search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாக முகவர்கள்"

    • தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கோவிந்தராஜ் கமுதி வாசுதேவன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லை வகித்தனர். துணை செயலாளர் கருப்பையா வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசு கையில், ராமநாதபுரம் தொகுதியில் யார் யாரோ போட்டியிட போவதாக கூறுகிறார்கள். யார் போட்டியிட்டாலும் தி.மு.க. தான் வெற்றி பெரும். தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை தேர்தலில் நிறுத்துகிறாரோ அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். கடந்த முறை இழந்த தேனி பாராளும ன்ற தொகுதியிலும் இந்த முறை வெற்றி பெற வேண்டும்.

    முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியை கடந்த காலங்களில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. முன்னேறிய தொகுதியாக உள்ள முதுகுளத்தூரில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளோம். கிராமங்களில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் பாக முகவர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    தொடர்ந்து காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசுகையில், ராமநாதபுரத்திற்கு வருகை தரஉள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 34 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. மாவட்டத்தில் 1371 பாக முகவர்கள் உள்ளனர். இதில் 385 பாகமுகவர்கள் முதுகுளத்தூர் தொகுதியில் உள்ளனர். அவர்களுக்கு முதல்வர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் முதல் வரிசையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதி களிலும் வெற்றி பெற பாகமுகவர்கள் கண்ணும் கருத்துமாக பணியாற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தூவல் லெட்சுமி, ஒன்றியெ லாளர்கள் சண்முகம் ,பூபதி மணி, கோவிந்தராஜ் கமுதி வாசுதேவன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் மற்றும் வடக்கு ஒன்றிய பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச் சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சீமானூத்து வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமை தாங்கினார்.

    அவைத் தலைவர் பெத்தணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், குமுதா, பாலகிருஷ்ணன், அன்னைராஜா, ஒன்றிய பொருளாளர் ஆண்டி, மாவட்ட பிரதிநிதிகள் பிரசாத், எபினேசர், துரைப்பாண்டி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கலைவாணன், கலை இலக்கிய மாவட்ட துணை அமைப்பாளர் பிரசாந்த், கீரிபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் மற்றும் வடக்கு ஒன்றிய பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 6-ந் தேதி தொகுதி வாரியாக பாக முகவர்கள் சிறப்பு கூட்டம் நடக்கிறது.
    • வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து வந்து தவறாமல் கலந்து கொள்ள செய்து சிறப்பிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொகுதி வாரியாக வருகிற 6-ந் தேதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், அமைச்சருமான மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தி.மு.க. தலைவர் வழிகாட்டுதலின் படி இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் முதல்-அமைச்ச்ா மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வடக்கு மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு, சோழவந்தான் மற்றும் மேலூர் சட்டமன்ற தொகுதி களுக்குட்பட்ட வாக்குச் சாவடி முகவர்களும் பங்கேற்க வேண்டியுள்ளது.

    இதனை முன்னிட்டு வடக்கு மாவட்டம் மேற்கண்ட தொகுதிக்கு உட்பட்ட சிறப்பு வாக்குச் சாவடி முகவர்களுக்கான சிறப்புக் கூட்டம் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கீழ்காணும் அட்டவ ணைப்படி நடைபெற உள்ளது.

    அதன்படி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு அன்றைய தினம் காலை 10 மணிக்கு திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரி அருகில் உள்ள குறிஞ்சி மகாலில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

    சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் அலங்காநல்லூரில் உள்ள சுபிக்க்ஷா திருமண மஹாலில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் அங்குள்ள மூவேந்தர் பண்பாட்டு கழக திருமண மஹாலில் நடைபெற உள்ளது.

    இதில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து வந்து தவறாமல் கலந்து கொள்ள செய்து சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×