search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தியமங்கலம் வனப்பகுதி"

    • வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
    • எல்லை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியை சுற்றிலும் ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. அதேபோல் நீலகிரி மாவட்ட வனப்பகுதி மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதியை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவுப்படி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெ க்டர் ராம் பிரபு தலைமையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கர்நாடகா மற்றும் நீலகிரி எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு போலீசார், சிறப்பு இலக்கு படை போலீசார் (எஸ்.டி.எப்), வனத்துறையினருடன் இணைந்து எத்திகட்டி மலை, கல்வீரன் கோவில் மற்றும் கொங்கள்ளி வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம், சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் குறித்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் முக்கியமாக கேரளா வயநாடு நிலச்சரிவு காரணமாக, அங்கு காட்டுக்குள் நடமாடிக்கொண்டு இருந்த மாவோயிஸ்ட்கள் தமிழக எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் முகாமிடாதபடி மாவோயிஸ்ட் தடுப்பு காவலர்கள், சிறப்பு இலக்கு படை போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து பர்கூர், கடம்பூர், பவானிசாகர், ஹாசனூர், தாளவாடி ஆகிய மலை எல்லையோர கிராமங்களிலும் வனப்பகுதியில் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் கர்நாடக மற்றும் நீலகிரி எல்லை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

    மேலும் மலைகிராம மக்களிடம் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்தும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். 

    • கொத்தமங்கலம் வனப்பகுதி போலிபள்ளம் பகுதியில் வனத்துறை சார்பில் கட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.
    • வனத்துறையினர் வலைகள் மற்றும் மான் கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, பவாளிசாகர் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கடி, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் ஒரு சிலர் அனுமதியின்றி நுழைந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். வனத்துறை அதிகாரிகளும் அடிக்கடி ரோந்து சென்று வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலை பிடித்து அபராதம் விதிப்பது மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஆனாலும் சிலர் வனப்பகுதியில் புகுந்து மான் உள்ளிட்டவைகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் கொத்தமங்கலம் வனப்பகுதி போலிபள்ளம் பகுதியில் வனத்துறை சார்பில் கட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குட்டையில் மான்கள் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம் காப்பு காடு வனப்பகுதியில் வன சரகர் சிவகுமார், வன காப்பாளர் மற்றும் வனப்பகுதி பணியாளர்கள் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது கொத்தமங்கலம் வனப்பகுதி போலி பள்ளம் பகுதியில் 4 பேர் நைலான் வலைகளுடன் சுற்றி கொண்டு இருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர் கடவு பகுதியை சேர்ந்த சின்னசாமி (44), கார்த்திகேயன் (21), திருப்பூரை சேர்ந்த சதீஸ்குமார் (23), வெங்கடேஷ் (28) என்பதும், நைலான் வலைகள் மூலம் மான்களை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்து வலைகள் மற்றும் மான் கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர். 

    • தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் காட்டு தீயானது அருகே உள்ள வனப்பகுதிகளில் பரவியது.
    • தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேலும் அடர்ந்த வனப்பகுதியான இங்கு அரிய வகை மரங்கள் உள்பட செடி, கொடிகள் நிறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் 107, 109 டிகிரி என வெயில் பதிவாகி வருகிறது.

    இதனால் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் வறட்சி நிலகிறது. மேலும் செடி, கொடி, மரங்கள் காய்ந்து ஒன்றோடு ஒன்று உரசி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கமும் காற்றின் மாறுபாடும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பத்து ராயன் கிரிமலைப்பகுதியில் திடீரென தீ விபத்து தீப்பற்றி எரிந்தது. காட்டுத்தீயானது தொடர்ந்து மளமளவென பரவியதால் சுமார் 20 ஏக்கருக்கு மேல் காட்டு மரங்கள் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரகர் பழனிச்சாமி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவுடன் சென்று கம்பத்து ராயன்கிரி மலையில் ஏற்பட்ட தீயை அனைத்தனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் காட்டு தீயானது அருகே உள்ள வனப்பகுதிகளில் பரவியது. இதையடுத்து தீ மெல்ல மெல்ல பரவி சத்தியமங்கலம் புளியங்கொம்பை மேல் பகுதியிலும் பெரியகுளம் மேல் உள்ள மலைப்பகுதியிலும் நேற்று காட்டுத்தீ பரவியது.

    இதில் பல விதமான விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகியது. காட்டு தீ பரவுவதால் அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் சத்தம் போட்டப்படியே அங்கும், இங்கும் திரிகிறது. வன விலங்குகளின் சத்தம் அதிகமாக உள்ளது என அடிவாரத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதிகளில் காட்டு தீ பரவி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×