search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடிக்கும் பணி"

    • ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.
    • வனத்துறையினர் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை ஆண் காட்டு யானை வெளியேறி வரப்பள்ளம் ஆற்றங்கரையோர விவசாய தோட்ட பகுதியில் சுற்றி திரிந்தது.

    இதை தொடர்ந்து அடசபாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்த துரை என்ற சித்தேஷ்வரன் என்பவரை மிதித்து கொன்றது.

    இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டு யானையை பெருமுகை வனப்பகுதி க்குள் விரட்டி அனுப்பினர்.

    அந்த காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதையடுத்து அந்த ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதனால் முதுமலை யானைகள் முகாமில் இருந்து நேற்று முன்தினம் லாரிகளில் பொம்மன், சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகளை பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் அருகே உள்ள உரம்பு கிணறு மாரியம்மன் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் வனத்துறையினர் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் டிரோன் கேமரா மூலமாக அந்த ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் கண்கா ணித்தனர். ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கும் வன கால்நடை மருத்துவ குழுவினர் மூலமாக மயக்க ஊசி செலுத்தியவுடன்,

    தயாராக இருக்கும் 2 கும்கி யானைகளை கொண்டு காட்டு யானையை லாரியில் ஏற்றி வேறு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல இருப்பதாக வனத்துறை யினர் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து அட்டகாசம் செய்யும் அந்த ஒற்றை யானையை பிடிக்க கொண்டு வரப்பட்ட 2 கும்கி யானைகளுக்கு தேவையான சோளப்பயிர் உள்ளிட்ட உணவுகளை வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் டிரோன் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாளாக அந்த ஒற்றை காட்டு யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் பெருமுகை அடுத்த சேத்துக்காட்டு புதூர், கரும்பாறை குளத்துக்காடு, சஞ்சீவிராயன் கோவில் பகுதிகளில் இன்று வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து ஒற்றை யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதி வழியாகவும், அதையொட்டிய பகுதிகளில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

    • 4-வது முறையாக கும்கி யானைகளை வரவழைத்து உள்ளனர்.
    • வழித்தடங்களை வனத்துறையினர் என்று ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு கருப்பன் என்ற யானை வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    தோட்ட காவலுக்கு இருந்த 2 விவசாயிகளை மிதித்து கொன்றுள்ளது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி இருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்ன த்தம்பி, ராஜவர்தன் என 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.

    கும்கி யானைகள் கருப்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தன. ஆனால் கருப்பன் யானை மீண்டும் காட்டுக்குள் இருந்து வெளியேறி தோட்டத்தை நோக்கி படை எடுக்க தொடங்கியது.

    இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து மீண்டும் அரிசி ராஜா, சலீம், கபில்தேவ் என 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

    அப்போது கும்கி யானைகள் கருப்பன் யானையை சுற்றி வளைக்க மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை மயங்கவில்லை. தப்பித்து விட்டது.

    இதனால் கும்கி யானைகள் மீண்டும் அழைத்துச்செ ல்லப்பட்டன.

    அதன் பின்னர் கருப்பன் யானை காட்டில் இருந்து வெளியேறி விவசாயி தோட்டங்களை சேதம் செய்யத் தொடங்கியது. இதனால் தாளவாடி விவசாயிகள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்ப காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என 2 கும்கி யானைகள் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி தாளவாடிக்கு அழைத்து வரப்பட்டன.

    அதை த்தொடர்ந்து 25-ந் தேதி கருப்பன் யானைக்கு 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டன. ஆனால் அப்போ தும் யானை தப்பித்து சென்று விட்டது.

    தொடர்ந்து கருப்பன் யானை அட்டகாசம் அதிகரித்து வருவதால் 4-வது முறையாக கும்கி யானைகளை கொண்டு கருப்பன் யாணையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

    இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து மாரியப்பன், சின்னத்தம்பி என்ற கும்கி யானைகள் லாரி மூலம் தாளவாடிக்கு கொண்டுவரப்பட்டன.

    தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கருப்பன் யானையை பிடிக்க 4-வது முறையாக வனத்துறை யினர் கும்கி யானைகளை வரவழைத்து உள்ளனர்.

    ஒரு வருடமாக வனத்துறையினருக்கு போக்கு கட்டி வரும் கருப்பன் யானையை இந்த முறை கண்டிப்பாக பிடித்தே ஆக வேண்டும் என வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள னர்.

    இதற்காக கருப்பன் யானை சொல்லும் வழித்த டங்களை வனத்துறையினர் என்று ஆய்வு செய்தனர். எந்தெந்த வழித்தடங்களில் கருப்பன் யானை வந்து செல்கிறது என்பதை வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனையடுத்து இன்று இரவு கருப்பு யானையை பிடிக்கும் பணி தொடங்க ப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்காக வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஒரு வருடமாக போக்கு காட்டி வரும் கருப்பன் யானை பிடிபடுமா? என தாளவாடி மக்கள் விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    ×