search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் தின பேரணி"

    • தொண்டியில் உலக மகளிர் தின பேரணி நடந்தது.
    • இந்த பேரணியானது தொண்டி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை மரைன் போலீஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உலக பெண்கள் தினத்தையொட்டி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடந்தது. ராமநாதபுர மாவட்ட மக்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு பொருளாளர் ரூபி தலைமை வகித்தார்.

    தமிழக பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் மாநில தலைவி ராமலெட்சுமி முன்னிலை வகித்தார். எஸ்.எம்.எஸ்.எஸ்.எஸ் இயக்குநர் பிரிட்டோ ஜெயபாலன் வாழ்த்திப் பேசினார். தமிழக பெண்கள் கூட்டமைப்பின் துணை தலைவி தங்கச்சிமடம் ராஜேஸ்வரி, மாவட்ட மக்கள் அமைப்பு துணை தலைவி செங்கோல்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பரமக்குடி ஒன்றிய மக்கள் அமைப்பின் தலைவி ரெஜினா அனைவரையும் வரவேற்றார். மண்டபம் ஒன்றிய மக்கள் அமைப்பு உறுப்பினர் கர்லோபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் முதுகுளத்துார் மக்கள் அமைப்பு உறுப்பினர் இருதயராணி நன்றி கூறினார்.

    டெய்ஸி அருள்ஜோதி உட்பட 8 யூனியனைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பெண்கள் பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது தொண்டி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை மரைன் போலீஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

    • தொன் போஸ்கோ கல்லூரியில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது.
    • உதவிப்பேராசிரியர் ஆண்டனி கிஷோர், உதவிப் பேராசிரியைகள், மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் தொன் போஸ்கோ கல்லூரியில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது.

    நிகழ்விற்குக் கல்லூரிச் செயலர் எட்வின் ஜார்ஜ் தலைமையுரையாற்றினார்.

    முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, முன்னிலை வகித்தார் . நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தருமபுரி மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சண்முகப்பிரியா மற்றும் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு இன்றைய சூழலில் பெண் அனைத்துத் துறைகளிலும் கல்வியின் அவசியத்தையும், பெண்கள் பெற்றிருக்கின்ற வளர்ச்சி குறித்தும், எதிர்காலச் சமூகத்தில் பெண்கள் அடைய வேண்டிய முன்னேற்றம் குறித்தும் சிறப்புரையாற்றினர்.

    இந்நிகழ்வில் பொருளாளர் அருட்தந்தை ஜான், சமூகப் பணித்துறை உதவிப்பேராசிரியர் ஆண்டனி கிஷோர், உதவிப் பேராசிரியைகள், மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மகளிர் தினத்தையொட்டி பேச்சு, கவிதை, ஓவியம், கட்டுரை ஆகிய போட்டிகள் கல்லூரி வளாகத்திலும், மனிதச்சங்கிலி பேரணி சோகத்தூர் கூட்டுச்சாலை முதல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. இப்பேரணியில் கல்லூரி மாணவிகளும், அக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து சமூகப்பணித்துறை மாணவ, மாணவியரின் பெண் வாழ்வியல் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது. நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் புல முதன்மையர் பிரவீனா மற்றும் கல்லூரியின் மகளிர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் லிலிதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

    • பேரணியில் ஏந்தி செல்லக்கூடிய பதாகைகள் மற்றும் பேனர்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றன.
    • மகளிர் தின எதிர்ப்பு பேரணிகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை.

    லாகூர்:

    பாகிஸ்தானில் 2018ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முக்கிய நகரங்களில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். பேரணியில் பங்கேற்கும் பெண்கள் ஏந்தி செல்லக்கூடிய பதாகைகள் மற்றும் பேனர்கள் சர்ச்சைகளையும், பாதுகாப்பு சிக்கலையும் ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

    பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று பாகிஸ்தானில் இரண்டு வெவ்வேறு குழுக்களால் பேரணிகள் நடத்தப்படும். பெண் உரிமைகளுக்காக பெண் உரிமை ஆர்வலர்கள் பேரணி நடத்துவார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதக்குழுக்கள் ஹயா என்ற பெயரில் எதிர்ப்பு பேரிணியை நடத்தும்.

    இந்த ஆண்டு பெண் உரிமைக்கான பேரணியை லூகூர் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். இது தங்களின் உரிமைகளை மறுக்கும் செயல் என்று மகளிர் தின பேரணியின் ஒருங்கிணைப்பாளர் கூறி உள்ளார். அதேசமயம், மகளிர் தின எதிர்ப்பு பேரணிகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை. 

    ×