search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 280556"

    • தொடர்ந்து கோபூஜை, கஜ பூஜை, அஸ்வதை பூஜை செய்து வழிபட்டார்.
    • விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுஷ் ஹோமம், மணிவிழா, யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

    இக்கோவிலில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோபூஜை, கஜ பூஜை, அஸ்வதை பூஜை செய்து வழிபட்டார்.

    பின்னர் விநாயகர், அமிர்தக டேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இதில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.

    விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், வார்டு உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • ஸ்ரீலஸ்ரீ மூர்த்தி லிங்க தம்புரான் சாமிகள் அறக்கட்டளை மூலமாக கோபூஜை செய்து கோயில் பணிகளை தொடர ஆசி வழங்கினார்.
    • துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கொற்கைகிராமம் சேவியக்காடு பகுதியில் அமைய உள்ள தீர்த்த புரீஸ்வரர் திருக்கோயிலில் இடம் தேர்வு செய்வது முன்னிட்டு கோயம்புத்துார் ஸ்ரீலஸ்ரீ மூர்த்தி லிங்க தம்புரான் சாமிகள் தேசிங்கு ராஜபுரம் வந்து ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மூலமாக கோபூஜை செய்து கோயில் பணிகளை தொடர ஆசி வழங்கினார்.

    ராமதேவர் சித்தர் அறக்கட்டளையை சேர்ந்த சென்னை வெற்றிவேல் குமரன், முனைவர் ரவிச்சந்திரன். முனைவர் நா.துரைராயப்பன், சிட்டிபாபு, மடப்புரம் என்.எஸ்.எஸ்.சுப்பையன், வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, சென்னை அனிதா குமரன், கவிதா ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அறநிலைய துறை செயல் அலுவலர்விமலா சந்திரன் கலந்து கொண்டார்.

    ×