search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அம்ரித் தகவல்"

    • பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டுள்ளது
    • இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும்.

    நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டரும், வடகிழக்கு பருவமழை சராசரியாக 300 மில்லி மீட்டரும், கோடை மழை 230 மில்லி மீட்டரும் பதிவாகும். ஆனால், வழக்கத்தை விட கடந்தாண்டு 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.

    இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில், மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய், உள்ளாட்சி, காவல், தீய ணைப்பு, நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணி, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் உள்ளிட்ட துறை களைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளன.

    அனைத்து வட்டங்க ளிலும் 3500 முதல் நிலை மீட்பாளர்கள், 150 பேரிடர் கால நண்பர்களுக்கு பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்ட ணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    அதன்படி, உதகை கோட்டம் - 0423-2445577, குன்னூர் கோட்டம் - 0423-2206002, கூடலூர் கோட்டம் - 04262-261295, உதகை வட்டம் - 0423-2442433, குன்னூர் வட்டம் - 0423-2206102, கோத்தகிரி வட்டம் - 04266-271718, குந்தா வட்டம் - 0423-2508123, கூடலூர் வட்டம் - 04262-261252, பந்தலூர் வட்டம் - 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு பெறப்படும் தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.தென்மே ற்கு பருவமழையை எதிர்கொ ள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
    • 152 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பில் மானி–யத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதி திராவி–டர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வங்கிகடன் மற்றும் மானியத்துடன் கூடிய வாகனங்களை பெற்றுக் கொண்டு பயன்பெற்று வரும் பயனாளிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதி–திராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (கிளினிக்),

    மகளிர் சுய உதவிக்கு–ழுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவிக்கு ழுக்களுக்கான ொருளாதார கடன் உதவித் திட்டம், நிலம் மேம்படுத்துதல் (இருபா லருக்கும்), துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுது வோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு தொழில் துவங்குவதற்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர், செலவு கணக்கர், நிறுவுன செயலருக்கு நிதியுதவி என ஆதிதிராவிடர்களுக்காக பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் 7. 5.2021 முதல் 31.12.2022 வரை தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 96 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.79.96 லட்சம் மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் (கிளினிக்) 1 பயனாளிக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலும், மகளிர் உதவிக்குழுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவித் திட்டத்தின் கீழ் 8 பய–னாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 152 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பில் மானி–யத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்திட்டங்க ளின் மூலம் பயன்பெற விரும்பு–வோர்கள் குடும்ப அட்டை, சாதிசான்று, வருமான சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்றிதழ், கொட்டேஷன் (ஜி.எஸ்.டி.எண்) உடன் திட்ட அறிக்கை ஆகியவற்றி னையும், வாகன கடனுக்காக விண்ணப்பிப்பவர்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும்

    பேட்ஜ் ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து http:application.tahdco.com என்றஇணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி தர்மராஜ் தெரிவித்ததாவது:

    நான் ஊட்டி டேவிஸ்டேல் பகுதியில் வசித்து வருகி–றேன். நான் விவசாயம் தொழில் செய்து வருகி–றேன். நான் தனி நபர் ஒருவரிடம் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் சொந்தமாக ஒரு லோடு வாகனம் வாங்க முடிவு செய்தேன்.

    இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது தாட்கேர் மூலம் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் வாகன கடனுக்காக விண்ணப்பிக்க லாம் என்பது குறித்து தெரிந்து கொண்டு, விண்ணப்பித்து, சொந்த முதலீடாக ரூ.10,248 செலுத்தினேன். இதனுடன் வங்கிகடன் ரூ.6.19 லட்சம், தாட்கோ மானியம் ரூ.2.25 லட்சம் என மொத்தம் ரூ.8.54 லட்சம் மதிப்பில் லோடு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தை கொண்டு எனது தோட்டத்தில் பயிரிடப்படும் காய்கறிகளை எடுத்து செல்லவும், வெளி வாடகைக்கு செல்வதால் எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள மிகவும் பயனுள்ள தாக இருக்கும். இதுபோன்ற திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வரும்

    முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சி–யின் போது தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

    • தாவணெ முதல் மல்லிகொரை வரை சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • விவசாயிகளுக்கு அனுபோக சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடநாடு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடநாடு ஊராட்சி மக்கள் அடிப்படை வசதிகளான சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கை வைத்து உள்ளனர். கள ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஊராட்சியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    தாவணெ முதல் மல்லிகொரை வரை சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஒவ்வொரு துறை அலுவலர்களும், உள்ளாட்சித்துறை அலுவலர்களும் அரசு திட்டங்களை பொதுமக்கள் இடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும். விவசாயிகள் திட்டங்களை அரசு அறிவிக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு அனுபோக சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 3 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.மேலும் 16 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

    இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவகுமார்,கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடநாடு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடநாடு ஊராட்சி மக்கள் அடிப்படை வசதிகளான சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கை வைத்து உள்ளனர். கள ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஊராட்சியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    தாவணெ முதல் மல்லிகொரை வரை சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஒவ்வொரு துறை அலுவலர்களும், உள்ளாட்சித்துறை அலுவலர்களும் அரசு திட்டங்களை பொதுமக்கள் இடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும். விவசாயிகள் திட்டங்களை அரசு அறிவிக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு அனுபோக சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 3 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.மேலும் 16 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

    இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவகுமார்,கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×