search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க நபர்"

    • சிறுநீர் பை அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை.
    • மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வலி நிவாரணிகளை வழங்கினர்.

    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டபோது அவரது குடல் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    63 வயதான அந்த நபருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சிஸ்டெக்டமி என்கிற சிறுநீர் பை அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    அடி வயிற்றில் தையல் போட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு பிறகு அவை மருத்துவர்களால் அகற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து, நபர் அவரது குடும்பத்தினருடன் சாப்பிடுவதற்காக உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருமலும் வந்துள்ளது.

    அவர் தும்பிய வேகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் இருந்து குடல் வெளியே வந்தது. இதனால், பயந்துபோன நபர் தனது சட்டையால் வயிற்றை மூடிக் கொண்டு ஆம்புலன்சை வரவழைத்தார்.

    மருத்துவ உதவியாளர்கள் விரைவாக வந்து, காயத்தை சரி செய்தனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வலி நிவாரணிகளை வழங்கினர்.

    மூன்று சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்கள், குடல்களை மீண்டும் வயிற்றுக்குள் கவனமாக வைத்து சிறு குடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்தனர்.

    காயங்கள் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    இருப்பினும், தும்மலால் குடல் வெளியேறிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
    • அமெரிக்க நபரை அதிகாரிகள் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மே மாதம் 22ம் தேதி அன்று அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கிக்கு விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்திருந்தார்.

    அங்கு அந்த நபரிடம் சிஐஎஸ்எப் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது பையில் பயன்படக்கூடிய 6 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, அந்த நபரை அதிகாரிகள் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை கைது செய்த போலீசார் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×