search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024"

    • மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 4 மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.
    • நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 4 மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு இன்னும் 2 போட்டிகளே உள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பில்லை.

    • அபிஷேக் சர்மா 75 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 89 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • இறுதியில் ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 66 ரன்னில் 4 விக்கெட்டை திணறிய லக்னோ அணிக்கு பதோனி மற்றும் பூரன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். பதோனி 55 ரன்களிலும் பூரன் 48 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது.

    இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ருத்ரதாண்டவம் ஆடிய டிராவிஸ் ஹெட் 16 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மா அரை சதம் அடித்தார்.

    அபிஷேக் சர்மா 75 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 89 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார்.
    • ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல்- டி காக் களமிறங்கினர். 2 ரன்னில் டி காக் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 3 ரன்னில் வெளியேறினார். 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் கேஎல் ராகுலுடன் குர்ணால் பாண்ட்யா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.

    குர்ணால் பாண்ட்யா 24 ரன்கள் எடுத்திருந்த போது 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். டெஸ்ட் போட்டி போல விளையாடிய கேஎல் ராகுல் 33 பந்துகளில் 29 பந்துகளில் வெளியேறினார்.

    இதனையடுத்து பதோனி மற்றும் பூரன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். பதோனி 55 ரன்களிலும் பூரன் 48 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது.

    இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டெக்னாலஜியை பயன்படுத்தி தவறு செய்யும் போது, ஏன் டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும்.
    • டெக்னாலஜியை பயன்படுத்துவதை ஸ்டாப் பண்ண வேண்டும்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு நடுவர்கள் கொடுத்த தவறான முடிவால் தான் ராஜஸ்தான் அணி தோல்வி தழுவியது என ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அவுட் கிடையாது. நடுவர்கள் தவறான முடிவு எடுத்துள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேட்ச் பிடிக்கும் போது பீல்டர் பவுண்டரி லைனை 2 முறை தொட்டுவிட்டார். ரிப்ளேவில் சில வினாடிகள் மட்டுமே பார்த்துவிட்டு மூன்றாவது நடுவர் முடிவை எடுத்துவிட்டார். பல கோணங்களில் பீல்டரின் கால் பவுண்டரி ரோப்பை தொட்டதா இல்லையா என்பதை தெளிவாக பார்த்திருக்க வேண்டும்.

    டெக்னாலஜியை பயன்படுத்தி தவறு செய்யும் போது, ஏன் டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும். டெக்னாலஜியை பயன்படுத்துவதை ஸ்டாப் பண்ண வேண்டும். 

    • இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

    லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் ஐதராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய ஆட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.
    • இதில் 8 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.

    இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் குறைந்த ஐபிஎல் போட்டியில் 200 சிக்சர்களை விளாசி இந்திய வீரர் என்ற வராலாற்று சாதனையை சாம்சன் படைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் இடத்தில் டோனி இருந்தார். அவர் 165 போட்டிகளில் 200 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை சாம்சன் முறியடித்துள்ளார். இவர் 159 போட்டிகளிலே 200 சிக்சர்களை விளாசி அசத்தி உள்ளார்.

    இந்த வரிசையில் விராட் கோலி 180 போட்டிகளிலும் ரோகித் 185 போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளிலும் 200 சிக்சர்களை விளாசி உள்ளனர்.

    • சாம்சன் அதிரடி வீண்- 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி.
    • தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 4, பட்லர் 19, 27 என விக்கெட்டுகளை இழந்தது. அந்த சமயத்தில் தனி ஆளாக சாம்சன் போராடி வந்தார்.

    இந்நிலையில் சாம்சன் ஒரு பந்தை சிக்சருக்கு விளாசினார். அப்போது சிக்சர் லைனில் இருந்த ஹோப் பந்தை பிடித்து எல்லை கோட்டிற்கு அருகில் சென்று பின்னர் உள்ளே வருவார். அப்போது அவரது கால் எல்லை கோட்டை தொடுவது போல காட்சி தெரியும். உடனே இதனை பார்த்த சாம்சன் களத்தில் உள்ள நடுவரிடம் ரீவ்யூ கேட்டு முறையிடுவார். ஆனால் 3-வது நடுவர் அதனை அவுட் கொடுத்ததால் ரீவ்யூ எடுக்க முடியாது என கள நடுவர்கள் கூறினர்.

    இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில், ஒரு வேளை சஞ்சு சாமிற்கு அவுட் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது தனக்கு அவுட் கொடுத்தது குறித்து களத்தில் உள்ள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    • தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார்.
    • டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் முதல் பந்தை பவுண்டரி விளாச 2 பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

    மெதுவாக விளையாடிய பட்லர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரியான் பராக் சாம்சனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரைசதம் விளாசினார். தடுமாற்றத்துடன் விளையாடிய பராக் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார். இந்த அவுட் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அதற்கு சாம்சன் ரீவ்யூ கேட்டார். ஆனால் 3-வது நடுவர் அதனை அவுட் கொடுத்ததால் ரீவ்யூ எடுக்க முடியாது என கூறினர்.

    இதனை தொடர்ந்து அதிரடி காட்டிய சுபம் துபே 12 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய பவல் 13 ரன்னில் போல்ட் ஆனார்.

    இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
    • ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாஹல் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    ஐபிஎல் டி20 தொடரின் 56-வது லீக் போட்டி இன்று டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    சாஹல் இந்த போட்டியில் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் சேர்த்து சாஹால் 350 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அவருக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா 310, ரவிச்சந்திரன் அஸ்வின் 306 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.  

    • டெல்லி அணியில் அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் விளாசினார்.
    • ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக போரல் - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 19 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார். அரை சதம் அடித்த கையோடு அவர் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த சாய் ஹோப் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து அக்சர் படேல் 15, பண்ட் 15 என வெளியேறினார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய போரல் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

    இதனை தொடர்ந்து ஸ்டப்ஸ் மர்றும் குல்புதின் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் 7 போட்டிகளில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை ரோகித் குவித்தார்.
    • அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே 4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்றையை ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆனாலும், ரோகித் சர்மாவை பொருத்தவரையில் மேலும் ஒரு மோசமான போட்டியாகவே அது தொடர்ந்தது. காரணம் கடந்த ஐந்து போட்டிகளில், நான்குமுறை ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்துள்ளார். குறைந்தபட்சமாக 20 ரன்களை கூட அவர் சேர்க்கவில்லை.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ரோகித் சர்மா சிறப்பாகவே தொடங்கினார். அதன்படி முதல் 7 போட்டிகளில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை குவித்தார். ஆனால், அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே 4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், மைதானத்திலேயே கண்கலங்கி அழுதுள்ளார். கண்ணில் நீர் வழிந்தோட ரோகித் சர்மா அதை துடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "ரோகித்தை இப்படி பார்க்க முடியவில்லை, வலுவாக மீண்டும் கம்பேக் கொடுப்பீர்கள், வலிமையாக இருங்கள்" என ஒருதரப்பினர் ரோகித்திற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதேநேரம், "ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோகித் விளையாடக் கூடாது, இவர் தலைமையில் சென்றால் இந்திய அணி தோற்பது உறுதி, டி-20 உலகக் கோப்பையும் நமக்கு கிடையாது" என ஒருதரப்பினர் ரோகித்திற்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.

    ×