search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி எண்"

    • நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருநெல்வேலி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1070, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி- 101 & 112, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம்- 9498794987, மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு- 104, அவசர மருத்துவ உதவிக்கு- 108.

    • திருநங்கைகள் பாதுகாப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சி.ஐ.டி., மகளிர் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., கே.ஜி.வி.சரிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • திருநங்கைகள் பாதுகாப்பு உதவி எண் 1091 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வது, துன்புறுத்துவது அவர்களுக்கு மன நிதியாக ரீதியாக தொல்லை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குண்டூரில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் இதற்காக சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் பாதுகாப்பு உதவி எண் 1091 அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. இதில் திருநங்கைகள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை தொடர்பு கொண்டு கூறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    திருநங்கைகள் பாதுகாப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சி.ஐ.டி., மகளிர் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., கே.ஜி.வி.சரிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருநங்கைகள் பாதுகாப்பு சட்டபடி இந்த உதவி மையம் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண் என்பதாலும், கட்டணம் ஏதும் இல்லை என்பதாலும் திருநங்கைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

    திருநங்கைகளுக்கும் சுயமரியாதை உள்ளது. அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் இதன் மூலம் தண்டிக்கப்படுவார்கள்.

    இந்த எண் திருநங்கைகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று சரிதா தெரிவித்தார்.

    ×