search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்சி தேர்தல்"

    • பாஜக கூட்டணி 9 வேட்பாளர்களை நிறுத்தியது.
    • 11 இடங்களுக்கான தேர்தலில் பாஜக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    மகாராஷ்டிர மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தம் 11 இடங்களுக்கு 12 பேர் போட்டியிட்டனர். இதனால் பலத்த போட்டி நிலவியது. கட்சி மாறி வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு கட்சிகளும் தெரிவித்தன.

    இருந்த போதிலும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மாறி வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாயுதி (பாஜக, ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி 9 வேட்பாளர்களை நிறுத்தியது. 9 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்ரேயின் சிவசேனாவின் மகா விகாஸ் கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    ஒவ்வொரு வேட்பாளர்களும் வெற்றி பெற 22.76 வாக்குகள் தேவை. பாஜக வேட்பாளர்கள் பங்கஜ முண்டே, யோகேஷ் திலகர், பரினாய் புகே, அமித் கோர்கே ஆகியோர் தலா 26 வாக்குகளை பெற்றனர். ஜெயந்த் பாட்டில் 8 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் ஷிவராஜ்ராவ் கார்ஜே 24 வாக்குகள் பெற்றார்.

    பாஜக வேட்பாளர்களான பங்கஜ முண்டே, யோகேஷ் திலகர், பரினாய் புகே, அமித் கோர்கே, சதாபாயு கோட் ஆகியோரும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் விடேகார், ஷிவராஜ் ராவ் கார்ஜே ஆகுியோரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவின் குருபால் துமானே, பவனா கவாலி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    காங்கிரஸ் கட்சியின் பிரத்ன்யா ராஜீவ் சதேவ், மிலிந்த் நர்வேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • தெலுங்கு தேசம் கட்சியினர் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
    • அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே 15 கிராம் எடையுள்ள வெள்ளிக்கட்டிகளை மூட்டை மூட்டையாக வாகனங்களில் எடுத்துச் சென்றதாக நாடாளுமன்ற தொகுதி தலைவர் சீனிவாச ராவ் குற்றம் சாட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நாளை எம்.எல்.சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் மெஜஸ்டிக் டவரில் உள்ள 101-வது பிளாட்டில் மூட்டை மூட்டையாக ஆயிரக்கணக்கில் வெள்ளி கட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக புகார் எழுந்தது.

    இந்த பிளாட் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி வேட்பாளர் சீதம் ராஜு சுதாகரின் அலுவலகம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பரவியதால் நேற்று மாலை 6 மணி அளவில் தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் செய்தனர். ஆனால் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் போலீசார் சுமார் 5 மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ஆனால் அவர்கள் அலுவலகத்தில் உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டு இருந்தனர். இதனால் அதிகாரிகள் மீது தெலுங்கு தேசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த தெலுங்கு தேசம் முன்னாள் எம்எல்ஏ காந்தி பாஜு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் அலுவலகத்துக்கு வெளியே குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

    இதையடுத்து இரவு 10.30 மணிக்கு ஆய்வுக்குழுவினர் வந்து அலுவலகத்திற்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு வெறும் துண்டு பிரசுரங்கள் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே 15 கிராம் எடையுள்ள வெள்ளிக்கட்டிகளை மூட்டை மூட்டையாக வாகனங்களில் எடுத்துச் சென்றதாக நாடாளுமன்ற தொகுதி தலைவர் சீனிவாச ராவ் குற்றம் சாட்டினார்.

    ×