search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான் பண்டிகை"

    • செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
    • நாட்டு கோழி மற்றும் சேவல்களும் அதிகளவில் விற்பனையானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகள், கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8500 முதல் ரூ.10000 வரை விற்பனையானது.

    இதேபோல் நாட்டு கோழி மற்றும் சேவல்களும் அதிகளவில் விற்பனையானது. வழக்கமான வியாபாரத்தை விட சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைத்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.
    • சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது.

    புதுக்கோட்டை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களை கட்டியது. 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்த நிலையில் ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட ரூ.500 முதல் ஆயிரம் வரை விலை அதிகரித்து இருந்தது.

    விலை அதிகரித்த போதிலும் ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

    இந்த சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது. ஆடு ஒன்று ரூ.3000 முதல் ரூ.25000 வரை விற்கப்பட்டது. ரம்ஜானையொட்டி இன்று நடைபெற்ற சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை, என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது.
    • நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்றது.

    தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

    செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு துவங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக களைகட்டி நடைபெற்று வருகிறது.

    தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது.

    கிடா ஆடு 12 முதல் 15 ஆயிரம் வரையிலும், பெண் ஆடு 7000 முதல் 8000 வரையிலும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனை ஆகிறது.

    இன்று ஒருநாள் மட்டும் சுமார் ஆறு ஆயிரம் முதல் எட்டாயிரம் வரையில் ஆடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் சராசரியாக ரூபாய் 5 கோடி விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஆடுகளின் விற்பனையானது ரூ.3 ஆயிரத்தில் தொடங்கி ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.
    • பாவூர்சத்திரம் ஆடுகள் விற்பனை சந்தையில் இன்று மட்டும் ரூ.1 கோடி அளவில் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தென்காசி:

    ரம்ஜான் பண்டிகையையொட்டி பாவூர்சத்திரத்தில் செயல்பட்டு வரும் ஆட்டுச்சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகள் மற்றும் மாடுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஆடுகளை வாங்குவதற்காக ராஜபாளையம், தென்காசி, பொட்டல்புதூர், வீராணம், மேலப்பாளையம், கடையநல்லூர், சங்கரன்கோவில், பத்தமடை, கேரளாவின் தென்மலைப் பகுதிகள் உள்ளிட்ட ஊர்களில் இருந்து அதிக அளவில் ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் குவிந்திருந்தனர்.

    ஆடுகளின் விற்பனையானது ரூ.3 ஆயிரத்தில் தொடங்கி ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் மாடுகளின் விற்பனையும் அதிகளவில் காணப்பட்டது. குறிப்பாக காங்கேயம், ஓசூர் ஓட்டேரி, கிர் இன காளைகள், நாட்டு ரக காளைகள், எருமைகள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டது. பாவூர்சத்திரம் ஆடுகள் விற்பனை சந்தையில் இன்று மட்டும் ரூ.1 கோடி அளவில் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ரம்ஜான் சீசனில் எப்போதும் இல்லாத வகையில் பேரீச்சம் பழங்களின் விற்பனை களை கட்டும்.
    • ஈரான், சவுதி, ஓமன், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கப்பலில் பேரீச்சம் பழங்கள் பெட்டி பெட்டியாக வந்து குவிந்துள்ளன.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.

    இந்த விரத நாட்களில் அவர்கள் பேரீச்சம் பழங்களை சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் ரம்ஜான் பண்டிகை நேரத்தில் பேரீச்சம் பழங்கள் விற்பனை முழுவதும் அதிகமாகவே இருக்கும்.

    சூரியன் உதயமாவதற்கு முன்பு அதிகாலையில் சாப்பிட்டு விட்டு நாள் முழுவதும் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மாலையில் நோன்பை முடிக்கும் நேரத்தில் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிப்பார்கள்.

    இதனால் ரம்ஜான் சீசனில் எப்போதும் இல்லாத வகையில் பேரீச்சம் பழங்களின் விற்பனை களை கட்டும். அந்த வகையில் இந்த ஆண்டும் பேரீச்சம் பழங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    வழக்கமாக விற்பனையாவதை விட ரம்ஜான் காலத்தில் 50 சதவீதம் அளவுக்கு பேரீச்சம் பழங்களின் விற்பனை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக பேரீச்சம் பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே பேரீச்சம் பழங்களின் தேவை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு ரம்ஜான் கால கட்டத்தில் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

    ஈரான், சவுதி, ஓமன், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கப்பலில் பேரீச்சம் பழங்கள் பெட்டி பெட்டியாக வந்து குவிந்துள்ளன. பல்வேறு வகைகளில் காணப்படும் வெளிநாட்டு பேரீச்சம் பழங்கள் இரும்பு சத்து நிறைந்ததாக இருப்பதால் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

    ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கு 2 மாதத்திற்கு முன்பில் இருந்தே அதிக அளவில் பேரீச்சம் பழங்களை தமிழக வியாபாரிகள் கொள்முதல் செய்து வைத்துக்கொள்கிறார்கள். அப்போதில் இருந்தே வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கி விடுகிறது.

    இதன்மூலம் தமிழகத்தில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு பேரீச்சம் பழங்கள் விற்பனையாகி இருப்பதாக மொத்த வியாபாரி ஒருவர் தெரிவித்தார். உலக சந்தையிலும் பேரீச்சம் பழங்களின் வியாபாரம் அதிகரித்து உள்ளது. வியாபாரிகள் பல கோடி மதிப்பிலான பேரீச்சம் பழங்களை விற்பனை செய்துள்ளனர்.

    தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் வழியாக பேரீச்சம் பழங்களை கப்பலில் வியாபாரிகள் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் வருடப்பிறப்பு வெள்ளிக்கிழமை வருவதால் 13-ந்தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பஸ் பயணம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த வாரம் புனித வெள்ளி, அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் வெளியூர் பயணம் அதிகரித்தது.

    சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோடை விடுமுறை, பண்டிகை காலம், விசேஷ நாட்கள் அடுத்தடுத்து வருவதால் பஸ்களில் கூட்டம் அதிகரிக்கிறது.

    14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ் வருடப்பிறப்பு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நாட்கள் வருவதால் கூடுதலாக 1000 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

    தமிழ் வருடப்பிறப்பு வெள்ளிக்கிழமை வருவதால் 13-ந்தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதேபோல ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த வாரம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதேபோல தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜானையொட்டி விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 பஸ்கள் வீதம் இயக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

    ×