என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏடிகே மோகன் பகான்"
- ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
- இதில் பெங்களூரு அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி கோப்பை வென்றது.
கொல்கத்தா:
11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான் அணியும், பெங்களுரு எப்.சி அணியும் மோதின. பரபரப்பாக நடந்த போட்டியின் 14வது நிமிடத்தில் டிமிட்ரி பெட்ராடஸ் முதல் கோல் அடித்தார்.
முதல் பாதியின் முடிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 5வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 78வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதற்கு பதிலடியாக மோகன் பகான் அணியின் டிமிட்ரி பெட்ராடஸ் 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனானது.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்