search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ்"

    • கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.
    • கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. விழாவை நடத்துகிறார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா லயோலா கல்லூரியில் 20-ந்தேதி நடைபெறுகிறது.

    கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், ஆயர் நீதிநாதன், பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர், பெர்னாண்டஸ் ரத்தினராஜ், டேவிட் பிரகாசம், முகமது இம்ரானுல்லாஹ் பாகவி, ஜோ அருண், வின்சென்ட் மார் பவுலோஸ், மரிய பிலோமினா வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை மேற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, வில்சன் எம்.பி. மற்றும் பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதில் திருச்சி கலைக் காவிரி நுண்கலை கல்லூரி மாணவியர் வரவேற்பு நடனம், போதகர் பால் தயாநிதி ஜெப வழிபாடு பெல்லா கிறிஸ்துமஸ் கேரல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. விழாவை நடத்துகிறார். ஹேமில்டன் வில்சன், நிக்சன், ஜான் பிரகாஷ், யேசுதாஸ் எடிசன் பெரேரா, பிரபு சாலமோன், ஜே.எம்.அந்தோணி, ஆன்டோ உள்ளிட்ட விழாக் குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து பிரார்த்தனையில் ஈடுபடுவர்.
    • பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    திருப்பூர் : 

    கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலும், ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடுவர்.பண்டிகையை முன்னிட்டு வீடுகள் மற்றும் கட்டடங்களில் ஏசுநாதரின் பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் தொங்க விடப்படும். மேலும் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து பிரார்த்தனையில் ஈடுபடுவர்.

    இதற்கான கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், மாட்டுத் தொழுவம், குடில்கள், குழந்தை ஏசு, தாய் மரியன்னை, கிறிஸ்துமஸ் மரத்துண்டு, பரிசு பொருட்கள் என வாங்கி வீடுகள், ஆலயங்களில் அலங்கார விளக்குகள் பொருத்தி அலங்கரித்து வழிபடுவர். இந்த பொருட்கள் விற்பனை திருப்பூர் நகரப் பகுதி கடைகளில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

    கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் முக வடிவிலான கவசம் மற்றும் உடைகள் விற்பனையும் காணப்படுகிறது. இவ்வகைப் பொருட்கள் 50 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. கிறிஸ்துமஸ் குடில்கள் செட் ஆகவும், அதில் அமையவுள்ள உருவங்கள் மற்றும் நட்சத்திரங்கள், தேவதைகள் தனித்தனியாகவும் விற்பனையாகிறது.

    பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஏராளமானோர் டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை அமைத்து அதில் வண்ண விளக்குகள் பொருத்தி தங்கள் வீடுகளின் முன்புறத்தில் தொங்க விட்டுள்ளனர். 

    • கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.

    வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக திகழ்கிறது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

    கிறிஸ்தவ பேராலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற பெருமை மிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி மாதா பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.

    மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்படும்.

    இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின்விளக்கு அலங்காரம் செய்ய பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா வருகிற 17-ந்தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    • கிறிஸ்துஸ் விழாவில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா வருகிற 17-ந்தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    சென்னை மயிலாப்பூர் செயின்ட் ரபேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வடசென்னை கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவர் பிஜு சாக்கோ ஏற்பாட்டில் நடைபெறும் கிறிஸ்துஸ் விழாவில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஏற்பாடு செய்தார்.
    • கவர்னர் நடத்த இருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் யாரும் பங்கேற்க போவதில்லை என்று தெரிகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஏற்பாடு செய்தார்.

    கடந்த ஆண்டு நடந்த கிறிஸ்துஸ் விழாவில் மத தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இவ்விழாவில் பங்கேற்க முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள், எதிர்கட்சி தலைவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் அழைப்பு அனுப்பி இருந்தார்.

    கவர்னர் நடத்த இருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் யாரும் பங்கேற்க போவதில்லை என்று தெரிகிறது. இதுபோல கேரள எதிர்கட்சி தலைவர் சதீசனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அன்றைய தினம் அவர் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கவர்னரின் அழைப்பை கேரள மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • இதையொட்டி பண்டிகை தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து வருகின்றனர். 

    அன்னதானப்பட்டி:

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. மேலும் வருகிற ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டையும் கிறிஸ்தவர்கள் வரவேற்க தயாராக உள்ளனர். இதையொட்டி பண்டிகை தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து வருகின்றனர். 

    கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த தால், எளிமையான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு முதல் மிகவும் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர். அதேபோல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, ஸ்டார்கள் தொங்கவிட்டு, அதனை மின்விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதனைக் குறிக்கும் விதமாக வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிட்டுள்ளனர்.

    சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்ஷன், 4 ரோடு, 5 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள புத்தகக் கடைகள், அழகு சாதன கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை களைகட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ரூ.50 , ரூ.60 முதல்  ரூ.2500 வரை கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் வடிவங்களுக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகின்றன, என்றார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடந்தது.
    • இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின் பாடல்கள், குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் பள்ளி சிறுவர்களின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி குருசேகரத் தலைவர் மற்றும் சபைகுரு பால்தினகரன் தலைமையில் நடந்தது. ஞாயிறு பள்ளி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி பால்ராஜ் வரவேற்றார்.

    பள்ளி சிறுவர்கள் கிறிஸ்து பிறப்பு குறித்து பாடல்களை பாடி, குறு நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சி.எஸ்.ஐ. மதுரை-முகவை திருமண்டலத்தின் இளையோர் திருச்சபை இயக்குநர் கிதியோன் சாம் தேவ செய்தியளித்தார். இதில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். ஞாயிறு பள்ளி பொறுப்பாளர் நிர்மலா குலோத்துங்கன் நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தில் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சி நடந்தது. வடக்குதெரு, நாயுடு தெரு, நடுத்தெரு, திலகாபுரி தெரு, பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள திருச்சபை மக்களின் குடும்பங்களை சந்தித்து சபை குரு வாழ்த்து தெரிவித்தார். சபை குருவானர் அருள்தனராஜ் ஜெபித்து தொடங்கி வைத்தார்.

    இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின் பாடல்கள், குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. கடந்த வாரம் வேதாகம தேர்வு நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சபை போதகர் பரிசு வழங்கினார். கிறிஸ்மஸ் கீத பவனி வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து குடும்ப கீத ஆராதனை, ஐக்கிய சங்கங்களின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • அ.தி.மு.க. சிறுபான்மை, மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது.
    • புரட்சி தலைவி அம்மா கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் வருகிற 19-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    இதுபற்றி அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. சிறுபான்மை, மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. புரட்சி தலைவி அம்மா கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.

    அந்த வகையில் இந்த ஆண்டும், அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந் தேதி மாலை 5 மணியளவில் சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேக்கினை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • பொங்கலுக்கு 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் நிறுவனமான ஆவின் மூலம் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக்கு பல்வேறு விதமான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் ஆவின் நிறுவனம் இந்த முறை கேக் தயாரிப்பிலும் ஈடுபடுகிறது.

    சென்னையில் மட்டும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பிளம் கேக் விற்பனை செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு உள்ளது. 5 சுவைகளில் கேக் தயாரிக்கவும், தனியார் கேக்கை விட குறைந்த விலையில் விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேக் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. சென்னையில் உள்ள முக்கிய ஆவின் பார்லர்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

    கேக்கினை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா கூறியதாவது:-

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆவின் சார்பில் 5 சுவைகளில் கேக் தயாரிக்கப்பட உள்ளது. இது தவிர பிளம் கேக்கும் தயாரிக்கப்படும். மற்ற நிறுவனங்களை விட தரத்துடன் விலை குறைவாக விற்கப்படும்.

    பொங்கலுக்கு 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்கள் பொங்கலை கொண்டாட நெய்யை பயன்படுத்தும் விதமாக அதிகளவில் தயாரிக்கப்பட உள்ளது. தற்போது 100 கிராம் நெய் 10 ஆயிரம் தான் தயாரிக்கப்படுகிறது.

    சேலத்தில் புதிய ஐஸ்கிரீம் பண்ணை நிறுவப்பட்டு உள்ளது. அதன் மூலம் தினமும் 6000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில்கள் அமைத்து கொண்டாடி வருவது வழக்கம்.
    • மின்னணு விளக்குகளால் அமைக்கப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் குடில்கள் ஆகியவை பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

    திருப்பூர் :

    ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி இயேசு பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ்பண்டிகை கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ்பண்டிகை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில்கள் அமைத்து கொண்டாடி வருவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த வருடமும் கிறிஸ்துமஸ்பண்டிகை கொண்டாடும் வகையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திரங்கள் மற்றும் குடில்கள் அமைத்து கொண்டாடிவருகின்றனர். தேவாலயங்களில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து திருப்பூர், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் மற்றும் குடில்கள் விற்பனை தொடங்கியுள்ளது. பல வண்ணங்களுடன் கூடிய நட்சத்திரங்கள், மின்னணு விளக்குகளால் அமைக்கப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் குடில்கள் ஆகியவை பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது.

    • புதுப்புது வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
    • கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் இயேசு கிறிஸ்து மண்ணுலகில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கிவிடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் நீங்கியிருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.

    இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு இன்றும் 22 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குறிப்பாக வீடுகள்தோறும் வர்ணஜாலங்கள் காட்டும் வண்ண, வண்ண ஸ்டார்களால் தோரணங்கள் அமைக்கும் பணிகளிலும், இயேசுவின் பிறப்பை விளக்கும் வகையிலான குடில்கள் அமைக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கிறிஸ்தவ ஆலயங்கள், அமைப்புகள் சார்பில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று பஜனை பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பஜனை பாடல்களைப் பொறுத்தவரையில் சில பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றும், சில பகுதிகளில் வாகனங்களில் சென்றும் பாடி வருகிறார்கள்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடைவீதிகளில் பல வண்ணங்களில், புதுப்புது வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்டார் விற்பனை செய்யும் கடைகளில் ஸ்டார்கள் தோரணங்களாக தொங்க விடப்பட்டுள்ளன. இதேபோல் குடில்களில் வைக்கப்படும் சொரூபங்களும் பல வடிவங்களில் விற்பனைக்காக வைத்துள்ளனர். எனவே கிறிஸ்துமஸ் பண்டிகை இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது என்று கூறலாம்.

    இன்னும் சில தினங்கள் கழித்து கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் வாங்குவதிலும், பேக்கரிகளில் கேக் மற்றும் இனிப்பு வகைகளுக்கு ஆர்டர் கொடுப்பதிலும் ஈடுபடுவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், அதைத்தொடர்ந்து வரக்கூடிய புத்தாண்டு பண்டிகையையும் வரவேற்க தயாராகி விட்டார்கள்.

    • இலங்கை எம்.பி. சுபந்திரன் உள்ளிட்ட 5 தலைவர் கள் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார்கள்
    • 23-ந்தேதி சமூக நல்லி ணக்க மாநாடு நடக்கிறது. இதற்கு விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்குகிறார்

    நாகர்கோவில் :

    அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் அரு மனை ஸ்டீபன் நேற்று நாகர் கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    அருமனை கிறிஸ்தவஇயக் கத்தின் சார்பில் இந்த ஆண்டு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா, 25-வது ஆண்டு விழாவாகும். இந்த விழா வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்கள் அருமனை கிறிஸ்துமஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது வரை எங்களது விழாவில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் இந்த ஆண்டு வருகிற 21 மற்றும் 22-ந் தேதி களில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். இதில் இலங்கை எம்.பி. சுபந்திரன் உள்ளிட்ட 5 தலைவர்கள் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார்கள். எனவே இந்த 2 நாள் விழா பேரின்ப பெருவிழாவாக நடைபெற உள்ளது. இதில் உலக பிரசித்தி பெற்ற போதகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    23-ந்தேதி சமூக நல்லிணக்க மாநாடு நடக்கிறது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்குகிறார். இதில் மதசார் பற்ற அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து அழைப்பு விடுத்தோம். அவர் சார்பில் அமைச்சர் கலந்து கொள்வார் என கூறியுள்ளார்.

    இந்த மாநாட்டையொட்டி அன்று மாலை 6 மணிக்கு நெடியசாலை சந்திப்பில் இருந்து சமூக நல்லிணக்க வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது இதில் 900 கலைஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு சமூக நல்லிணக்க மாநாடு தொடங்கும். இந்த 3 நாள் நிகழ்ச்சிக்கான அனுமதி வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து அனுமதி கேட்டோம். வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி நடத்துமாறு கூறியுள்ளார். மாநாட்டுக்கு வரும் தலைவர்களுக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அரு மனை கிறிஸ்தவ இயக்க அமைப்பாளர் அல்காலித், தலைவர் டென்னிஸ், சட்ட ஆலோசகர் பிலிப்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயன் மற்றும் சுஜன்சிங், புஷ்பராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×