search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டமன்ற தேர்தல்"

    • ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் பாஜக-வின் தொடர்பு மேலும் வலுவடையும் வகையில் பயணம் இருக்கும்.
    • ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாஜக-வை ஏற்றுக் கொண்டனர்- பாஜக தலைவர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி 19-ந்தேதி (வியாழக்கிழமை) ஸ்ரீநகர் செல்கிறார். அங்கு பாஜக-வினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறது.

    ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் பாஜக-வின் தொடர்பு மேலும் வலுவடையும் வகையிலும், பாஜகவின் தேர்தல் வியூகத்திற்கு முக்கிய முக்கியமானதாகவும் பிரதமர் மோடியின் வருகை இருக்கும் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் பொறுப்பாளர் ராம் மாதவ், பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) அசோக் கவுல், ஸ்ரீநகர் மாவட்ட பாஜக தலைவர் அசோக் பாட் ஆகியோர் ஸ்ரீநகர் அலுவலகத்தில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக-வின் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாஜக-வை ஏற்றுக் கொண்டனர். பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என ராம் மாதவ் தெரிவித்தார்.

    கடந்த முறை பிரதமர் மோடி ஸ்ரீநகர் சென்றிருந்தபோது, தேர்தல் விரைவில் நடைபெறும். மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    பிரதமர் மோடி ஸ்ரீநகர் செல்லும் நிலையில், மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிப்பாரா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    • ஜம்மு-காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் மெகா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
    • 42 வருடங்களுக்கு பிறகு தோடா செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பாஜக வேட்பாளரை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    1982-ம் ஆண்டுக்குப் பிறகு தோடா மாவட்டம் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தில பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    செனாப் பள்ளத்தாக்கான தோடா, கிஷ்த்வார் மற்றும் ராம்பன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 இடங்களுக்கு வருகிற 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் பாஜக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு புத்துணர்வு கொடுக்கும் என பாஜக-வினர் தெரிவித்துள்ளனர்.

    2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பிரதமர் மோடி கிஷ்த்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தோடா மாவட்ட மக்கள் பிரதமர் மோடியை நேரில் பார்க்க ஆர்வமாக இருந்தனர். அதை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணி அமைய இருக்கிறது.

    ஜம்மு-வில் பாஜக 43 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.

    ஜம்மு பகுதி பாஜகவின் செல்வாக்கு மிக்க பகுதியாக விளங்குகிறது. இந்த பிராந்தியத்தில்தான் கடந்து முறை 25 இடங்களில் வெற்றி பெற்றது.

    • கல் எறிதல் சம்பவம், ஐ.எஸ்.ஐஎஸ், பாகிஸ்தான் கொடிகள், கடையடிப்பு இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாகும்.
    • தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின், முதன்முறையாக அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மதசார்பற்ற ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும் என பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறியதாவது:-

    இந்த சட்டமன்றத் தேர்தலில் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதியளிக்கும் அல்லது மரணம் மற்றும் அழிவை உறுதியளிக்கும் ஆகியவற்றில் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்தபோது சொந்த அரசியலமைப்பு கொண்டிருந்தது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு தற்போது ஒருங்கிணைந்த அரசியலமைப்பு உள்ளது.

    மதசார்பற்றதாக மாறிய பின்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். ஒரே கொடியுடனும், கல் எறிதல் சம்பவம், ஐ.எஸ்.ஐஎஸ், பாகிஸ்தான் கொடிகள், கடையடிப்பு இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாகும். தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான். யாசின் மாலிக், ஆசியா அந்த்ராபி அல்லது ஷபீர் ஷாவை சிறையில் இருந்து விடுவிக்கும் நோக்கம் குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.

    ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் தனிப்பட்ட நபர்களை சந்தித்தார். அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என கருதுபவர்கள். இது இந்திய பாராளுமன்ற தீர்மானத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தை மட்டுமு் இழிவுப்படுத்த வில்லை. இந்த தீர்மானத்தை நிறைவேற்றும்போது பாராளுமன்றத்தில் இருந்த அவர்களுடைய முன்னோர்களையும் இழிவுப்படுத்தியுள்ளார்.

    இவ்வாறு சுதான்சு திரிவேதி தெரிவித்தார்.

    • இரண்டு மந்திரிகள், ஒரு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் ராஜினாமா.
    • விசுவாச தொண்டர்கள் ஓரங்கட்டப்படுவதாக துணைத் தலைவர் குற்றச்சாட்டு.

    அரியானாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வேலை செய்து வருகிறது. அதேவேளையில் ஆட்சியை பாஜக-விடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்த முறை பாஜக ஆட்சியை தக்கவைக்க கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணி தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி வருவது அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே இரண்டு மந்திரிகள், எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மந்திரி கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அரியானா மாநில பாஜக-வின் துணைத் தலைவர் சந்தோஷ் யாதவ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

    கட்சிக்கு விசுவாசமாக உழைத்த தொண்டர்களை விட, உழைக்காதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என சந்தோஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், தனது ராஜினாமா கடிதத்தில் "கட்சிக்கான என்னுடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சிகள் கொள்கையை பின்பற்றியுள்ளேன். ஆனால் அடிமட்டத்தில் போராடி, பக்தியுடன் உழைத்து, கட்சியை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர்களை கட்சி புறக்கணித்து வருகிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டும்.

    இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு கட்சிக்காகவும் தங்கள் சட்டமன்றத் தொகுதி மக்களுக்காகவும் உழைக்காத நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது கட்சியினர் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் பரப்பி வருகிறது" சந்தோஷ் யாதவ் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. சந்தோஷ் யாதவ் அட்டெலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால், மத்திய மந்திரி ராவ் இந்தரஜித் சிங்கின் மகள் ஆர்த்தி சிங் ராவிற்கு கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

    கடந்த சனிக்கிழமை முன்னாள் மந்திரி பச்சான் சிங் ஆர்யா பாஜகவில் இருந்து வெளியேறினார். சிஃபிடான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையிலா் ஜனநாயக் ஜனதா கட்சியில் இருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்த குமார் கவுதமிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ராஜினமானா செய்தார்.

    தற்போது சந்தோஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதால் இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அதற்கு முன்னதாக இரண்டு மந்திரிகள், ஒரு எம்எல்ஏ பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் இருந்த ஜம்மு செல்லும் ராகுல், பனிஹால் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
    • அதன்பின் அனந்த்நாக் மாவட்டம் சென்று முன்னாள் மந்திரியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

    முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் இன்று இரண்டு இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    டெல்லியில் இருந்து ஜம்மு வரும் ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் விகார் ரசூல் வாணிக்காக பிரசாரம் மேற்கொள்கிறார். விகார் ரசூல் வாணி பனிஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    அதனைத் தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள டூரு பகுதிக்குச் செல்கிறார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் மந்திரி குலாம் அகமது மிர்-ஐ ஆதரித்து மெகா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இவர் டூரு தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பின்னர் ஸ்ரீநகரில் இருந்து மாலை டெல்லி திரும்புகிறார். இந்த தகவலை ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தலைவர் தரீக் ஹமித் கர்ரா தெரிவித்துள்ளார்.

    • ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் சந்திக்க ராகுல் காந்தி தீவிரம்.
    • இரு கட்சிகளுக்கும் இடையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்.

    அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் காந்தி கருத்து கேட்டார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து பாஜக-வை எதிர்கொள்ள ராகுல் காந்தி தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியானது.

    ராகுல் காந்தியின் கூட்டணி குறித்த கருத்தை ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சங் சிங் வரவேற்றிருந்தார். அத்துடன் மற்றொரு மாநிலங்களவை எம்.பி. ராகவ் சந்திரா காங்கிரஸ் சீனியர் தலைவர் கே.சி. வேணுகோபால் உடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் சந்திப்பு இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இரண்டு கட்ட பேச்சுவார்த்தையின்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரியானாவில் 10 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என்ற அடிப்படையில் 10 இடங்கள் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் ஏழு தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே 90 இடங்களில் 66 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலுக்கு மத்திய தேர்தல் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் தீப் பபாரியா "இரு கட்சிகள் இடையிலான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில்தான் உள்ளது. இன்னும் ஏராளமான விசயங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது 90 இடங்களில் 49 இடங்கள் குறித்து இரண்டு நாட்கள் ஆராயப்பட்டன. மொத்தமாக 66 இடங்களுக்கு வேட்பாளர்கள் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது." என்றார்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, வியாழக்கிழமை இதற்கு தெளிவு கிடைக்கும் என்றார்.

    ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் "கூட்டணி தொடர்பாக, இடங்கள் தொடர்பாக என எந்தவொரு முடிவு என்றாலும், அதை அரவிந்த் கெஜ்ரிவால்தான் எடுப்பார்" என்றார்.

    • அரியானாவில் ஆம் ஆத்மி 90 இடங்களிலும் போட்டியிடும் என கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
    • காங்கிரஸ் தலைவர்களும் தனித்து போட்டியிடும் வகையில் பணியாற்றி வருகின்றனர்.

    அரியானா மாநிலத்தில் 90 சட்டமன்ற இடங்களுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் 5-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பாஜக அரியானாவில் ஆட்சி செய்தி வருகிறது. பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களுக்கு எதிர்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இதனால் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என களத்தில் வேலை செய்து வருகின்றன.

    இதற்கிடையே காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதா? என்பது குறித்து அரியானா காங்கிரஸ் தலைவர்களிடம் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாஜக-வை வெல்ல முடியும் என நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அதேவேளையில் கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு என்ற கேள்வியை புறந்தள்ளினார். மாநிலத்தில் காங்கிரஸ்க்கு வலுவான வேட்பாளர்கள் உள்ளனர். நாங்கள் தனியாக தேர்தலை சந்திப்போம் என்றார்.

    இந்த வருட தொடக்கத்தில் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி 90 இடங்களிலும் போட்டியிடும் என்றார்.

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அரியானா, குஜராத், கோவா, டெல்லி, சண்டிகரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடோ, கார்கி சம்ப்லா-கிளோய் தொடரில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் மாநில தலைவர் உதய் பான் ஹோடல் தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.

    • ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
    • முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 90 இடங்களுக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.

    தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. 5 இடங்களில் தனித்தனியாக களமிறங்குகின்றன.

    இதற்கிடையே, முதல் கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், தேசிய மாநாடு கட்சி சார்பில் 32 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. இதில் உமர் அப்துல்லா கண்டர்பால் தொகுதியிலும், தன்வீர் சாதிக் ஜடிபால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக 90 தொகுதிகளில் 44-க்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
    • சிறிது நேரத்தில் அதை திரும்பப் பெற்று 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.

    இதற்கிடையே நேற்று தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. ஐந்து இடங்களில் தனித்தனியாக களம் இறங்குகின்றன.

    அதேவேளையில் பாஜக நேற்று காலை 44 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. உடனடியாக அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது. பின்னர் முதற்கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    பாஜக அலுவலகத்தில் நேற்று பர்னிச்சர்கள் உடைக்கப்பட்டன. அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது. ஆனால், இதில் ஆச்சர்யம் படுவதற்கு ஏதுமில்லை. நீங்கள் திடீரென மூத்த வீரர்கள் அனைவரையும் நீக்கும்போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும்.

    பாஜக கட்சி மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. இதனால் சங்கடத்தை பாருங்கள். ஒரு கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு 10 நிமிடத்திற்குள் அதை திரும்பப்பெற்ற பின், மீண்டும் அதில் இருந்து குறைந்த அளவிலான எண்ணிக்கை கொண்ட பட்டியலை வெளியிட்டதை இதுவரை நான் பார்த்ததே இல்லை.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும், 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    • முதலில் 44 தொகுதிகளுக்கான பட்டியலை வெளியிட்டிருந்தது.
    • தற்போது 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன. இன்று காலை பாஜக 44 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    அறிவித்த சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது. அதற்குப்பதிலாக புதிய வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

    ராஜ்போராவில் ஸ்ரீஅர்ஷித் பாத், ஷோபியானில் ஸ்ரீஜாவித் அகமது காத்ரி, அனந்த்நாக் தொகுதியில் சயத் வாசாஹாத், தோடாவில்வில் ஸ்ரீ கஜாய் சிங் ராணா உள்ளிட்டோர் போட்யிடுகிறார்கள் என அறிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடைசியாக 2014-ல் தேர்தல் நடைபெற்றது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. தனது கோட்டையாக விளங்கும் ஜம்முவில் அந்த கூட்டணியின் திட்டத்தை முறியடிக்க பாஜக அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

    • காங்கிரஸ்- தேசிய மாநாடு கட்சி இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
    • நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வர வேண்டிய கட்டாயம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

    90 தொகுதிகளிலும கூட்டணியாக போட்டியிடுவோம் என பரூக் அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி பெறவில்லை.

    காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உறுதி செய்யாததால் அறிவிப்பை தள்ளிப் போட்டுள்ளது.

    நாளையுடன் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இதனால் உடனடியாக தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் கே.சி. வேணுகோபால், சல்மான் குர்ஷித் ஆகியோரை ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இருவரும் தேசிய மாநாடு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள. பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    முன்னதாக, காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் தேசிய தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டணி உருவானது. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து இடங்களை கொடுக்க தேசிய மாநாடு கட்சி தயாராக உள்ளது. ஜம்மு பகுதயிில் 28 முதல் 30 இடங்களை கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு கட்சியின் கோட்டையாக விளங்கும் சில தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது.

    • ஜம்மு-காஷ்மீரில் 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
    • கோட்டையாக விளங்கும் ஜம்முவில் காங்கிரஸ் கூட்டணியை முறியடிக்க திட்டம்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன. இன்று காலை பாஜக 44 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் அறிவித்த வேகத்தில் அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றுள்ளது. அதற்குப்பதிலாக புதிய வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

    முன்னதாக, 44 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை வெளியிட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 15 இடங்களுக்கும், 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 10 இடங்களுக்கும் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 19 இடங்களுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    ஜம்முவில் உள்ள பாம்போர், ஷோபியான், அனந்த்நாக் மேற்கு, அனந்த்நாக் உள்ளிட்ட ஜம்மு பகுதி தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை வெளியிட்டது.

    அரவிந்த் குப்தா, யுத்வீர் சேதி முறையே ஜம்மு மேற்கு மற்றும் ஜம்மு கிழக்கு தொகுதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தேவேந்திர சிங் ராணா நக்ரோட்டா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அர்ஷித் பாத் ராஜ்போரா தொகுதியிலும், ஜாவித் அகமது குவாத்ரி ஷோபியான் தொகுதியிலும், முகமது ரபீக் வாணி அனந்த்நாக் மேற்கு தொகுதியிலும், சயத் வசாஹாத் அனந்த்நாக் தொகுதியிலும், சுஷ்ரி ஷகுன் பரிஹார் கிஷ்த்வார் தொகுதியும், கஜய சிங் ராணா தோடா தொகுதியிலும் நிறுத்தப்படுவதாக தெரிவித்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடைசியாக 2014-ல் தேர்தல் நடைபெற்றது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. தனது கோட்டையாக விளங்கும் ஜம்முவில் அந்த கூட்டணியின் திட்டத்தை முறியடிக்க பாஜக அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

    ×