search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demonstration by BJP பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்"

    • வீடுகளுக்கு குடிநீா் வினியோகம் செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    ஊட்டி

    கூடலூா் நகரசபையை கண்டித்து பா.ஜ.க. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் ரவிகுமாா் தலைமை தாங்கினார்.

    மாநில விவசாய அணி செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சவுந்திரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறிய தாவது:-

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை தூய்மைப் பணியாளா்களின் வங்கிக் கணக்கில் ஊதியமாக செலுத்த வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் குடிநீா், நடைபாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    மேலும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்களை அமைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் வீடுகளுக்கு குடிநீா் வினியோகம் செய்ய வேண்டும்.

    வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மங்குழி ஆற்றின் பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும். கூடலூா் பஸ் நிலையம் கட்டும் பணி தொய்வடைந்துள்ளது. விரைந்து கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் அணி மாவட்டச் செயலாளா் பாா்த்திபன், பொதுச் செயலாளா் நளினி, நிா்வாகிகள் ராதாகிரு ஷ்ணன், சிபி, ராமு, வக்கீல் அணி நிா்வாகி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆவின் கூட்டுறவு நிறுவனம். தமிழக அரசு அதை அழிக்கப் பார்க்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே பா.ஜ.க சார்பில் தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய தலைவர் அருண் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

    அப்போது தனியார் பால் பண்ணைகளுக்கு ஆதரவாக ஆவின் பாலை விற்கும் சூழலை தமிழக உருவாக்கி உள்ளது. ஆவின் கூட்டுறவு நிறுவனம். தமிழக அரசு அதை அழிக்கப் பார்க்கிறது. பரமத்தி ஒன்றியத்தில் கனிமக் கொள்ளை கோடிக்கணக்கில் நடக்கிறது. வீதிமீறல்களில் ஈடுபடும் கல்குவாரிகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கமிசன், கரப்சன் என கொள்ளையடிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. தமிழக அரசு சட்ட விரோதமாக மது விற்பனை நடத்தி வருகிறது என பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வக்கீல் காந்தி, பிரச்சார பிரிவைச் சேர்ந்த மூர்த்தி, ஊடகப்பிரிவு தலைவர் சுகந்தரன், கூட்டுறவு பிரிவு சண்முகம், தொழிற்பிரிவு லட்சுமணன், மாவட்ட நிர்வாகிகள் சுஜாதா செல்வி, காந்தி, தனலெட்சுமி, கணேசன், செல்லப்பா ஆனந்த், கமல், ஒன்றிய நிர்வாகிகள் கண்ணன், அன்னப்பூர்ணா உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, ஒன்றிய, நகர, அணிப்பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    அதேபோல் பாண்டமங்கலத்தில் கடைவீதிக்கு செல்லும் சாலையில் மாவட்ட துணைத் தலைவர் பழனியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய ,பேரூர், கிளை பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

    ×