ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரெயில்கள் மீது கல்வீசிய சைதீஸ், சாதிக் அலி(30), மொய்து(53) ஆகிய 3 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    • நடப்பு நிதியாண்டில் 108.23 சதவீத பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
    • தகவல் மற்றும் வணிகர்களால் இந்த ெரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    கோவை - சென்னை இடையே செல்லும் வந்தே பாரத் ெரயில் சேவை, பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு ஜவுளி மற்றும் தொழில்துறையை சேர்ந்தவர்கள், தகவல் மற்றும் வணிகர்களால் இந்த ெரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.ெ

    ரயில் எண் (20643) சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்சில் நடப்பு நிதியாண்டில் 108.23 சதவீத பயணிகள் பயணம் செய்துள்ளனர்.ெரயில் எண் (20644) கோவை - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்சில் நடப்பு நிதியாண்டில் 104.60 சதவீத பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    • காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
    • இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் அய்யானாபுரம் நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் செயலாளர் வக்கீல் வெ.ஜீவக்குமார் விளக்க உரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில், தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே அனுமதிக்கப்பட்டுள்ள, இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்-அரியலூர் புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    நவக்கிரக தலங்கள், சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சென்னையை போல், தஞ்சாவூர் ரெயில் நிலையங்களில் முதியோர்களை அழைத்துச் செல்லும் பேட்டரி காருக்கான கட்டணத்தை ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைக்க வேண்டும்.

    விரைவு ரெயில் என்ற பெயரில் கட்டணங்களை உயர்த்தியுள்ள ரயில்வே நிர்வாகம், கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது போல் பயணிகள் ரெயில் என்ற பெயரில் இயக்கி உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தரமாக நடைபெற ெரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    நடைபெறும் வேலைகள் குறித்து அறிவிப்பு பலகையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சங்க நிர்வாகிகள் கண்ணன், பேராசிரியர் திருமேனி, வக்கீல்கள் உமர்முக்தர், பைசல் அகமது, உழவர் செல்ல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐ.சி.எப். உருவாக்கியது.
    • மின்சாரம், கேஸ். தண்ணீர் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனத்திற்கு இலவசமாக வழங்க எதிர்ப்பு.

    வந்தே பாரத் ரெயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது, படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ரெயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

    தற்போது ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐ.சி.எப். உருவாக்கிய நிலையில், புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்?

    மின்சாரம், கேஸ். தண்ணீர் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஐ.சி.எப் இலவசமாக வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதற்கும் கண்டனம் தெரிவித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வந்தே பாரத் சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.
    • திருநெல்வேலியில் இருந்து அதே நாளில் புறப்பட்டு எழும்பூர் வந்து சேரும்.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தொடங்கப்பட்டது முதல் இதுவரையில் பயணிகள் முழு அளவில் பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை குறைப்பதற்காக வந்தே பாரத் சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து 5 நாட்கள் இயக்கப்பட்டன.

    சிறப்பு ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பின. பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வரும் நிலையில் தற்போது சபரிமலை சிறப்பு ரெயிலாகவும் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது.

    சபரிமலை பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வசதியாக வந்தே பாரத் சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சபரிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி செல்வது வழக்கம். திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் வகையில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயில் வியாழக்கிழமை தோறும் எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு பகல் 2.15 மணிக்கு சென்றடையும். பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

    வந்தே பாரத் சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும். திருநெல்வேலியில் இருந்து அதே நாளில் புறப்பட்டு எழும்பூர் வந்து சேரும்.

    இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் தெரிவித்து உள்ளார்.

    ×