search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேப்பிட்டல்ஸ்"

    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு.
    • டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் கொடுத்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 பந்துகளில் 5 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் 16 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.

     


    போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஹெட்மயர் 7 பந்துகளில் 14 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முகேஷ் குமார் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் கொடுத்தார். இவர் 34 பந்துகளில் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 23 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார்.

     


    பிறகு களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 28 ரன்களை குவித்தார். இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் பொரெல் 9 ரன்களில் ஆட்டமிழக்க அக்சர் பட்டேல் களத்துக்கு வந்தார். ட்ரிஸ்டன் டப்ஸ்-உடன் பொறுப்பாக ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ராஜஸ்தான் சார்பில் நான்ட்ரி பர்கர் 2 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆவேஷ் கான் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இந்த சீசனில் ராஜஸ்தான் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய போட்டி ஜெய்பூரில் நடைபெறுகிறது.
    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 பந்துகளில் 5 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் 16 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.

    இதன் காரணமாக ராஜஸ்தான் அணி துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. இதன் பிறகு ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ரியான் பராக் நிதானமாக ஆடினார். அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பிறகு வந்த ஜூரெல் 12 பந்துகளில் 20 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஹெட்மயர் 7 பந்துகளில் 14 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முகேஷ் குமார் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர். 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

    • இன்றைய போட்டி ஜெய்பூரில் நடைபெறுகிறது.
    • டெல்லி அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்த தொடரில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளன. இதில் ராஜஸ்தான் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியது.

    முதல் போட்டியில் பெற்ற வெற்றியை தொடர ராஜஸ்தான் அணியும், இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் டெல்லி அணியும் களமிறங்குகிறது.

    • 2016-ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார்.
    • 2018 சீசனில் 14 போட்டிகளில் 684 ரன்கள் குவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது.

    இதில் ரிஷப் பண்ட் விளையாட இருக்கிறார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100-வது போட்டியில் விளையாட இருக்கிறார். மேலும், டெல்லி அணிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார்.

    ரிஷப் பண்ட் 99 போட்டிகளில் விளையாடி 2,856 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 34.40 ஆகும். ஸ்டிரைக் ரேட் 147.90 ஆகும். 99 இன்னிங்சில் 15 அரைசதம், ஒரு சதம் விளாசியுள்ளார். ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் அடித்தது அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    டேவிட் வார்னர் டெல்லி அணிக்காக 2,433 ரன்கள் அடித்துள்ளார். சேவாக் 2,382 ரன்கள் அடித்துள்ளார்.

    2016-ல் 10 போட்டிகளில் 198 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். 2017-ல் 14 போட்டிகளில் 366 ரன்கள் அடித்துள்ளார். 2018 சீசன் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அதில் 14 போட்டிகளில் 684 ரன்கள் குவித்தார். சராசரி 52.62 ஆகும். ஸ்டிரைக் ரேட் 173.6 ஆகும்.

    • சாம் கர்ரன் 47 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லிவிங்ஸ்டன் 21 பந்தில் 38 விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசன் 2-வது போட்டியில் (இன்றைய முதல் போட்டி) பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் 16 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ 9 ரன்னில் ரன்அவுட்டாகி ஏமாற்றம் அடைந்தார்.

    அடுத்து வந்த பிராப்சிம்ரான் சிங் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜித்தேஷ் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 11.3 ஓவரில் 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் பஞ்சாப் அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான விளையாடியது. குறிப்பாக சாம் கர்ரன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் 3-வது பந்தில் சாம் கர்ரன் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் ஷஷாங்க் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஹர்ப்ரீத் பார் கொடுத்த கேட்சை வார்னர் பிடிக்க தவறினார். இதனால் அந்த பந்தில் பஞ்சாப் அணிக்கு இரண்டு ரன் கிடைத்தது.

    இந்த ஓவரில் கலீல் அகமது 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சுமித் குமார் கடைசி ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் வைடாக வீசினார். 2-வது பந்தை லிவிங்ஸ்டன் சிக்கசருக்கு தூக்க பஞ்சாப் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்தார்.
    • அபிஷேக் பொரேல் 10 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் தவான் பந்து வீச்சை தேர்வை செய்தார்.

    அதன்படி டெல்லி அணியின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். என்றபோதிலும் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. டேவிட் வார்னர் 21 பந்தில் 29 ரன்களும், மிட்செல் மார்ஷ் 12 பந்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த ஷாய் ஹோப் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    ரிஷப் பண்ட் அவுட்டாகும்போது டெல்லி அணி 12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் டெல்லி அணியின் ரன் குவிக்கும் வேகத்தில் தடை ஏற்பட்டது.

    அக்சார் பட்டேல் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அபிஷேக் பொரேல் அதிரடியாக விளையாட டெல்லி அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.

    அபிஷேக் பொரேல் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் விரட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பொரேல் 10 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ரிஷப் பண்ட்

    ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரில 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார். முதல் 3 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ரிக்கி புய், 6. டிரிஸ்டான் ஸ்டப்ஸ், 7. அக்சார் பட்டேல், 8. சுமித் குமார், 9. குல்தீப் யாதவ், 10. கலீல் அகமது, 11. இஷாந்த் சர்மா.

    பஞ்சாப் கிங்ஸ் அணி விவரம்:-

    1. தவான், 2. பேர்ஸ்டோ, 3. சாம் கர்ரன், 4. லிவிங்ஸ்டன், 5. ஜிதேஷ் சர்மா, 6. ஹர்ப்ரீத் பிரார், 7. ஹர்ஷல் பட்டேல், 8. ரபடா, 9. ராகுல் சாஹர், 10. அர்ஷ்தீப் சிங், 11. ஷஷாங்க் சிங்.

    • பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, கர்ரன், ரபடா ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ரிஷப் பண்ட் வழி நடத்துகிறார்.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி சண்டிகரில் மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் தவான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வை செய்துள்ளார். டெல்லி அணியில் ரிஷப் பண்ட் களம் இறங்கியுள்ளார். 14 மாதங்களுக்குப் பிறகு அவர் போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, கர்ரன், ரபடா ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப் ஸ்டப்ஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ரிக்கி புய், 6. டிரிஸ்டான் ஸ்டப்ஸ், 7. அக்சார் பட்டேல், 8. சுமித் குமார், 9. குல்தீப் யாதவ், 10. கலீல் அகமது, 11. இஷாந்த் சர்மா.

    பஞ்சாப் கிங்ஸ் அணி விவரம்:-

    1. தவான், 2. பேர்ஸ்டோ, 3. சாம் கர்ரன், 4. லிவிங்ஸ்டன், 5. ஜிதேஷ் சர்மா, 6. ஹர்ப்ரீத் பிரார், 7. ஹர்ஷல் பட்டேல், 8. ரபடா, 9. ராகுல் சாஹர், 10. அர்ஷ்தீப் சிங், 11. ஷஷாங்க் சிங்.

    • ரிஷப் பண்ட் உடற்தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்திருந்தது.
    • டெல்லி அணியில் விளையாடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கேப்டனாக நியமனம்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். 26 வயதான இவர் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்து சுமார் 14 மாதங்களுக்குப் பின் போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் போர்டின் தேசிய அகாடமியில், காயத்தில் இருந்து மீண்டு உடற்திறன் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐ தெரிவித்தது.

    இதனால் ரிஷப் பண்ட் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவது உறுதியானது. இந்த நிலையில் 2024 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ரிஷப் பண்ட் காயம் காரணமாக 2023 சீசன் முழுவதும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சேர்மனும், இணை-உரிமையாளருமான பார்த் ஜிண்டால் கூறுகையில் "ரிஷப் பண்ட்-ஐ எங்கள் அணியின் கேப்டனாக வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய ஆர்வத்தொடு, உற்சாகத்துடன் 2024 சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் எங்கள் அணியுடன் வருவதை பார்க்க காத்திருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

    • லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது.

    புதுடெல்லி:

    இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    3-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில், 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதி போட்டிக்கு வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
    • நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

    மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. மகளிர் ஐபிஎல் தொடரில் இம்முறை புதிய சாம்பியனாக சாதனை படைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லுமாறு மகளிர் ஆர்சிபி அணிக்கு ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இன்று நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 2 பவரான அணிகள் மோதுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    அதைப் பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. இறுதி போட்டிக்கு வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். தனி நபராகவும் அணியாகவும் சேர்ந்து இத்தொடரில் அசத்திய இந்த இரண்டு அணிகளும் இறுதிபோட்டிக்கு வருவதற்கு தகுதியானவர்கள்.

    ஆர்சிபி அணிக்காக ஒரு சிறப்பு ஆதரவு தருகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். கோப்பையை வீட்டுக்கு கொண்டு வந்து இந்த மாதத்தின் பிற்பகுதியில் துவங்கும் ஐபிஎல் தொடரில் ஆடவர் ஆர்சிபி அணிக்கு உத்வேகத்தை கொடுங்கள்.

    வாழ்த்துக்கள் நண்பர்களே. நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    முன்னதாக மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோப்பையை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
    • இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

    புதுடெல்லி:

    இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    3-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில், 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

    மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

    அந்த அணியில் பேட்டிங்கில் மெக் லானிங் (4 அரைசதம் உள்பட 308 ரன்கள்), ஷபாலி வர்மா (265 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (235 ரன்), அலிஸ் கேப்சியும் (230 ரன்), பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் மரிஜானா காப் (11 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர்கள் ஜெஸ் ஜோசசென் (11 விக்கெட்), ராதா யாதவ் (10 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டேவும் (தலா 8 விக்கெட்) அசத்தி வருகிறார்கள்.

    ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 தோல்வி) 3-வது இடம் பிடித்தது. எலிமினேட்டர் சுற்றில் 5 ரன் வித்தியாத்தில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் நடப்பு தொடரில் அதிக ரன் குவித்தவரான ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி (2 அரைசதத்துடன் 312 ரன்கள்) ஜொலித்து வருகிறார். கேப்டன் மந்தனா (269 ரன்), ரிச்சா கோஷ் (240 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஆஷா சோபனா (10 விக்கெட்), ஸ்ரேயங்கா பட்டீல், சோபி மோலினெக்ஸ் (தலா 9 விக்கெட்) வலுசேர்க்கிறார்கள்.

    கோப்பையை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் லேனிங் 41 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார்.
    • ஜெஸ் ஜோனாஸ்சன் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான லேனிங் 41 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார். அலிஸ் கேப்சி 17 பந்தில் 27 ரன்களும், சதர்லேண்டு 12 பந்தில் 20 ரன்களும் அடித்தனர். குஜராத் டைட்டன்ஸ் வீராங்கனை மேக்னா சிங் 4 ஓவரில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 53 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ஆஷ்லே கார்டனர் 31 பந்தில் 40 ரன்கள் அடித்தார். என்றாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜெஸ் ஜோனாஸ்சன் 3 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    ஜெஸ் ஜோனாஸ்சன்

    இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 போட்டிகள் முடியவில் 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 2-வது இடத்தையும், உ.பி. வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    ×