search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேப்ப மரம்"

    • கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.
    • வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

    நம்பியூர் அடுத்துள்ள பருத்திக்காட்டு பாளையத்தில் சிறிய அளவிலான விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு சென்று பார்த்த போது, மரத்தின் உயரமான கிளையில் இருந்து அதிக அளவில் பால் வடிவது கண்டு ஆச்சரியமடைந்தனர்.

    விநாயகர் கோவில் அருகே உள்ள வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவது குறித்து தகவல் அறிந்த அருகில் உள்ள கிராம மக்களும் வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழலாக நிலவியது.

    • மலர்கள் கடுமையான வயிற்றுவலியை போக்கும் குணம் கொண்டவை.
    • பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமப்படுத்த வேப்பம் பூ பயன்படுகிறது.

    வேப்ப மரமும் வேப்பிலையும் பராசக்தியின் மறு அம்சமாக கருதப்படுகிறது.

    தமிழ்நாட்டில் எல்லா அம்மன் கோவில்களிலும் வேம்பு நிச்சயம் இருக்கும்.

    வேப்பமரத்தை அம்மனாக கருதி வழிபடும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

    இதனால் தான் வீட்டில் யாருக்காவது அம்மை நோய் கண்டிருந்தால் வாசலில் சிறிது வேப்ப இலையை சொருகி வைத்திருப்பார்கள்.

    பெரும்பாலான அம்மன் தலங்களில் வேப்ப மரம் தல விருட்சமாக இல்லாவிட்டாலும் கூட வேப்ப இலையை பக்தர்கள் நிறைய பயன்படுத்துகிறார்கள்.

    பக்திக்கு மட்டுமல்ல. தினசரி வாழ்வுக்கு வேப்ப இலை பெரிதும் பயன்படுகிறது.

    வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து, உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணையில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும்.

    அம்மை கண்டவர்களை சுற்றி வேப்பிலை கொத்துக்களை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும், கிருமியும் அண்டாது.

    தென்னிந்திய சமையலில் வேப்பம் பூக்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

    தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பு அன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம் பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்வார்கள்.

    மலர்கள் கடுமையான வயிற்றுவலியை போக்கும் குணம் கொண்டவை.

    பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமப்படுத்த வேப்பம் பூ பயன்படுகிறது.

    ஒரு கைப்பிடி அளவு வேப்பம் பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமப்படும்.

    வேப்பம் பூவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு மற்றும் குழம்பு, மிளகு ரசம் தயார் செய்யும் போது சிறிது வேப்பம்பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிற்று உப்பிசம், பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும்.

    கல்லீரல் பாதுகாக்கப்படும்.

    வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக ஏற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம் போன்ற தொல்லைகள் நீங்கும்.

    உலர்ந்த வேப்பம் பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.

    • வேப்ப மரத்தில் திடீரென்று பால் வடிவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    • தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் சாலை ஓரத்தில் பழமையான வேப்ப மரம் ஒன்று உள்ளது.

    இந்த வேப்ப மரத்தில் திடீரென்று பால் வடிவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் அதை செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் அந்த வேப்ப மரத்தை சுற்றி மஞ்சள் தெளித்து வேப்பமரம் முழுவதும் சந்தனத்தை பூசி அதில் குங்குமமும் வைத்து பத்தி, கற்பூரம் ஏற்றி அதை பக்தியுடன் வழிபட தொடங்கினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வேப்பமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
    • வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை மக்கள் ஆர்வமுடன் தண்ணீ பாட்டிலில் பிடித்து செல்கின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆத்தூர் கிராமத்தில், கோபால் என்பவருக்கு சொந்தமான வேப்பமரத்தில் பால் போன்ற திரவம் இன்று காலை முதல் வெளி வந்தது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக சென்று வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை வியப்புடன் கண்டு வருகின்றனர்.

    இதையடுத்து அந்த வேப்பமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை அந்தப் பகுதி மக்கள் ஆர்வமுடன் தண்ணீ பாட்டிலில் பிடித்து செல்கின்றனர்.

    மேலும் இதனை அறிந்த சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக வந்து வேப்பமரத்தை வழிபட்டு, பாலை பிடித்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. 

    ×