search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 275948"

    • ரெயில்வே கேட் மூடப்படும்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
    • காவல் துறை சார்பில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி யில் பாளை குலவணிகர்புரம் பகுதி போக்குவரத்து நிறைந்ததாக காணப்படுகிறது.

    அணிவகுக்கும் வாகனங்கள்

    இதன் வழியாக செல்லும் ரெயில்வே பாதை வழியாக நெல்லை- திருச்செந்தூர் ரெயில்கள் சென்று வருகிறது. தினமும் ஒவ்வொரு முறை ரெயில் செல்லும் போதும் இங்குள்ள ரெயில்வே கேட் மூடப்படும். அப்போது வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    ரெயில்வே கேட் முதல் பாளை பஸ் நிலையம் வரையிலும், மறுபுறம் புதிய பஸ் நிலையம் வரையிலும், அதே போல் பாளை மத்திய சிறை யில் இருந்து எதிர்புறம் செல்லும் சாலையிலும் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரு கிறது.

    இதைத்தொடர்ந்து குலவணிகர்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நட வடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் நெல்லை மாநகர காவல் துறை சார்பில் போக்கு வரத்து நெருக்கடியை குறைக்க அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாளை மத்திய சிறையில் இருந்து மேலப்பாளையம் செல்ல சாலை உள்ளது. ரெயில்வேகேட் மூடி திறக்கப்படும் போது வலது புறம் வாகனங்கள் செல்வ தால் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வந்தது.

    இதனை தவிர்க்க ரெயில்வே கேட்டில் இருந்து வலது புறம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் தடுப்புகளை கொண்டு போலீசார் அடைத்துள்ள னர். இதனால் பாளை பஸ் நிலையத்தில் இருந்து இந்த சாலைக்கு செல்லும் வாகனங்கள் சிறை கைதிகள் பல்க் வரை சென்று பின்பு அங்கிருந்து திரும்பி மேலப்பாளையம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    • மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.
    • அத்தியாவசிய பொருட்களை மட்டும் வைத்துவிட்டு வெளிப்புறத்தில் தடுப்புகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் கடலோர பகுதியிலிருந்து மீனவ குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அருகிலேயே சுனாமி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு அரசின் சார்பாக 725 சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

    இந்த வீடுகள் கட்டப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உட்புற மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.

    மேலும் அவ்வப்பொழுது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் அச்சமடைந்த மீனவர்கள் வீட்டின் உள்ளே அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வைத்துவிட்டு வெளிப்புறத்திலேயே தடுப்புகள் அமைத்து தனியாக வசித்து வருகின்றனர்.

    தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சிதிலமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டுமென மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.
    • சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்–கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டு–வரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது.

    இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது. இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர்.

    இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.

    மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.

    இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது.

    இதனால் நகர் பகுதி முழுவதும் சாலைகள் சவுடு நிறைந்து இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி நேரங்களில் கூட இந்த லாரிகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்படுகிறது.

    நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணில் சறுக்கி விழுந்து அடுத்தடுத்து விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.

    எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×