search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024"

    • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வென்றது.
    • வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி வங்காளம் முழுவதும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஐபிஎல் சீசனில் சாதனை படைத்த வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை தனிப்பட்ட முறையில் வாழ்த்த விரும்புகிறேன்.

    வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தது.
    • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தப்படியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்..

    அவர் ஐதராபாத் அணி பேட்டிங் செய்யும் போதே சோகமடைந்து உட்கார்ந்து இருந்தார். இறுதியில் தோல்வியடைந்ததால் வேதனை தாங்காமல் அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    காவ்யா மாறனை பார்ப்பதற்காக கூட நிறைய ரசிகர்கள் ஐதராபாத் போட்டியை பார்த்ததாக மீம்ஸ்கள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

    • கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - குர்பாஸ் களமிறங்கினர். சுனில் நரைன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து குர்பாஸ் உடன் வெங்கடேஷ் அய்யர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஸ் அரை சதம் விளாசியது மட்டுமல்லாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 

    இறுதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இறுதிபோட்டியில் குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் சென்னை - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை அணி 125 ரன்கள் எடுத்ததே குறைந்த பட்ச ரன்களாக இருந்தது. அதனை தற்போது ஐதராபாத் அணி முறியடித்துள்ளது.

    இறுதிப்போட்டியில் குறைந்த பட்ச ரன்கள் எடுத்த அணிகள் விவரம்:-

    113 ஐதராபாத் vs கொல்கத்தா - சென்னை 2024 *

    125/9 சென்னை vs மும்பை - கொல்கத்தா 2013

    128/6 புனே vs மும்பை - ஐதராபாத் 2017

    129/8 மும்பை vs புனே - ஹைதராபாத் 2017

    • ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். தொடக்கமே ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

    அபிஷேக் 2 ரன்னிலும் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனை தொடர்ந்து வந்த திருப்பாதி முதலில் பவுண்டரிகளை விளாசினார். பின்னர் சொதப்பிய அவர் 13 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து மார்க்ரம் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதிஷ் ரெட்டி 13 ரன்னிலும் மார்க்ரம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    அடுத்து வந்த ஷபாஷ் அகமது 8 ரன்னிலும் அப்தும் சமாத் 4 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது. ஒரே நம்பிக்கையாக இருந்த கிளாசனும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் கம்மின்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
    • நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா- ஐதராபாத் அணிகள் மோதுகிறது.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. நடப்பு தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    • சீசன் முழுவதும் அவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
    • குவாலிஃபையர் ஒன்றில் அற்புதமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அவர்களிடம் இருக்கிறார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கணித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறும் என்று நம்புகிறேன். சீசன் முழுவதும் அவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். குவாலிஃபையர் ஒன்றில் அற்புதமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அவர்களிடம் இருக்கிறார்.

    சேப்பாக்கத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களிடம் உள்ளனர். அதுமட்டுமின்றி, ஆண்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரரும் அணியில் உள்ளர். அதனால் எனது கணிப்பு கேகேஆர் அணி தான் கோப்பையை வெல்லும்.

    இவ்வாறு வாட்சன் தெரிவித்துள்ளார்.

    • ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • நாங்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்திருக்கிறோம்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே 26) இரவு 7.30 மணிக்கு துவங்க இருக்கிறது. சென்னை சேப்பாகத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில், ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டியை ஒட்டி கொல்கத்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ள சிறப்பு வீடியோ ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    வீடியோவில் பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், "அன்பார்ந்த பேட், இன்று. உனக்காக சிறு தகவலை தெரிவிப்பது மகிழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதலில், இந்த சீசனில் ஆரஞ்சு ஆர்மியை நீங்கள் சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளீர்கள் என்பதை நான் கூறிக் கொள்கிறேன். இந்த சீசனில் நாங்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்திருக்கிறோம்."

    "ஒரே எதிரணியை வேறொரு களத்தில் நீங்கள் எதிர்கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஆனால், இன்று நீங்கள் எதிர்கொள்ள இருக்கும் நிறங்கள் உங்களுக்கு மிகவும் பரீட்சயமான பர்பில் மற்றும் கோல்டு ஆகும். பரபரப்பான இறுதிப்போட்டியில், சிறப்பான அணி வெல்லட்டும், இதன் மூலம் நான் நமது அணியை குறிப்பிடுகிறேன்," என்று தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "சிறிய தகவலுக்கு நன்றி. நீங்கள் அருமையாக இருந்துள்ளீர்கள். நீங்கள் இருவரும் swag-க்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளீர்கள். ஆனால், இந்த மைதானத்தில் எங்களின் சிறப்பான வெற்றியை பெற போகிறோம். கே.கே.ஆர். வீரர்களுக்கு எதை எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும்."

    "ஞாயிற்றுக் கிழமை வாருங்கள், இந்த சீசனில் நீங்கள் கடுமையான போட்டியை ஏற்படுத்தியதாக தெரிவித்தீர்கள், ஆனால் ஆரஞ்சு ஆர்மி தனது சிறப்பான ஆட்டத்தை இறுதிப்போட்டியில் வெளிப்படுத்த சேமித்து வைத்திருக்கிறது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

    • சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.
    • இந்தியாவில் தோனியின் வெறித்தனமான ரசிகர்களைப் பற்றி அவர் பேசினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இதனையடுத்து சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடை பெற்றார். அவர் விமான நிலையத்தில் அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அங்கு அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், பிபிசி ஸ்போர்ட் மீடியாவில் பேசிய லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஐபிஎல்-ல் ஒரு அணியை நிர்வகித்த தனது முதல் அனுபவத்தைபகிர்ந்தார்.

    அப்போது இந்தியாவில் டோனியின் வெறித்தனமான ரசிகர்களைப் பற்றி அவர் பேசினார். அதில், "சிஎஸ்கே அணி லக்னோவுக்கு வந்தபோது 50,000 இருக்கைகள் கொண்ட மைதானத்தில் கிட்டத்தட்ட 48,000 பேர் டோனியின் '7' ஜெர்சி அணிந்திருந்தனர். லக்னோ அணிசென்னைக்குச் சென்றபோது 100% டோனி ஜெர்சியை அணிந்திருந்தனர். இந்தியாவில் ஒரு மனிதர் இந்த அளவுக்கு ஹீரோ போல கொண்டாடப்படுவதை என்னால் நம்பவே முடியவில்லை.

    இந்தியாவில் இதற்கு முன் விளையாடிய போது சச்சின் டெண்டுல்கரை அவ்வாறு பார்த்துள்ளேன். பின்னர் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளராக இருந்த போது விராட் கோலி, டோனி கொண்டாடப்பட்டனர். ஆனால் இங்கே அதை விட அதிகமாக டோனியை கொண்டாடுகின்றனர்" என்று அவர் கூறினார்.

    • முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
    • இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.

    176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.

    இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் வீரர் சாஹல் படைத்துள்ளார். அவர் மொத்தமாக இதுவரை 224 சிக்ஸர்களை விட்டு கொடுத்துள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் பியூஷ் சாவ்லா - 222, ஜடேஜா - 206, அஷ்வின் - 203, அமித் மிஷ்ரா - 183 ஆகியோர் உள்ளனர்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.
    • 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.

    இந்நிலையில், ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஆகியோரும் இணைந்து கேப்டன் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் 2 கேப்டன்களும் கோப்பையுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
    • ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரே வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் 20 நாடுகள் தங்கள் அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரே வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற 15 வீரர்களில் ஒருவர் கூட ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹைதராபாத் அணியில் உள்ள நடராஜன் ஆகியோர் சிறப்பாக விளையாடியுள்ள போதும் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×