search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடமான் பலி"

    • வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திவிடாமல் காக்க விவசாயிகள் சிறு குடில் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடந்த 2015 ஆம் ஆண்டு இப்பகுதியில் சிறுத்தை நடமாடியது உறுதி செய்யப்பட்டது.

    கம்பம்:

    கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு செல்லும் சாலையில், மலையடிவாரப் பகுதியில் மானாவாரி விவசாய பயிர்களான நிலக்கடலை, மொச்சை, எள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திவிடாமல் காக்க விவசாயிகள் சிறு குடில் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் காவலுக்காக வைக்கப்பட்ட நாய்கள் காணாமல் போனது. தொடர்ந்து இன்று காலை கம்பம்மெட்டு மலைப்பாதை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கடமான் ஒன்றை சிறுத்தை வேட்டையாடி இறைச்சியை கடித்து குதறி தின்று விட்டு தப்பி ஓடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம் மேற்கு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது செந்நாய் அதிகமாக இப்பகுதியில் காணப்படுவதாகவும், மானை செந்நாய் வேட்டையாடிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    அதே சமயம் மழை பெய்து வருவதால் செடி கொடிகள் அதிகமாக இருந்ததாலும் வனவிலங்குகளின் கால் தடங்களை உறுதி செய்ய முடியவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு இப்பகுதியில் சிறுத்தை நடமாடியது உறுதி செய்யப்பட்டது. அப்போது நாய்கள், வனவிலங்குகளை சிறுத்தை வேட்டையாடியதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே விவசாயிகள் மத்தியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த வதந்தி பரவியதால் தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். மான் எவ்வாறு இறந்தது? சிறுத்தை வேட்டையாடியதால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாய்கள் விரட்டியதால் மிரண்டு ஓடி வந்த கடமான் மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மின் வேலி அமைத்த தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் அருகே உள்ள செம்பிரான்குளம் தனியார் எஸ்டேட்டில் அமைக்கப்பட்டு இருந்த சூரிய மின் வேலியில் சிக்கி 3 வயது மதிக்கத்தக்க ஆண் கடமான் பலியானது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பெரும்பள்ளம் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து போன கடமானை அதே இடத்திலேயே உடற்கூராய்வு செய்தனர்.

    பின்னர் வனப்பகுதியில் அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நாய்கள் விரட்டியதால் மிரண்டு ஓடி வந்த கடமான் மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே மின் வேலி அமைத்த தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

    ×