search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறி விழுந்தவர் சாவு"

    • கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயங்கினார்.
    • உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்த வர் சாமிநாதன் (68). இவரது மனைவி கண்ணம்மாள் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார்.

    இவர்களது மகன் செல்வக்குமார் (43). இவரை பெருந்துறையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை தூங்கி கொண்டிருந்த அவர் திடீரென கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயங்கினார்.

    உடனடியாக மறுவாழ்வு மையத்தினர் பெற்றோர்க ளுக்கு தகவல் கூறி உடனடியாக வர சொல்லி உறவினர்கள் உதவியுடன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை க்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அவரது உடலை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழி யிலேயே இறந்து விட்டதாக கூறி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தவறி விழுந்த சேகருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • சிகிச்சை பெற்று வந்த சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள எரங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (47). கோழிக்கடையில் கறி வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விஜய லட்சுமி (40). சேகருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து மது அருந்திவிட்டு வந்தவர் மதுபோதையில் தொட்டம் பாளையம், ஒத்தப்பனை மரம் அருகில் உள்ள கொப்பு வாய்க்கால் மோரி யில் படுத்து தூங்கியுள்ளார்.

    அப்போது மோரியில் இருந்து தவறி விழுந்த சேகருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர் ஒருவர் அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    பின்னர் உயர் சிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து சேகரின் மனைவி அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.
    • இதில் சம்பவ இடத்திலேயே மாதையன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள பெருமாள் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது50). இவர் நேற்று தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.

    அப்போது மரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே மாதையன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பொன்மாது உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பொன்மாது. கூலித்தொழிலாளி.

    இவர் அஞ்செட்டி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குந்துகோட்டை கணவாய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இவரை மீட்டு தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பொன்மாது உயிரிழந்தார்.

    இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று பாலத்தின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார்.
    • எதிர்பாராதமாக ஏரியில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது50). இவர் நேற்று பாலத்தின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதமாக ஏரியில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தாஸ் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது64). ஓய்வு பெற்ற தாசில்தாரரான இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தாஸ் உயிரிழந்தார்.

    ×