search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்ரித் தகவல்"

    • தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை 3.4.2023 அன்று வெளியிட்டுள்ளது.
    • பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை 3.4.2023 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்ட பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

    இப்பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வா ணையத்தின் இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 3. 5.2023 மற்றும் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்து வதற்கான கடைசி நாள் 4. 5.2023 ஆகும்.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணை யதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த இணையத ளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற You Tube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தே ர்விற்கான காணொலியை கண்டு பயன்பெறுமாறும், நீலகிரி மாவட்டத்தில் இத்தேர்விற்கு வி ண்ணப்பி த்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.
    • கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்களின் நலத்துறை சார்பில், கொடி நாள் தினத்தை முன்னிட்டு, கொடி நாள் நிதி வழங்கி, கொடி நாள் வசூலினை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    இந்திய நாட்டின் முப்படைகளில் பணியாற்றி, பாதுகாப்புப் படைவீரர்கள் தங்களது இளமை காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு கடினமான பணிகளை நமது தேசத்திற்காக தன்னலம் கருதாது தங்களது உயிர் மற்றும் உடல் உறுப்புகளை இழந்தும் நமது நாட்டிற்காக பணியாற்றி வருகின்றனர். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.

    நமது நாட்டில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய மாநில அரசு மூலமாக வாழ்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவர்களில் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றி உயிரிழந்தோர்களின் வாரிசுதாரர்களுக்கு உதவித்தொகை. குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் சிறார்கள் உயர்கல்விகளில் பயில்வதை ஊக்குவித்தும், படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு கண்கண்ணாடிகள் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதனைதொடர்ந்து, போரில் பணியின் போது உயிரிழந்தோரின் வாரிசுகள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் குருப்-சி மற்றும் டி பதவிகளில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு முன்னுரிமை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் படைவீரர்களுக்கென குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்திட கொடிநாள் நிதி வசூல் தொகை பொது மக்களிடமிருந்து பல்வேறு துறை அதிகாரிகளால் திரட்டப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு கொடி நாளுக்காக ரூ.86.39 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவில் ரூ.1. 39- கோடி (161 சதவீதம்) நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டிற்கு ரூ.91.26 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடிநாள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடமும் படைவீரர் கொடிநாள் நிதிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட கூடுதலாக கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×