search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024"

    • 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.

    இதில் சுவாரசியம் என்னவென்றால், நடப்பு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட டாப் 2 வீரர்களின் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

    ஐபிஎல் தொடரில் மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

    ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் டைரஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவது முதல் முறையாகும். இதற்கு முன்னதாக முன்னதாக பேட் கம்மின்சை 20.50 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் அதிகம் விலை போன வீரர்களின் விவரம் வருமாறு:

    மிட்செல் ஸ்டார்க்: ரூ.24.75 கோடி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்)

    பேட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    டேரில் மிட்செல்: ரூ.14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹர்ஷல் படேல்: ரூ.11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)

    அல்ஜாரி ஜோசப்: ரூ.11.50 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

    • சேப்பாக்கத்தை சுற்றியுள்ள ஓட்டல்களிலும் நாளை இரவு விதவிதமான சைவ, அசைவ உணவுகள் தயாரிக்கப்பட உள்ளது.
    • நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகத்தினரும் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

    சென்னை:

    சென்னையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பபட்டுள்ளது.

    நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இறுதிப் போட்டியை காண கொல்கத்தா, ஐதராபாத் அணிகளின் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் ஏராளமானோர் சென்னையில் குவிந்துள்ளனர். இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன.

    இதை தொடர்ந்து லாட்ஜ்களில் வழக்கமான கட்டணத்தைவிட 10 சதவீதம் அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகரில் உள்ள உணவகங்களும் வழக்கத்தை விட அதிகமாக உணவுகளை சமைப்பதற்கு தயாராகி வருகின்றன.

    இறுதிப்போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் படையெடுப்பார்கள் என்பதால் சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரது மேற்பார்வையில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மைதானத்துக்கு வெளியே உள்ள சாலைகளில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். போட்டி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பவர்களை பிடிக்கவும் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    கூடுதல் விலைக்கு விற்பவர்களை பிடிக்கவும் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    ஐ.பி.எல். இறுதிப் போட்டியை காண்பதற்கு வெளிமாநிலங்களில் இருந்து பலர் விமானத்தில் வந்துள்ளனர்.

    இதையொட்டி டெல்லி, சென்னைக்கான விமான கட்டணம் 15 மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமான நாட்களில் ரூ.7 ஆயிரமாக இருந்த விமான கட்டணம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    சென்னை ரசிகர்களும் மைதானத்துக்கு சென்று இறுதிப்போட்டியை காண ஆவலோடு காத்திருக்கிறார்கள். இரவில் இறுதிப்போட்டி முடிந்த பிறகு திருவல்லிக்கேணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சாப்பிடுவது வழக்கம். இதனால் சேப்பாக்கத்தை சுற்றியுள்ள ஓட்டல்களிலும் நாளை இரவு விதவிதமான சைவ, அசைவ உணவுகள் தயாரிக்கப்பட உள்ளது. நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகத்தினரும் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. இதனால் சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும் சமையல் கலைஞர்கள் படுபிசியாக காணப்படுகின்றனர். சென்னை மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாது காப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • இந்த சீசன் முழுவதும் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
    • இந்த சீசன் தொடங்கும்போது எங்களுடைய இலக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான்.

    ஐபிஎல் 2024 சீசனின் குவாலிபையர்-2 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 175 ரன்கள் விளாசியது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 139 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    இந்த சீசன் முழுவதும் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அணி வீரர்களுக்குள் சிறந்த வைப் உள்ளதை நீங்கள் பார்க்க முடியும். இந்த சீசன் தொடங்கும்போது எங்களுடைய இலக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான். அதை செய்துவிட்டோம்.

    இது மொத்தமாக அணி உரிமையாளருக்குரியது. அவர்களில் 60 அல்லது 70 பேர் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இதில் ஈடுபடுத்துகிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் ஒன்றை கடப்போம் என்று நம்புகிறேன்.

    எங்கள் பலம் எங்கள் பேட்டிங் என்பது எங்களுக்கு தெரியும். இந்த அணியில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. புவனேஸ்வர் குமார், நடராஜன், உனத்கட் எனது வேலையை எளிதாக்குகின்றனர்.

    மிடில் ஓவரில் அபிஷேக் சர்மா சிறப்பாக பந்து வீசினார். வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும்போது அவரை பயன்படுத்தினோம். அவர் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். 170 கடினமான இலக்கு. இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், வாய்ப்பு எங்களுக்குதான் என்பது தெரியும்.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    • துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 42 ரன்களை சேர்த்தார்.
    • ஐதராபாத் சார்பில் ஷபாஸ் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 34 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல துக்கம் கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கேட்மோர் 10 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன சஞ்சு சாம்சனும் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரியான் பராக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 42 ரனக்ளை சேர்த்து ஆட்டமிழந்தார்.

    ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். மறுபுறம் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    ஐதராபாத் சார்பில் ஷாபாஸ் அகமது மூன்று விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அந்த வகையில், மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதி பெற்றது. 2024 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. 

    • ஆர்சிபி அணிக்கெதிராக 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 27 ரன்கள் விட்டுக்கொடுதது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் சீசனின் பிளேஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் குஜராத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணியால் 172 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதற்கு ஆவேஷ் கானின் பந்து வீச்சும் முக்கிய காரணம். அவர் 4 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ரஜத் படிதார் (34), லோம்ரோர் (32), தினேஷ் கார்த்திக் (11) ஆகியோரை வீழ்த்தினார்.

    அதேபோல் இன்று சென்னையில் நடைபெற்று வரும் குவாலிபையர்-2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராகவும் பந்து வீச்சில் அசத்தினார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    நிதிஷ் ரெட்டி (5), அப்துல் சமாத் (0), ஷபாஸ் அகமது (18) ஆகியோரை வெளியேற்றி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோரை 175 ரன்னில் கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தார்.

    முக்கியமான இரண்டு போட்டிகளில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    • கிளாசன் அரைசதம் அடித்து அவுட் ஆனார்.
    • ராஜஸ்தான் அணியின் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதன் காரணமாக முதலில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 34 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • ஐ.பி.எல். 2024 தொடரின் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.
    • இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். அந்த வகையில் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சுக்கே முன்னுரிமை அளிக்கும்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்று ஆட்டத்துக்கு ஏற்றம் கண்டது.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன் ரைசர்ஸ்- வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான (2016-ம் ஆண்டு) ஐதராபாத் அணி லீக் சுற்றில் (8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 17 புள்ளி) புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்து மலைக்க வைத்த அந்த அணி முதலாவது தகுதி சுற்றில் 159 ரன்னில் முடங்கி தோல்வியை தழுவியது. அந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. அவர்கள் மீண்டும் ரன்வேட்டைக்கு திரும்பும் முனைப்புடன் காத்திருக்கிறார்கள்.

    டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 533 ரன்), அபிஷேக் ஷர்மா (3 அரைசதத்துடன் 470), ஹென்ரிச் கிளாசென் (3 அரைசதத்துடன் 413), நிதிஷ் குமார் ரெட்டி (2 அரைசதத்துடன் 285) ஆகியோர் தான் ஐதராபாத் அணியின் பேட்டிங் தூண்கள். அவர்கள் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே அந்த அணியின் ரன் வேகம் அமையும். பந்து வீச்சில் டி.நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    அறிமுக சாம்பியனான (2008) ராஜஸ்தான் அணி லீக் சுற்றில் (8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 17 புள்ளி) ஐதராபாத்துடன் சமநிலை வகித்தாலும் ரன்-ரேட்டில் பின்தங்கியதால் 3-வது இடம் பெற்றது. முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்ற அந்த அணி கடைசி கட்டத்தில் சற்று தடுமாறினாலும், வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூருவின் கனவை சிதைத்து 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறி நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ரியான் பராக் (4 அரைசதம் உள்பட 567 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (5 அரைசதம் உள்பட 521), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 393) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜோஸ் பட்லர் விலகலால் ஏற்பட்டு இருக்கும் சரிவை சமாளிக்க டாம் கோலர் காட்மோர், ஹெட்மயர், ரோமன் பவெல் பயனுள்ள பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, அஸ்வின் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த சீசனில் லீக் சுற்றில் ஒரு முறை சந்தித்துள்ளன. இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அத்துடன் முதலாவது தகுதி சுற்றில் செய்த தவறுகளை களைந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க ராஜஸ்தான் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 10 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 9 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வென்று இருக்கின்றன.

    சேப்பாக்கம் ஆடுகளம் பொதுவாக மெதுவான தன்மை கொண்டது என்பதால் இரு அணிகளும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகறது. முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினுக்கு இது சொந்த ஊர் மைதானம் என்பதால் அவரது பந்து வீச்சு ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

    பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சுக்கே முன்னுரிமை அளிக்கும். இந்த சீசனில் இங்கு நடந்துள்ள 7 லீக் ஆட்டங்களில் 5-ல் 2-வது பேட் செய்த அணியே வென்றிருப்பது நினைவு கூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் அல்லது கிளென் பிலிப்ஸ் அல்லது விஜயகாந்த் வியாஸ்காந்த், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷபாஸ் அகமது அல்லது மயங்க் மார்கண்டே, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷவர்குமார், நடராஜன்.

    ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோலர் காட்மோர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ரோமன் பவெல் அல்லது கேஷவ் மகராஜ், அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள்.
    • அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆர்வமில்லாதது போல் தெரிகிறது.

    ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னையை கடைசி போட்டியில் தோற்கடித்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    அதனால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். அவர் இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 52 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சமமாக ஆர்சிபி அணியில் விளையாடவில்லை எனவும் அடுத்து வருடம் ஆர்சிபி அணியில் இருந்து மேக்ஸ்வெல்லை கழற்றி விட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னார் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாம் மேக்ஸ்வெல் பற்றி பேச வேண்டும். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடர் என்று வரும் போது மட்டும் அவருக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு இங்கே ஆர்வமில்லாதது போல் தெரிகிறது. குறிப்பாக அவுட்டானால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஏனெனில் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் சென்று விடுகிறது.

    அதனால் ஜாலியாக இருந்து சிரித்து விட்டு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்வார். ஆனால் இறுதி முடிவு என்ன? நீங்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும். எனவே அவரை விட்டு ஆர்சிபி நகர வேண்டும். அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது என்ன பிரச்சனை என்பதை நாங்கள் இங்கே அமர்ந்து விவாதிக்கிறோம். ஆனால் அவர்கள் 6 வெற்றியுடன் தகுதி பெற்றதால் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையான முடிவு கோப்பை வெல்வதில் தான் இருக்கிறது. அது அவர்களிடம் இல்லாததால் அங்கே பிரச்சினை இருக்கிறது.

    இவ்வாறு திவாரி கூறினார்.

    • உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
    • எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும்.

    அகமதாபாத்:

    இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடம் பிடித்த அணிகளான ராஜஸ்தான் ராயல்சும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அதனால் 2008 முதல் தொடர்ந்து 17-வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் பெங்களூரு பரிதாபமாக வெளியேறியது. அதே காரணத்தால் விராட் கோலியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணிக்காக மொத்தம் 8000 ரன்கள் அடித்துள்ள அவர் இந்த வருடம் 741 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இருப்பினும் வழக்கம் போல முக்கிய போட்டியில் மற்ற வீரர்கள் சொதப்பியதால் கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை கோட்டை விட்ட விராட் கோலி சோகத்துடன் வெளியேறினார்.

    இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் மெஸ்சி, ரொனால்டோ போன்ற கால்பந்து ஜாம்பவான்கள்போல ஆர்சிபி அணியை விட்டு வெளியேறி விராட் கோலி வேறு அணிக்கு விளையாட வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே சொன்னதை நான் மீண்டும் சொல்கிறேன். மற்ற விளையாட்டுகளின் மகத்தானவர்கள் சில அணிகளை விட்டு வெளியேறி மற்ற அணிகளில் சேர்ந்து வெற்றிகளை கண்டுள்ளனர். அதேபோல கடுமையாக முயற்சித்த விராட் கோலி மீண்டும் ஆரஞ்சு தொப்பியை வென்றும் அவருடைய அணி தோல்வியை சந்தித்தது.

    ஆர்சிபி அணிக்கு அவர் மதிப்பை கொண்டு வருகிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் விராட் கோலி கோப்பைக்கு தகுதியானவர்.

    எனவே கோப்பையை வெல்ல பெற உதவும் அணிக்காக அவர் விளையாடத் தகுதியானவர். உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும்.

    ரொனால்டோ, மெஸ்ஸி, ஹரி கேன் ஆகியோர் தங்களுடைய அணிகளை விட்டுச் சென்று வேறு அணியில் விளையாடி வெற்றி கண்டனர்.

    இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

    • சென்னை சேப்பாக்கத்தில் குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
    • போட்டிக்குச் செல்வோர் பயணச்சீட்டு பெற்று பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள பிளே ஆப் சுற்றின் குவாலிபையர்-2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வரும் 26-ம் தேதி இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதும். குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணத்துக்கு அனுமதி இல்லை என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    நடப்பு ஐ.பி.எல். சீசனின் குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி வரும் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் சம்பந்தப்பட்ட போட்டிக்கான நுழைவுச்சீட்டு (டிக்கெட்) வைத்திருந்தால் அதை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் வரும் 24 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகர பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதியில்லை. எனவே போட்டிக்குச் செல்வோர் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது

    • தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.
    • நாங்கள் (சி.எஸ்.கே.) 5 முறை சாம்பியன்" என்று ராயுடு பதிவிட்டுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஆர்சிபி அணியின் கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல்-ல் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

    பெங்களூரு அணியின் தோல்வியை சென்னை அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்களாக வெளியிட்டு கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெங்களூரு அணியின் தோல்வி குறித்து முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ராயுடு காட்டமாக விமர்சித்துள்ளார்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் பேட்டி அளித்த ராயுடு, "கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தினாலும் ஐபிஎல் கோப்பைகள் வெல்லப்படுவதில்லை. சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை. கோப்பையை வெல்ல பிளே ஆஃப்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.

    திறமையான இந்திய வீரர்களை பெங்களூரு அணி கண்டுபிடிக்க வேண்டும். திறமையான இந்திய வீரர்களை கண்டுபிடித்ததால் தான் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் வெற்றிகரமான அணிகளாக உள்ளது என்பதை பெங்களூரு அணி உணர வேண்டும்" என்று பேசியுள்ளார்.

    இது மட்டுமின்றி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் கடந்த முறை கோப்பை வென்ற சென்னை அணி வீரர்களின் வீடியோ ஒன்றையும் ராயுடு பகிர்ந்துள்ளார். அதில், சில சமயங்களில் சிலவற்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. நாங்கள் (சி.எஸ்.கே.) 5 முறை சாம்பியன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    ×