search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை சுனைனாவுக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

    தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், , சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், சுனைனா காதலிப்பதாக பல செய்திகளை இணையத்தில் தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகவும், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

    இதனையடுத்து சுனைனாவுக்கு யாருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. யார் அந்த மாப்பிள்ளை என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில், சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூடியுபரான கலித் அல் அமேரி என்பரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த வாரம் தனக்கு நிச்சயம் ஆகிவிட்ட தகவலை கலித் அல் அமேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணைப் பற்றி தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

    இந்நிலையில், தனது திருமண ஏற்பாடுகளுக்காக கலித் துபாயில் இருந்து இந்தியா வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் நடிகை சுனைனா என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

    துபாயைச் சேர்ந்த கலித் அல் அமேரி தனது பெயரில் ஒரு பிரபல யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடும் இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது.
    • இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

    உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது என்று கூறிவந்த நிலை வழக்கொழிந்து தற்போது உலகம் செயற்கைத் நுண்ணறிவான ஏ.ஐ மயமாக மாறி வருகிறது என்று கூறும் அளவுக்கு ஏ.ஐ மனிதர்களின் வாழ்க்கையோடு அதிகம் இணங்கத் தொடங்கியுள்ளது. இந்த இணக்கம் ஒரு படி மேலே சென்று மனிதர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக ஏ.ஐ மாறும் என்ற அச்சமும் பரவி வருகிறது.

    போலியான DEEP FAKE புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை உருவாக்குவது தொடங்கி மனிதர்களின் வேலையை பறிப்பது வரை இந்த 21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஏ.ஐ மாறத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏ.ஐ மூலம் இயங்கும் சாட் பாட்கள் [CHAT BOT] மனிதர்களின் கட்டளை இன்றியே பொய் சொல்லத் தொடங்கியுள்ளது.

     

    வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது. அமரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று சேல்ஸ் பிரிவில் வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ரோபோ கால் சர்வீஸ் மூலம் பிளான்ட் என்று அதிநவீன ஏ.ஐ சாட் பாட்டை பணியமர்த்தியுள்ளனர்.

     

    இந்த சாட் பாட் வாடிக்கையாளர்களிடம் மனிதரைகளைப் போலவே பேசுமாம். இந்நிலையில் நிறுவனத்தின் முன்னாள் நின்றுகொண்டு விஷயம் தெரிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவே, போனை அட்டென்ட் செய்த சாட் பாட் பெண்ணைப் போலவே அவரிடம் பேசியுள்ளது.தான் ஒரு சாட் பாட் தான் என தனது குரலில் காட்டிக்கொள்ளவில்லை.

     

    தான் உயிருள்ள மனிதன் தான் என நம்பவைக்க நிறுவனத்துக்குள் வேலை நேர இரைச்சல் இருப்பது போன்ற சத்தங்களை உருவாக்கி அவ்வப்போது பேச்சை நிறுத்தி நிறுத்தி பேசியுள்ளது சாட் பாட். ஆனால் ஏ.ஐ சாட்பாட்டை உருவாக்கிய நிறுவனம் இது எதையும் புரோக்ராம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.ஐ ஆகவே இவ்வாறு ஏமாற்ற கற்றுக்கொண்டுள்ளது.

     

    இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு ஏ.ஐ சாட் பாட் களுடன் உரையாடி வல்லுநர்கள் நடத்திய செய்து ஏஐ தொழில்நுட்ப பாட்கள் மனிதர்களின் கட்டளை இல்லாமலேயே இந்த செயல்களை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மனித குலத்துக்கு வருங்காலங்களில் ஏஐ மூலம் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றுஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

     

    • நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை.
    • தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் வைரலாகத் தொடங்கியுள்ளது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக் கோப்பையை வாஙகியது, மைதானத்தில் உள்ள மண்ணை எடுத்து சாப்பிட்டது என உற்சாகத்தில் ரோகித் செய்து வரும் செயல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

     

    அந்த வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் மைதானத்தில் கோப்பையுடன் படுத்திருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, தற்போது நான் உள்ள மனநிலையை சிறந்த முறையில் இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது. நிறைய வார்த்தைகள் இருக்கின்றன, ஆனால் நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை. விரைவில் உங்களுடன் அதை பகிர்வேன்.

    ஆனால் இப்போதைக்கு என்னுடையதும் பில்லியன் கணக்கான மக்களுடையதுமான கனவு நினைவான இன்ப அதிர்ச்சியை கிரகிக்க முயற்சித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று அதிகாலை தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

     

    • ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது.
    • ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

    மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல கிளாசிக் படலக்ளை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடல், ஹே ராம் படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என ஆஷா போஸ்லேவின் கிரக்கும் குரலுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இந்நிலையில் தற்போது ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நேற்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை மும்பையில் வைத்து நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜாக்கி செராப் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், விழா மேடையில் வைத்து ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை முத்தமிட்டு தண்ணீரால் கழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீரால் ஆஷாவின் கால்களைக் கழுவித் துடைத்த சோனு நிகாம் பின் எழுந்து நின்று ஆஷாவுக்கு தலைவணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சோனு நிகாம் தமிழில் அஜித்தின் கிரீடம் படத்தில் இடம்பெற்ற விழியினில் உன் விழியினில், ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற ஆருயிரே, கார்த்தியின் சகுனி படத்தில் இடம்பெற்ற மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடுயுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

    மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

     

    சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் - வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா அடுத்ததாக 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தை 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா அடுத்ததாக 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். சிவா இதற்கு முன் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 அஜித் படங்களை இயக்கியவராவர்.

    மாபெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது . படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    கங்குவா படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். படத்தை 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர் பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுக்குறித்து படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் மனித பிணங்கள் மலைப் போல குவித்து வைக்கப்பட்டுள்ளது அதன் மேல் சூர்யா ஒரு வாழ் ஏந்தியப் படி காணப்படுகிறார்.


    அக்டோபர் 10 ஆம் தேதி ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன்  திரைப்படமும் வெளியாகவுள்ளது. அதே நாலில் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாகப்போவதால் . மிகப்பெரிய போட்டி இந்த இரண்டு படங்களிடையே உருவாகப்போவது உறுதி. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சூர்யா தற்பொழுது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா44  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார்.

    நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

    இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் இதுவரை அஜித்தை பார்த்திராத லுக்கில் இருந்தார். தற்பொழுது படத்தின் செக்கண்ட் லுக் `காட் பிளஸ் யூ மாமே' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இதில் கழுத்தில் கர்ச்சீஃப் கட்டிக்கொண்டும் 63 என்ற எண்ணுடைய சிறை சீருடை மற்றும் கண்ணில் கூலர்ஸ் அணிந்து ஸ்வேக்-காக உள்ளார்.

    இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அஜித் அணிந்திருக்கும் கண்ணாடியில் பில்லா அஜித்தின் புகைப்படம் இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் எம்மாதிரியான கதையை இயக்குகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்திற்கு சென்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.
    • குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார்.

    விடாமுயற்சி படத்தைத் தாண்டி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

    குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்பட்டார். இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருந்தது.

    இந்நிலையில் இந்த படத்தின் 2-வது லுக் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தை மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். குட் பேட் அக்லி படம் 2025-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஐதராபாத் விமான நிலையம் வந்துள்ளனர்.
    • ஏர்போர்ட்டில் பணியாற்றும் ஒரு முதியவர் நாகர்ஜுனாவை காண அவரை நெருங்குகிறார்.

    தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் தயாரிப்பாளரான ஸ்ரீ வெங்கடேஷ்வர சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது அதில் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இடையிலான சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதில் கலந்து கொள்வதற்காக நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஐதராபாத் விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது நாகர்ஜுனா நடந்து வருகையில் ஏர்போர்ட்டில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி நபர் நாகர்ஜுனாவை காண அவரை நெருங்குகிறார்.

    ஆனால் நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை நாகர்ஜூனாவை நெருங்க விடாமல் பிடித்து தள்ளி விடுகிறார். அதில் அந்த மாற்றுத்திறனாளி நபர் நிலை தடுமாறி விழப்போக பின் தட்டு தடுமாறி அவர் விழாமல் நிற்கிறார். இதை நடிகர் நாகர்ஜுனா பார்த்தும் பார்க்காததுப் போல் கடந்து போகிறார். அவருக்கு பின் வந்த தனுஷ் இவரையும் அந்த ஊழியரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு கடந்து செல்கிறார்.

    இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த பதிவை பார்த்து விட்டு நாகர்ஜுனா செய்தது மிகப்பெரிய தவறு, மனிதாபமற்ற செயல், இதற்கு அவர் கண்டிப்பாக அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என கமெண்ட்சுகளை பதிவு செய்து வருகின்றனர்.

    இதையடுத்து, நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் விமான நிலைய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில் அவர், இந்த விவகாரம் இப்போது தான் என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன், என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், தனது பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரை விமான நிலையத்தில் நாகார்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரசிகரை கட்டியணைத்த நாகர்ஜுனா, தனது பாதுகாவலர் அவரை தள்ளிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஐதராபாத் விமான நிலையம் வந்துள்ளனர்.
    • ஏர்போர்ட்டில் பணியாற்றும் ஒரு முதியவர் நாகர்ஜுனாவை காண அவரை நெருங்குகிறார்.

    தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் தயாரிப்பாளரான ஸ்ரீ வெங்கடேஷ்வர சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது அதில் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இடையிலான சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதில் கலந்து கொள்வதற்காக நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஐதராபாத் விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது நாகர்ஜுனா நடந்து வருகையில் ஏர்போர்ட்டில் பணியாற்றும் ஒரு முதியவர் நாகர்ஜுனாவை காண அவரை நெருங்குகிறார்.

    ஆனால் நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை நாகர்ஜூனாவை நெருங்க விடாமல் பிடித்து தள்ளி விடுகிறார். அதில் அந்த முதியவர் நிலை தடுமாறி விழப்போக பின் தட்டு தடுமாறி அவர் விழாமல் நிற்கிறார். இதை நடிகர் நாகர்ஜுனா பார்த்தும் பார்க்காததுப் போல் கடந்து போகிறார். அவருக்கு பின் வந்த தனுஷ் இவரையும் அந்த ஊழியரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு கடந்து செல்கிறார்.

    இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த பதிவை பார்த்து விட்டு நாகர்ஜுனா செய்தது மிகப்பெரிய தவறு, மனிதாபமற்ற செயல், இதற்கு அவர் கண்டிப்பாக அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என கமெண்ட்சுகளை பதிவு செய்து வருகின்றனர்.

    இதையடுத்து, நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் விமான நிலைய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில் அவர், இந்த விவகாரம் இப்போது தான் என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் நடந்து முடிந்து 2 நாட்கள் ஆவதற்குள் இதே போல இன்னொரு சம்பவமும் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குபேரா படப்பிடிப்பிற்காக தனுஷ் ஜுஹோ கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு ரசிகர் தனுஷை வீடியோ எடுக்க தனுஷின் பாதுகாவலர் அந்த நபரை தள்ளி விடுகிறார்.

    நாகர்ஜூனாவை நெருங்கிய ரசிகரை அவரது பாதுகாவலர்கள் தள்ளிவிட்டதை வேடிக்கை பார்த்த தனுஷ் இம்முறை தனது ரசிகரை அவரது பாதுகாவலர் தள்ளிவிட்டதை கண்டுக்காமல் சென்று விட்டார். தனுஷின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நஸ்ரியா, நயன்தாரா, ஆர்யா மற்றும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராஜா ராணி திரைப்படம் வெளியாகியது.
    • இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது.

    2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நஸ்ரியா, நயன்தாரா, ஆர்யா மற்றும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராஜா ராணி திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் மூலம் அட்லி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார், இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது. காதலர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு மாபெரும் ரசிகர் பட்டாளமே இன்றும் இருக்கிறது.

    நஸ்ரியா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தது அப்படத்தில் மட்டுமே. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர் ஆனால் அது இதுவரை நடக்கவே இல்லை.

    ஆனால் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக நஸ்ரியா மற்றும் நயன்தாரா 10 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா, நஸ்ரியா மற்றும் ஃபஹத் பாசில் ஒன்றாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

    அப்புகைப்படத்திற்கு 'இறுதியாக... இந்த நாளுக்காக' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். நஸ்ரியாவும் இப்படத்தை பகிர்ந்து யூ கய்ஸ் ஆர் தி ஸ்வீட்டஸ்ட், க்யூட்டஸ் அண்ட் பெஸ்ட் என்ற தலைப்பில் பதிவிட்டார்.

     

    பல வருடங்களுக்கு பிறகு இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அப்புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மதுபானம், விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார்.
    • நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ, 9,000 கோடி கடன் பெற்றிருந்தார்.

    நமது நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் மல்லையா. மதுபானம், விமான நிருவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார். இவர் நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ 9,000 கோடி கடன் பெற்றிருந்தார். இருப்பினும், அந்த கடனை திரும்ப அடைக்க முடியாமல் விஜய் மல்லையா நாட்டை விட்டே 2016ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார் விஜய் மல்லையா.

    நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா நிதி மோசடியாளர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அவர் அப்படியே பிரிட்டன் நாட்டில் பதுங்கினார். அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இப்போது வரை அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதில் சட்டச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கும் பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இவ்வாறு பெரிய பின்புலம் கொண்ட விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவிற்கு சில நாட்களுக்கு முன் லண்டனின் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. 37 வயதான சித்தார்த் மல்லையா அவரது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்துக் கொண்டார். இத்திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதில் இருவரும் கை கோர்த்தபடி மிகவும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவுகளில் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கிங் ஃபிஷர் பீர் பரிமாறப்பட்டத்து குறிப்பிடத்தக்கது. ஒரு தரப்பு மக்கள் சித்தார்த்தா மல்லையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய நபருக்கு இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் நடப்பதாக சாடினர்.

    ×