search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் கொலை"

    • பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் கிரண் (வயது26). இவர் தேங்காய் வெட்டும் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் சுற்றித்திரிந்த நாயை பிடித்து தரையில் அடித்து கொன்றுள்ளார்.

    இதனை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி நான் ஏற்கனவே கொலை வழக்கில் உள்ளே சென்று வந்தவன் என மிரட்டி உள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் கிரண் சிறைச்சாலையில் இருக்கும்போது அந்த நாய் அவரது தாயை கடித்ததாவும் இதனால் ஆத்திரத்தில் இருந்த தான் அந்ததெருநாயை தேடி பிடித்து அடித்து கொன்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.

    • கோபம் அடைந்த சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி வளர்த்து வந்த நாயை கத்தியால் குத்தினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. டிரைவர். இவர் நாய் ஒன்று வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த நாய் அடிக்கடி சாலையில் செல்வோரை குரைத்து மிரட்டி அச்சுறுத்திவந்ததாக தெரிகிறது.மேலும் வாகனங்களில் செல்லும் போது அதன் முன்பு நின்றும் குரைத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அதே பகுதியைசேர்ந்த சங்கர், பிரபாகரன், ரோகித்த ஆகியோர் ராமமூர்த்தியிடம் கூறினர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி வளர்த்து வந்த நாயை கத்தியால் குத்தினர். மேலும் அதன் கழுத்தையும் அறுத்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த நாய் இறந்து போனது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தினேஷ் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்.
    • போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேஷை கைது செய்ய தேடி வருகின்றனர்.

    சென்னிமலை:

    தேனியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் புதுசாக ஒரு செருப்பு வாங்கினார். அந்த செருப்பில் அவர் வளர்த்து வந்த நாய் அடிக்கடி இயற்கை உபாதை கழித்தது. இதையடுத்து அவர் அந்த நாயை அடித்து கொன்று விட்டார்.

    பின்னர் இறந்த நாயின் போட்டோவை தனது முகநூலில் பதிவிட்டு அதில் அடிக்கடி எனது புது செருப்பில் நாய் இயற்கை உபாதை கழித்ததால் போட்டு தள்ளிவிட்டேன். மேலும் தயவு செய்து என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க. அந்த நாயால் ரொம்ப அவதிபட்டேன், பிளீஸ் என்று பதிவிட்டு இருந்தார். மேலும் முகநூலில் பதிவான இந்த போட்டோவை ஒரு வாட்ஸ் அப் குரூப்பிலும் பதிவிட்டு இருந்தார்.

    இதை பார்த்த ஈரோடு பழைய பாளையத்தைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேஷை கைது செய்ய தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×