search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி தோட்டம்"

    • வீடுதோறும் காய்கறி தோட்டங்கள் அமைக்க மாணவர்கள் முன்வர வேண்டும்
    • வருங்காலத்தில் மேலும் மாணவர்கள் இதில் ஈடுபட இத்திட்டம் ஊக்கமாக அமையும்.

    திருத்துறைப்பூண்டி

    திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான வளர் இளம்பருவ மாணவ- மாணவிகளுக்கான வீட்டு காய்கறி தோட்டம் அமைக்கும் போட்டியில் சிறப்பாக காய்கறி தோட்டம் அமைத்த பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்:-

    மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். பாரம்பரிய அரிசி, தானியங்கள், இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை சமையலுக்கு உபயோகிக்க வேண்டும்.

    வீடுதோறும் காய்கறி தோட்டங்கள் அமைக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.பின்னர், வட்டார திட்ட அலுவலர் அபிநயா பங்கேற்று பேசுகையில்:-

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இயற்கை காய்கறி தோட்டம் அமைத்து பராமரிப்பது நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிறப்பாக காய்கறி தோட்டம் அமைத்த 5 மாணவர்களை தேர்வு செய்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வருங்காலத்தில் மேலும் மாணவர்கள் இதில் ஈடுபட இத்திட்டம் ஊக்கமாக அமையும் என்றார்.

    நிகழ்ச்சியில் மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், வட்டார மேற்பார்வை யாளர்கள் கமலா, ரேணுகா, சந்திரா, ஊட்டசத்து ஒருங்கிணை ப்பாளர் ராஜவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வானில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
    • மலைப் பயிா்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு உள்ளனர்.

    ஊட்டி:

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. அதன்பிறகு வானில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இது சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது.

    ஊட்டியில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் அவதிக்கு உள்ளாகினர்.

    கோத்தகிரி, குந்தா, கெத்தை, பாலகொலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக ஓடை வாய்க்கால்களில் வெள்ளம் கரைபுரண்டது. அப்போது அங்கு திடீர் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மழை வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது. அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சிஅளிக்கிறது.

    ஊட்டி, கோத்தகிரி, குந்தா, கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்ட மலைப் பயிா்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு உள்ளனர். அங்கு உள்ள விளைநிலங்களை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து வந்த நகராட்சி, ஊராட்சி ஊழியா்கள், நீர்வரத்து கால்வாய் ஓடையில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி தூா்வாரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • 4 ஆயிரத்து 800 எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அன்றாடம் தங்களுக்கு தேவையான காய்கறிகள், கீரைகள் மற்றும் மூலிகை செடிகளை தங்கள் வீடுகளில் இடவசதிக்கேற்ப உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் இந்த திட்–டம் செயல்படுத்தப்படுகிறது

    இந்த திட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 250 எண்ணிக்கையில் மாடித்தோட்டம், ஊரக பகுதிகளில் 2,500 எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்புகள், 4 ஆயிரத்து 500 எண்ணிக்கையில் ஊட்டச்சத்து விதை தொகுப்புகள் என ரூ.20 லட்சத்து 13 ஆயிரம் மானியத்தில் 10 ஆயிரத்து 250 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு திட்டத்தில் 4 ஆயிரத்து 800 எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 எண்ணிக்கையில் மூலிகை தோட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அறிந்து கொள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • காய்கறி தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது.
    • அரசு பள்ளியில் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, எலவனுாரில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், வட்டார தோட்டக் கலை துறை சார்பில் காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை வகித்தார். எலவனூர் பஞ்சாயத்து தலைவர் இந்துமதி, காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஷாகுல் சிம்ரான் அலி, தோட்டக்கலை அலுவலர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×