search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசியர்கள்"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • தலைமை ஆசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி தலைமை தாங்கினர்.

    தலைமை ஆசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

    அதனைத் தொடர்ந்து சிறந்த ஆசிரியர்களுக்கு பிள்ளையார் நத்தம் ஊர்மக்கள் சார்பில் பாராட்டு விழாவும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு வழங்கப்பட்டது.

    பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் சேதுராமன், ஊர் தலைவர் குணசேகரன், செயலாளர் குமரேசன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் சுந்தரி கோவிந்தராஜ், பூவாணி கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணசாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×