search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளி சாவு"

    • நேற்று இரவு நூலை துணியாக மாற்றும் நிட்டிங் மிஷினில் வேலை செய்து கொண்டிருந்தார்.
    • 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 23). இவர் திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகே தங்கி இருந்து அருகில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு நூலை துணியாக மாற்றும் நிட்டிங் மிஷினில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    நள்ளிரவு மிஷின் ஓடி கொண்டிருக்கும்போதே தரையில் படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது திடீரென நிட்டிங் மிஷின்ராம்குமார் மேலே விழுந்து நசுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    சத்தம் கேட்டு உடன் பணியாற்றிய சக ஊழியர்கள் ஓடிவந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராம்குமாரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக இருந்தார்.இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் கொதிக்க, கொதிக்க இருந்தால் பலத்த காயமடைந்த ரூபேஷ்குமார் வலியால் அலறி துடித்தார்.
    • அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஓசூர்,

    பீகார் மாநிலம் பகவான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஷ்குமார் (வயது23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெலத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எந்திரம் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் அங்குள்ள ஒரு எந்திரத்தின் உதிரிபாகங்களை சுத்தம் செய்வதற்காக சுடுதண்ணீர் நிரம்பிய கலனுக்கு எடுத்து சென்றார்.

    அப்போது அந்த சுடுதண்ணீர் கலனில் தவறிவிழுந்தார். அதில் தண்ணீர் கொதிக்க, கொதிக்க இருந்தால் பலத்த காயமடைந்த ரூபேஷ்குமார் வலியால் அலறி துடித்தார்.

    உடனே அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×