search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024"

    • சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.
    • சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர்.

    சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • சிஎஸ்கே 11 போட்டியில் 6 வெற்றியுடன் 4-வது இடத்தில் உள்ளது.
    • குஜராத் 11 போட்டியில் 4 வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 59-வது லீக் ஆட்டம் குஜராத் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். "இது நல்ல விக்கெட்டாக தெரிகிறது. சேஸிங் மைதானம். அதனால் நாங்கள் சேஸிங்கை எதிர்பார்க்கிறோம்" என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி:-

    சுப்மன் கில், சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், மேத்யூ வேட், ராகுல் டெவாட்டியா, நூர் அகமது, உமேஷ் யாதவ், மோகித் சர்மா, கார்த்திக் தியாகி, ரஷித் கான்.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்: அபிநவ் மனோகர், சந்தீப் வாரியர், பிஆர் சரத், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்:-

    ருதராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ஜடேஜா, டோனி, சான்ட்னெர், ஷர்துல் தாகூர், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்: ரகானே, சாய்க் ரஷீத், அவானிஷ், சமீர் ரிஸ்வி, முகேஷ் சவுத்ரி

    • ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி மோசமான தோல்வியை தழுவியது.
    • அந்த போட்டி முடிந்த பிறகு கேஎல் ராகுலை லக்னோ அணியின் உரிமையாளர் கடுமையாக சாடினார்.

    ஐபிஎல் தொடரின் 57-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது. 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இதனையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வந்தன.

    இந்நிலையில் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் கடைசி 2 போட்டிகளில் கேஎல் ராகுல் தான் கேப்டனாக செயல்படுவார் என்று லக்னோ அணியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லக்னோ அணி அடுத்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக வருகிற 14-ந் தேதி மோதுகிறது. அதற்கு அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. அந்த போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது.
    • அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிம் ஒப்படைத்து, அவரை வழிநடத்தி வருவதுடன் பேட்டிங்கில் இறுதிக் கட்டத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.

    கடைசி ஓவர் அல்லது அதற்கு முந்தைய ஓவரில் களம் இறங்குகிறார். அவர் களம் இறங்கினால் சிக்ஸ் நிச்சயம் என்ற அளவிற்கு சந்திக்கும் பந்துகளை பவுண்டரி லைனுக்கு வெளியே பறக்க விடுகிறார். இதனால் அவர் முன்னதாக ஏன் களம் இறக்கப்படுவதில்லை? என்ற விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. அவர் முன்னதாக களம் இறங்கினால் உடனே அவுட்டாகிவிடுவார் என்ற எதிர் விமர்சனமும் வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் எம்.எஸ். டோனி ஏன் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வருகிறார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக பிளமிங்க் கூறியதாவது:-

    டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது. அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம். அதனால்தான், போட்டியில் 2-4 ஓவர்கள் பேட்டிங் மற்றும் முழுவதுமாக கீப்பிங் செய்து புதிய கேப்டனுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். அதைத் தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

    டோனிக்கு மாற்றாக வேறொரு கீப்பர் அணியில் உள்ளார். ஆனால் அவர் டோனி ஆகிவிட முடியாது. 9-வது இடத்தில் டோனி களமிறங்குகிறார் என்பதாலேயே அவரால் போட்டியில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என நினைத்து விடாதீர்கள்.

    இவ்வாறு பிளமிங் தெரிவித்துள்ளார்.

    • குஜராத் அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    • சென்னை அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது.

    குஜராத் அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. குஜராத் அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும். எனவே இந்த ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோல்வி அடைந்தால் அந்த அணியின் அடுத்த சுற்று கனவு கலைந்து போகும். அந்த அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக (டெல்லி, பெங்களூருவுக்கு எதிராக 2 முறை) தோல்வியை சந்தித்துள்ளது.

    குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (2 அரைசதம் உள்பட 424 ரன்) நல்ல பார்மில் இருக்கிறார். கேப்டன் சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, விருத்திமான் சஹா ஆகியோர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் மொகித் ஷர்மா, நூர் அகமது, ரஷித் கான், கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் அள்ளிய ஜோஷ் லிட்டில் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    சென்னை அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள தனது 3 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்தால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடலாம். 2-ல் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியது வரும். சென்னை அணி தனது முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்த கையோடு களம் இறங்குகிறது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 541 ரன்கள்) அபாரமாக செயல்பட்டு வருகிறார். அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே (350 ரன்) கடந்த 2 ஆட்டங்களில் சோபிக்காதது பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது. மேலும் ரஹானே, டேரில் மிட்செல் கணிசமான பங்களிக்க வேண்டியது முக்கியமானதாகும். சர்வதேச போட்டிக்காக முஸ்தாபிஜூர் ரகுமானும், காயம் காரணமாக பதிரானாவும் விலகி இருப்பது பந்து வீச்சை பலவீனப்படுத்தி இருக்கிறது. மேலும் தசைப்பிடிப்பால் தீபக் சாஹர் ஆட முடியாததும் பின்னடைவாகும். இருப்பினும் கடந்த ஆட்டத்தில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சிமர்ஜீத் சிங், மிட்செல் சான்ட்னெர், ஷர்துல் தாக்குர் கச்சிதமாக பந்து வீசி கலக்கினர்.

    குஜராத்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் கால் பதிக்கும் சென்னை அணியின் சவாலை, அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் குஜராத்தால் சமாளிக்க முடியும். அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த சென்னை அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க குஜராத் அணியும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 3 முறையும், குஜராத் 3 தடவையும் வென்று சமநிலை வகிக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத்: விருத்திமான் சஹா, சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், மொகித் ஷர்மா, நூர் அகமது, ஜோஷ் லிட்டில் அல்லது அஸ்மத்துலா ஒமர்ஜாய், சாய் கிஷோர் அல்லது சந்தீப் வாரியர்.

    சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னெர், ஷர்துல் தாக்குர், டோனி, துஷர் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் அல்லது ரிச்சர்ட் கிளீசன்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ரிலீ ரோசோவ் 61 ரன்கள் குவித்து அவுட் ஆகினார்.
    • ஆர்சிபி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி விராட் கோலி, பட்டிதாரின் அதிரடி அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரிலீ ரோசோவ் - ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ரிலீ ரோசோவ் 61 ரன்கள் குவித்து அவுட் ஆகினார். அடுத்த சிறிது நேரத்தில் ஷஷாங்க் சிங் 37 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் ஜிதேஷ் சர்மா 5, லிவிங்ஸ்டன் 0, சாம் கரன் 22, அசுதோஷ் சர்மா 8, ஹர்சல் படேல் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் பஞ்சாப் அணி 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பிளே ஆப் சுற்றில் இருந்து 2 -வது அணியாக பஞ்சாப் அணி வெளியேறியது.

    • பெங்களூரு அணி தரப்பில் விராட் கோலி 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 12 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து விராட் கோலியுடன் பட்டிதார் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பட்டிதார் 21 பந்தில் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த கையோடு 55 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 பந்தில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து இறுதியில் க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இன்று (மே 9) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டு பிளெசிஸ் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர். பாப் டு பிளெசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

    இன்றைய போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலி, 47 பந்துகளை எதிர்கொண்டு 92 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி ஆறாவது அரைசதம் விளாசியுள்ளார். நடப்பு தொடரில் அதிக ரன்களை விளாசிய விராட் கோலி ஆரஞ்சு தொப்பி தக்க வைத்துள்ளார். 

    • இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். தொடரின் இன்று தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    பஞ்சாப் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    • மும்பை அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
    • இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை தான் என்று அணி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் மும்பை அணிக்கு ஒரு மோசமான சீசனாக அமைந்துள்ளது. மும்பை அணி விளையாடிய 12 போட்டிகளில் 8 தோல்வி, 4 வெற்றி உட்பட 8 புள்ளிகளுடன் இத்தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணி இதுவாகும்.

    10 ஆண்டுகளுக்கு பின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் களமிறங்கிய மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் ஏராளமானோர் இருந்த போதும், அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

    இந்நிலையில் மும்பை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் தோல்வி குறித்து தங்களது கருத்தை பயிற்சியாளரிடமும், அணியின் நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    தோல்வியின் போது ஒரு வீரரின் மேல் பழியை போடுவதும் மும்பை வீரர்களால் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற எனர்ஜி இல்லை. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி ஸ்டைலே காரணம் என்று கூறியுள்ளனர்.

    இதற்கு மும்பை அணி நிர்வாகிகள், அணி 10 ஆண்டுகளாக ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வந்துள்ளது. அதனால் வழக்கமாக தலைமை மாற்றத்தின் போது வரும் சவால் தான் மும்பை அணிக்கும் வந்துள்ளது. இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை தான் என்று கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது.
    • சஞ்சீவ் கோயங்கோ செய்தது சரியான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் வெளியேறியது.

    இந்நிலையில், ஐதராபாத் அணியுடனான தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டனான கே.எல்.ராகுலிடம் கடிந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வீடியோவை பார்த்த பயனர்கள், டிரெஸிங் அறையில் நடக்க வேண்டிய விவாதங்கள் பொதுவெளியில் நடக்கிறது. சஞ்சீவ் கோயங்கோ செய்தது சரியான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பவர்பிளேயில் 2-வது முறையாக ஐதராபாத் அணி 100 ரன்கள் குவித்துள்ளது.
    • இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சில சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக கேஎல் ராகுல் டி20 போட்டிகளில் 7500 ரன்கள் குவித்துள்ளார். அபிஷேக் சர்மா இன்று தனது 100-வது டி20 போட்டியில் விளையாடினார்.

    அதோடு, குறைந்த பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக இந்த சீசன் புதிய சாதனை படைத்துள்ளது. 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுகளில் 16,269 பந்துகளிலும், 2023 ஆம் ஆண்டுகளில் 15,390 பந்துகளிளும் 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2022-ம் ஆண்டு 1062 சிக்சர்களும், 2023-ம் ஆண்டு 1124 சிக்சர்களும் அடிக்கப்பட்டுள்ளது.

    இந்த அதிரடியாக விளையாடிய ஹெட் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேக அரைசதம் விளாசி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். மேலும், இந்த சீசனில் 2-வது முறையாக 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு முறை 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

    பவர்பிளேயில் 2-வது முறையாக ஐதராபாத் அணி 100 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 107/0 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×