search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ்- 2 தேர்வு"

    • பிளஸ்-2 தேர்வு எழுதிய 233 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவி மாரிச்செல்வி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. பிளஸ்-2 தேர்வு எழுதிய 233 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18 மாணவர்கள் 550-க்கு மேல், 68 மாணவர்கள் 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றுள்ளனர். மாணவி மாரிச்செல்வி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்று தென்காசி மாவட்ட அளவில் 3-ம் இடமும், சங்கரன்கோவில் தாலுகா அளவில் முதலிடமும், பள்ளி அளவில் முதலிடமும் பெற்று பெருமை சேர்த்துள்ளார். மாணவி பெற்ற மதிப்பெண்கள் பாடவாரியாக தமிழ்-98 ,ஆங்கிலம்-97, இயற்பியல்-99 மற்றும் வேதியியல் ,உயிரியல் ,கணிதம் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    மாணவி பிரீத்தி வர்ஷினி 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். பாடவாரியாக மாணவி பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-98, ஆங்கிலம்-97, உயிரியல்-99, கணிதம்-99, இயற்பியல் மற்றும் வேதியல் பாடத்தில் 100-க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி யாமினி பிரியா மற்றும் பிரவீன் குமார் இருவரும் 600-க்கு 588 மதிப்பெண் பெற்று பள்ளியில் 3-ம் இடம் பெற்றுள்ளனர். பாட வாரியாக முதல் மதிப்பெண் தமிழ்-98, 4 பேர் ஆங்கிலத்தில் 97 மதிப்பெண், 7 பேர் கணிதத்தில் 100-க்கு100 , ஒரு மாணவர் இயற்பியலில் 100-க்கு100 மதிப்பெண், 2 பேர் வேதியியலில் 100-க்கு100 மதிப்பெண், 10 பேர் உயிரியியலில் 100-க்கு100 மதிப்பெண், ஒரு மாணவர் வணிகவியலில் 100-க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி மற்றும் முதல்வர் பொன்னழகன்,ஆசிரியர்கள், ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.

    • மாணவியின் தந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
    • மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது.கடலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று கடைசி தேர்வு என்பதால் மாணவ-மாணவிகள் தீவிரமாக படித்து காலை முதல் மதியம் வரை தேர்வு எழுதி முடித்தனர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது மாணவி கிரிஜாவின் தந்தை பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த பொம்மை செய்யும் தொழிலாளி ஞானவேல் (வயது 45) திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிக்குரிய செய்தி தெரிந்தும், மாணவி கிரிஜா இன்று பிளஸ்-2 கடைசி தேர்வு என்பதால் நேரில் வந்து தேர்வு எழுதினார் என்ற விஷயம் தெரியவந்தது.

    தனது தந்தை இறந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து மாணவி இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதியதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மாணவி கிரிஜாவுக்கு ஆறுதல் கூறி தேர்வு எழுத ஊக்கமளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ×