search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்-அமைச்சர் கோப்பை"

    • மாநில அளவிலான போட்டி கள் நடத்தி பரிசுக ளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்த உத்தரவி ட்டுள்ளார்.
    • காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழ ங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை விளையாட்டு துறைகளில் முதன்மை மாநிலமாக கொண்டு வருத ற்கான தொடர் நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி என்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி, இதன் மூலம் வெற்றி பெறுவோர்களுக்கு மாநில அளவிலான போட்டி கள் நடத்தி பரிசுக ளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்த உத்தரவி ட்டுள்ளார்.

    இந்த போட்டிகள் மாற்றுத்திறனாளிகளு க்கான பிரிவு, அரசு ஊழியர்களுக்கான பிரிவு, பொதுமக்களுக்கான பிரிவு, பள்ளி மாணவர்களுக்கான பிரிவு, கல்லூரி மாணவர்க ளுக்கான பிரிவு என 5 பிரிவின்கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி களில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க ப்பட்டது.

    இதேபோல் கள்ளக்குறி ச்சி மாவட்டத்தில் முதல மைச்சர் கோப்பை போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பிரிவில் 534 மாணவர்களும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் 174 மாணவர்களும், பொது பிரிவில் 227 நபர்களும், அரசு ஊழியர்கள் பிரி வில் 182 நபர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 நபர்களும் என மொத்தம் 1,187 நபர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். இவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசு 406 நபர்க ளுக்கு ரூ 3,000 வீதம் ரூ.12,18,000, 2-ம் பரிசு 403 நபர்களுக்கு ரூ 2,000 வீதம் ரூ. 8,06,000, 3-ம் பரிசு 378 நபர்களுக்கு ரூ.1,000 வீதம் ரூ. 3,78,000 என மொத்தம் 1,187 நபர்களுக்கு ரூ. 24,02,000-த்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழ ங்கப்பட்டது. இதனால் 1,187 நபர்கள் பயனடை ந்துள்ளனர்.

    மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டதிலிருந்து மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு பள்ளி மாணவர்கள் பிரிவில் 193 மாணவ மாணவியர்களும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் 63 மாணவ மாணவியர்களும், பொதுமக்கள் பிரிவில் 80 நபர்களும், அரசு ஊழியர்கள் பிரிவில் 62 நபர்களும், மாற்றுத்திறனாளி பிரிவில் 39 நபர்களும் என மொத்தம் 437 நபர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவி லான போட்டியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நன்றியை தெரிவி த்துள்ளனர். இவ்வாறு மாவட்ட கலெ க்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
    • திலகராஜ் என்ற அரசு ஊழியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதல் -அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 2022-2023-ம் ஆண்டி ற்கான நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், தனுஷ்குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாது, விளையா ட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    தென்காசி மாவட்டத்தில் பாட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்விளையாட்டு மற்றும் பல்நோக்கு விளை யாட்டரங்கம் அமைப்பதற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நமது மாவட்ட த்திற்கு மேலும் பல பரிசுகள் பெற்று பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் தனுஷ் குமார் எம்.பி. பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு மற்றும் பிற திறமைகளை வளர்த்து கொண்டு பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    தென்காசி சித்திர சபை நாட்டியாஞ்சலி குரு புருசோத்தமன் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் , விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சிறப்பு நடன நிகழ்ச்சியும் நடந்தது.

    முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2022-23-ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1500 வீரர், வீராங்க னைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய உடற்கல்வி ஆய்வாளர், உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியைகள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    மேலும் அரசு ஊழியர்கள் பிரிவில் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் திலகராஜ் என்ற அரசு ஊழியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன் , மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
    • 13 விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. தடகளம், குழு விளையாட்டு போட்டிகளான கபடி, சிலம்பம், இறகுபந்து, கையுந்துபந்து, கூடைப்பந்து, ஆக்கி, மேஜைப்பந்து, நீச்சல் என 13 விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்டன.

    இந்த போட்டிகளில் மொத்தம் ஆண்கள் 10 ஆயிரத்து 359 பேரும், பெண்கள் 4 ஆயிரத்து 596 பேரும் என மொத்தம் 14 ஆயிரத்து 955 பேர் பங்கேற்றனர். முதல்பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. மாவட்டத்தில் ரூ.34 லட்சத்து ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மொத்தம் 1,675 பேருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    விழாவில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கோவை மண்டல முதுநிலை மேலாளர் சுஜாதா, மாவட்ட விளையாட்டு அதிகாரி ராகோபால், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • 11-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
    • நாளை மறுநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள 30 ஆயிரத்து 123 பேர் ஆர்வமுடன் அவர்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    விளையாட்டு போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 11-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

    இதில் தடகளம், செஸ், கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மிண்டன், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் இணையதளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    போட்டிகளில் பங்கேற்பதற்காக தனி நபர்கள் பிரிவில் 11 ஆயிரத்து 560 பேரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 18 ஆயிரத்து 563 என மொத்தம் 30 ஆயிரத்து 123 பேர் பதிவு செய்து உள்ளனர். சிலம்பம்-இறகுபந்து இப்போட்டிகள் தொடக்க நாளில் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்பட்டது. பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்பட்டது.

    தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி பிரிவினர்களுக்கு ஆண்களுக்கான தடகள போட்டிகளும், பெண்களுக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவினர்களுக்கு சிலம்பம் மற்றும் இறகுப் பந்து போட்டிகளும், ஆக்கி போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

    இதில் ஆண்களுக்கு நீச்சல், கால்பந்து போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டது. மேலும் பொதுப் பிரிவினர்களுக்கும் கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாட்டினர். போட்டியில் பங்கேற்ற வீரர்களை மற்ற வீரர்கள் உற்சாகப்படுத்தினர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) (பெண்களுக்கான) கைப்பந்து, மேசைப்பந்து, கபடி, நீச்சல் போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் பொதுப்பிரிவினர்களுக்கு கபடி போட்டிகளும் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப் பிரிவினர் வீரர், வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

    • விருதுநகர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 362 விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் மற்றும் சத்திரிய பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த ஜனவரி 6-ந் தேதி தொடங்கி, ஜனவரி 29-ந் தேதி வரை 17 ஆயிரத்து 362 விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டிகளை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திலும், அதைதொடர்ந்து சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மாணவி களுக்கான கையுந்து பந்து போட்டியையும் கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விளையாட்டின் முக்கியத்துவம், விளையாடுவதனால் என்ன பயன்? என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து, விளையாட்டின் மூலம் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்ள முடியும். இதில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமில்லை.

    இதில் பங்கேற்பதே முதல் வெற்றி என்றும், இந்த விளையாட்டில் நல்ல முறையில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாக வாழ்த்துக்களை கலெக்டர் தெரிவித்தார்.

    கபடி போட்டிகளில் 42 பள்ளி மாணவர் அணிகளும், பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டிகளில் 12 அணிகளும் பங்கேற்றன. பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவி கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்தி றனாளிகள் பங்கேற்கும் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து, கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, மேஜைப்பந்து, நீச்சல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதிபெறுவார்கள்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் இன்று தொடங்கியது
    • 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

    நாகர்கோவில்:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திற னாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ-மாணவி களுக்கான போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று 6-ந்தேதி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் தொடங்கியது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர். சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று போட்டியில் பங்கேற்றனர். கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி, ஆக்கி போட்டி, வாலிபால் போட்டி, டேபிள் டென்னிஸ் போட்டி, கால்பந்து போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் கபடி போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா தொடங்கி வைத்தார். மாவட்ட விளை யாட்டு அதிகாரி ராஜேஷ் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கான போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி வரை விளையாட்டுப்போட்டிகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    • சிவகங்கையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 7-ந் தேதி முதல் தொடங்குகிறது.
    • கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலானவிளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை தடகள விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை போஸ் நகரில் உள்ள பேட்மிட்டன் அகாடமியிலும் நடைபெறும்.

    8-ந் தேதி காலை கபடி, ஆக்கி, கூடைப்பந்து. கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகியவிளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். 9-ந் தேதி கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். 10-ந் தேதி காலை நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், தடகள விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், கபடி, ஆக்கி,கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் ஆண்களுக்கு மட்டும் சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியிலும், இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை பேட்மிட்டன் அகாடமியிலும் நடைபெற உள்ளன.

    11-ந் தேதி காலை நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும், கபடி, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து, கால்பந்து விளையாட்டுப்போட்டிகள் கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு மட்டும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    13-ந் தேதி காலை கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், கிரிக்கெட் போட்டிகள் பொதுப்பிரிவினர் ஆண்களுக்கு மட்டும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. 14-ந் தேதி காலை கிரிக்கெட் போட்டிகள் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு மட்டும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. 15-ந் தேதி காலை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் காரைக்குடிஅழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், இறகுப்பந்து போட்டிகள் பொதுப்பிரிவினர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிவகங்கை பேட்மிட்டன் அகாடமியிலும், பொதுப்பிரிவினர்ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி, கையுந்து பந்து, தடகளம் விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது.

    16-ந் தேதி காலை அரசு ஊழியர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, தடகளம்,கையுந்து பந்து, கபடி, செஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும்,17-ந் தேதி காலை மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, தடகளம்,எறிபந்து, கபடி, adopted volley ball ஆகிய போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது. 20-ந் தேதி காலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கிரிக்கெட் போட்டிகள் காரைக்குடிஅழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், 21-ந் தேதி காலை பள்ளி மாணவிகளுக்கு மட்டும் கிரிக்கெட் போட்டிகள் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

    டென்னிஸ் போட்டிகள் 23-ந் தேதி காலை மாணவர்களுக்கும், 24-ந் தேதி காலை மாணவிகளுக்கும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. பளு தூக்கும் போட்டிகள் 23-ந் தேதி காலை மாணவர்களுக்கும், 24-ந் தேதி காலை மாணவிகளுக்கும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெறும்.

    கடற்கரை கையுந்து பந்து போட்டிகள் 13-ந் தேதி ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் நடைபெறும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள வரும்போது, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், Bonafied சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.

    போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளை யாட்டு வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள www.sdat.tn.gov.in முகவரியில் குழு மற்றும் தனி நபர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பொதுப்பிரிவு 15-35 வயது ஆண்கள், பெண்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து போட்டிகள் நடைபெறும்.

    பள்ளி மாணவ, மாணவிகள் 12-19 வயது கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12-19 வயது டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடைபெறும்.

    கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17-25 வயது கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். மண்டல அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17-25 வயது டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடைபெறும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், பேட் மின்டன், பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கைப்பந்து போட்டி நடைபெறும். மனவளர்ச்சி குன்றி யோருக்கு 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கபடி போட்டி நடைபெறும்.

    அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண், பெண்களுக்கு கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் நடைபெறும். மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1000 வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • அனைத்து ஊராட்சி பகுதியில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் பங்கேற்கும் வகையில் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

    இந்த போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு குழு 21 துறைகள் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் அதிக அளவில் பதிவு செய்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்கள் மற்றும் நகராட்சிகள், தேசிய நாட்டு நலப்பணிகள் மற்றும் நேருயுகவேந்திரா குழுக்கள் அமைத்து போட்டிகள் குறித்த விளம்பர பதாகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து ஊராட்சி பகுதியில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்களும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மற்றும் முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ×