search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 290147"

    • கடந்த 1-ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    • கணவன் வேலைக்கு சென்ற பின்னர் ஜோதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி இ.பி. காலணி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது34). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 வயதில் தர்ஷன் என்ற மகனும், 3 வயதில் லிகிதா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மாமியாருக்கும், மருமகள் ஜோதிக்கும் இைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 1-ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் கணவன் வேலைக்கு சென்ற பின்னர் ஜோதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மனைவி கிடைக்கவில்லை.

    இது குறித்து வெங்கடேசன் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதியை தேடி வருகின்றனர்.

    • ஆச்சி என்கிற நிவேதா (வயது 28). இவர் கடந்த 25-ந்தேதி பகல் 11 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • இவர் கணவர் பல இடங்களில் இவரைத் தேடியும் எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மேல் கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது மனைவி ஆச்சி என்கிற நிவேதா (வயது 28). இவர் கடந்த 25-ந்தேதி பகல் 11 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் இவரைத் தேடியும் எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிவேதாவை தேடி வருகின்றனர்.

    • தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார்
    • திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார்.

    கள்ளக்குறிச்சி:

    ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தியா (24) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு கிருபாஷினி என்கிற 4 வயது பெண் குழந்தையும் புவஸ்ரீ என்ற 5 மாத கை குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சின்ன சேலம் அருகே உள்ள தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார். திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காததால் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 குழந்தைகளுடன் காணாமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

    • மகாலட்சுமி திரும்ப வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் போன் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (32). தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (23). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திகேயன் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    வெள்ளோடு அருகே வந்தபோது மகாலட்சுமி கழிப்பறைக்கு சென்று வருவதாக வருவதாக கூறி, அங்குள்ள கீழ் பவானி வாய்க்கால் கரையோரம் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் மகாலட்சுமி திரும்ப வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் போன் செய்தார். ஆனால் சுவிட்ச் ஆப் என வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கம், சுற்றுப்புற பகுதியில் தேடிப்பார்த்தும் மகாலட்சுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து வெள்ளோடு போலீசில் கார்த்திகேயன் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகின்றனா்.

    • இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்து வந்துள்ளது.
    • சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி கஸ்தூரி (வயது 30) இவர்களுக்குதிருமணம் ஆகி11ஆண்டுகள்ஆகிறது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். ஆனந்த் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்துவந்துள்ளது.வழக்கம் போல நேற்று முன்தினம் 8ம்தேதி இரவு குடித்துவிட்டுஆனந்த் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கஸ்தூரிசண்டை போட்டுவிட்டு படுத்து தூங்கிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.

    ×