search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமாள் சிலை"

    • கோவில் கோசலராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
    • கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது நகலூர் கிராமம். இங்கு கலியுக ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோசலராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

    நகலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தனர். இந்த கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கோசலராமன் திடீரென கோவிலுக்குள் சென்று மூலவரான ரங்கநாதர் சாமி சிலை மீது அமர்ந்து தான் கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

    அதனைத்தொடர்ந்து அங்கு இருக்கும் பூசாரி ஒருவர் கோசலராமன் மீது பாலை ஊற்றி பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமாள் சிலை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் வாசல் கதவு திறக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பவள வண்ண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    கருட சேவை நிகழ்ச்சியின்போது பல்லக்கை தூக்கியபோது அதன் தண்டு உடைந்து பெருமாள் சிலை கீழே சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெருமாள் சிலை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பட்டாச்சாரியார் முரளிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பெருமாள் சிலை சரிந்ததும் உடனடியாக கோவில் வாசல் மூடப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் வாசல் கதவு திறக்கப்பட்டது.

    மீண்டும் கருட வாகனத்தில் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • கோவில் கட்டப்பட்ட போது இருந்த கிராம பஞ்சாயத்து சம்மந்தமான தகவல்கள் தங்கம் மற்றும் செம்பு தகடுகளில் பதிக்கப்பட்டு இருந்தது.
    • வரதராஜ பெருமாள் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    இதனால் நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வருகின்றனர். காளஹஸ்தி சிவன் கோவிலுடன் இணைந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று புனரமைப்பு பணியின் போது மூலவர் வரதராஜ பெருமாள் சிலை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றினர்.

    அப்போது மூலவர் சிலையின் அடிப்பகுதியில் 37 தங்க தகடுகள், 3 லட்சுமி உருவம் பதித்த தங்க நாணயங்கள், 7 செம்பு தகடுகள் என ஏராளமான நவரத்தின கற்கள் இருந்தன.

    இந்த நவரத்தின கற்கள் விலை உயர்ந்தது என அதிகாரிகள் கூறினர்.

    இதனை கண்டு திடுக்கிட்ட அதிகாரிகள் அவற்றை மீட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவில் கட்டப்பட்ட போது இருந்த கிராம பஞ்சாயத்து சம்மந்தமான தகவல்கள் தங்கம் மற்றும் செம்பு தகடுகளில் பதிக்கப்பட்டு இருந்தது.

    தங்கம், நவரத்தின கற்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இதையடுத்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு பூஜை செய்யப்பட்டு. பாலாலய பிரகாரத்தில் வைக்கப்பட்டது.

    வரதராஜ பெருமாள் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. பணிகள் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    ×