என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நியூசிலாந்து இலங்கை தொடர்"
- 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
- தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரை சதம் கடந்து அசத்தினார்.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரை சதமடித்தார். அவர் 67 ரன்னில் அவுட்டானார். டேவன் கான்வே 30 ரன்னில் வீழ்ந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 165 ர்ன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 40 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை சார்பில் லஹிரு குமாரா, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களை குவித்தது.
- நியூசிலாந்து சார்பில் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் மேத்யூஸ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் 7000 ரன்களை எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் முறியடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் இடம் பெற்றிருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்நிலையில் இலங்கை அணியின் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யாவின் சாதனையை மேத்யூஸ் முறியடித்துள்ளார்.
ஜெயசூர்யா 110 டெஸ்டில் 6973 ரன்கள் எடுத்த நிலையில், மேத்யூஸ் 101 டெஸ்டில் 7000 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் 13 சதம், 38 அரைசதங்களை அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் குமார் சங்ககரா (12,400) முதலிடத்திலும், ஜெயவர்த்தனே (11,814) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
- அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 83 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார்.
- நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் ஹென்றி, பிரேஸ்வெல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா முன்னேறிய நிலையில் 2-வது அணியாக முன்னேற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று அகமதாபாத்தில் தொடங்கி நடந்துவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஜெயித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.
ஒருவேளை இந்திய அணி இந்த போட்டியில் தோற்று, இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்தால் இலங்கை அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி இந்த டெஸ்ட்டில் தோற்று, இலங்கை அணி நியூசிலாந்திடம் ஒரு டெஸ்ட்டில் தோற்றால், இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.
இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதே நாளில்தான் இலங்கை - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் தொடங்கியது.
இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான திமுத் கருணரத்னே அரைசதம் அடித்தார். ஆனால் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3-ம் வரிசையில் இறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 83 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார்.
அதன்பின்னர் ஆஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்களும், தினேஷ் சண்டிமால் 39 ரன்களும் அடித்தனர். டிக்வெல்லா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை எடுத்துள்ளது.
நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் ஹென்றி, பிரேஸ்வெல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்