search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.2 லட்சம்"

    • அமைச்சர் மனோ தங்கராஜ்-ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினர்
    • மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    மார்த்தாண்டம்:

    கிள்ளியூர் அருகே உள்ள தூத்தூர் ஊராட்சிக் குட்பட்ட கே.ஆர்.புரம், சின்னத்து றையை சேர்ந்த மீனவர் லெரின்ஷோ (வயது 26), ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் ஆழ்கட லில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த மாதம் 9-ந் தேதி தவறி கடலில் விழுந்து இறந்தார். அவரது குடும்பத்தின் வறுமை சூழலை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழ்நாடு கோரிக்கை வைத்தார்.

    இதனை ஏற்று, மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்று லெரின்ஷோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ. 2 லட்சத்தை வழங்கினர். பத்மனாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மீன்வள துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், ஆய்வாளர் லிபின் மேரி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் அருகே உள்ள ஜாரிகொண்டலாம்பட்டியில் ரூ.2 கோடி கடன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கணேஷ் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள ஜாரிகொண்டலாம்பட்டி ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 63). இவர் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக முயற்சி மேற்கொண்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய திருப்பூர் மாவட்டம் அவிநாசி செந்தில் நகர் பகுதியை சேர்ந்த கணேஷ் மூர்த்தி( 51),கோவை சரவணம்பட்டி சக்தி ரோடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (52) ஆகியோர் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறினார்.

    பின்னர் பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு நேரில் வந்து அவருக்கு தேவையான ரூ.2 கோடி கடன் தொகையை குறைந்த வட்டியில் வாங்கி தருவதாக கூறி அதற்கு கமிஷனாக முன்பணம் ரூ.2 லட்சத்தை வாங்கிக் கொண்டு சென்றனர்.

    அதன் பிறகு அவர்கள் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கணேஷ் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள வெள்ளி ஷோரும்களூக்கு வெள்ளி பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வந்தனர்.
    • புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று பன்னீர்செல்வத்தின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 615 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ஆகிய வற்றை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் குகை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது49). இவர் தனது மாமனார் வேணுகோபாலுடன் சேர்ந்து வெள்ளி தொழிலில் ஈடுபட்டார்.

    தொழில் தொடங்கியபோது வேணுகோபால் ரூ.19 ஆயிரத்து 712 மற்றும் 28 கிலோ வெள்ளி, பன்னீர்செல்வம் ரூ.2374 மற்றும் 53 கிலோ வெள்ளியை முதலீடாக போட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள வெள்ளி ஷோரும்களூக்கு வெள்ளி பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வந்தனர். இந்த நிலையில் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது மகனும் பன்னீர்செல்வத்தின் மைத்துனருமான சத்திய நாராயணன் தொழிலை கவனித்தார்.

    இதனிடையே சத்திய நாராயணன் கூறியதன்பேரில் பன்னீர்செல்வம் ரூ.11.45 லட்சத்தை சேலம் 3 ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதற்கான பங்கு தொகை ரூ.18.67 லட்சத்தை சத்தியநாராயணன் எடுத்துக்கொண்டதோடு வெள்ளிபட்டறையில் இருந்த 500 கிலோ வெள்ளியையும் அவர் அபகரித்ததாக தெரிகிறது.

    வெளிமாநில விற்பனை வகையில் 1047 கிலோ வெள்ளிக்கான வரவு-செலவையும் சத்திய நாராயணன் கொடுக்க மறுத்து தன்னை மோசடி செய்ததாக பன்னீர்செல்வம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று பன்னீர்செல்வத்தின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 615 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ஆகிய வற்றை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    இதுபற்றி பன்னீர்செல்வம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் சத்தியநாராயணன் மற்றும் 2 பேர் சேர்ந்து தனது வீட்டில் வெள்ளி, பணத்தை திருடி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதைதொடர்ந்து சத்திய நாராயணன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×