search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறை வழிபாடு"

    • கடைசியாக முனிவர் ஒருவரின் உதவியினால் கண்டு பிடித்தான்.
    • கேட்டால் தர மறுத்துவிடுவானோ என்ற காரணத்தினால் தான் மலர்களைக் கவர்ந்து வரச் சொன்னதாக இந்திரன் பதில் கூறினார்.

    புராண காலத்தில் "ருக்மாங்கதன்" என்ற பெயருடைய மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி செய்து வந்தான்.

    அவன் மலர்களின் மீது மிகுந்த ஆசை கொண்டவன்.

    அவனுக்குச் சொந்தமான ஒரு அழகிய நந்தவனத்தில் உலகில் உள்ள பேரழகு வாய்ந்த மலர்களை எல்லாம் வரவழைத்து அங்கே பயிர் செய்தான்.

    அதை தன் கண் போல் காத்து வளர்த்து வந்தான்.

    ஒரு சமயம், தேவேந்திரன் தனக்கு ஒரு யாகத்திற்கு பூசை செய்ய பூக்கள் வேண்டுமென்று கருதிய போது ருக்மாங்கதனின் பூந்தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு தேவ கண்ணரசனை அனுப்பி அங்கிருந்து வினோதமான பூக்களை திருடிக் கொண்டு வரச் செய்தான்.

    தினமும் பூக்கள் திருட்டுப் போவதைக் கண்ட ருக்மாங்கதன் திருடர்களைக் கண்டு பிடிக்க தீவிரமான முயற்சிகளைச் செய்தார்.

    ஆனால் அவரால் திருடர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

    கடைசியாக முனிவர் ஒருவரின் உதவியினால் கண்டு பிடித்தான்.

    கேட்டால் தர மறுத்துவிடுவானோ என்ற காரணத்தினால் தான் மலர்களைக் கவர்ந்து வரச் சொன்னதாக இந்திரன் பதில் கூறினார்.

    அதன் பிறகே ருக்மாங்கதன் சமரசம் அடைந்தார்.

    • சிவலிங்கத்தின் மேல் பூவோ, வில்வமோ இல்லாமல் இருக்கக் கூடாது.
    • பூக்களை ஒரு போதும் கவிழ்த்து சார்த்தக் கூடாது.

    வழிபாடுக்கு உதவும் பூக்கள் பற்றிய தகவல்கள்:

    1. சந்தனமும், பூவும் இல்லாத பூஜை பயனற்றது.

    2. சிவலிங்கத்தின் மேல் பூவோ, வில்வமோ இல்லாமல் இருக்கக் கூடாது.

    3. பூக்களை ஒரு போதும் கவிழ்த்து சார்த்தக் கூடாது.

    4.முந்தைய நாள் போட்ட புஷ்பத்தின் மீது புது புஷ்பம் சார்த்தக் கூடாது. அதைக் காலில் படாத நிலையில் களைந்த பிறகே புஷ்பம் சார்த்த வேண்டும்.

    5. தாழம்பூவில் நுனியில் லட்சுமியும், மத்தியில் சரஸ்வதியும், காம்பில் மூதேவியும் உறைவதால் காம்பினை நீக்கியே பூஜையில் சமர்ப்பிக்க வேண்டும்.

    6. "அர்ஜூனா! யார் எனக்கு இலை, மலர், கனி, நீர் இவற்றைப் பக்தியோடு படைக்கிறாரோ அவரது தூய மனதைக் கருதி, அவர் அளிப்பவற்றை ஏற்றுக் கொள்கிறேன்" என்று பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்.

    7. துர்வாச முனிவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள திரவுபதி பரந்தாமனை அழைத்தாள். அப்போது அட்சய பாத்திரத்தில் இருந்த ஒரு சிறு இலையைத் திரவுபதி சமர்ப்பிக்க, அதை உண்டு அனைவரையும் கண்ணன் காத்தார்.

    8. கஜேந்திரன் தினமும் பரந்தாமனுக்குப் புஷ்பங்களைப் பக்தியுடன் சமர்ப்பித்து வந்ததால் முதலையின் வாயில் இருந்து மீள முடிந்தது.

    • நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ் ஆகியன நன்மை தரும்.
    • மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மரிக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியவை உகந்தன.

    காலை நேரத்தில் தாமரை, பூவரசம்பூ, துளசி, நவமல்லிகை, நத்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னாகரம் (தாழை & இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.

    நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ் ஆகியன நன்மை தரும்.

    மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மரிக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியவை உகந்தன.

    அஷ்ட புஷ்பங்கள்:

    அறுகு, செண்பகம், புன்னாகரம், நத்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்மை ஆகிய அஷ்ட புஷ்பங்கள் என்று அழைக்கப்படுகிறது.

    பூக்களை எத்தனை நாட்கள் வைத்து இருக்கலாம்?

    தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறுமாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், செண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.

    கையில் கொண்டு வந்தது, தானாக விழுந்தது, காய்ந்தது, முகர்ந்துப்பார்க்கப்பட்டது, அசுத்தமான இடம், பொருள்களில் வைக்கப்பட்டது ஆகியன பூஜைக்கு ஆகாதனவாம்.

    மலர்களைக் கிள்ளிச் சாத்தக்கூடாது (முழு மலராகவே சாத்த வேண்டும்). இலைகளைக் கிள்ளி சாத்தலாம்.

    வில்வம், துளசி முதலியவற்றைத் தளமாகச் சாத்த வேண்டும்.

    பூஜைக்குரிய இலைகள்:

    துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மரிக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியவையாக கருதப்படுகிறது.

    பஞ்ச வில்வங்கள்:

    முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியவை பஞ்ச வில்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு அமாவாசை அன்றும் மாலை 6.30 மணிக்கு இங்கு கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.
    • அப்போது 18 முறை கோவிலை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது.

    தஞ்சையில் உள்ள பிரதாப வீர அனுமான் என்கிற மூலை அனுமாரை தொடர்ந்து 18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து வழிபட்டால் நல்ல உடல்நலமும், நீங்காத செல்வமும், குறையாத ஆயுளும் பெறலாம் என்கிறார்கள்.

    விபத்துக்கள், காரிய தடைகள் போன்றவை விலகி சந்தான பாக்கியம் கிட்டும் என்றும், தீய திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், எதிரிகள் தொல்லை விலகும் என்றும் சொல்கிறார்கள்.

    இது தவிர மனவேதனைகள், கஷ்டங்கள் தீரும்.

    வாழ்வில் அமைதி உண்டாகும், நிலையான கல்விச் செல்வம் உண்டாகும், தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

    ஆத்ம பலம், மனோபலம், புத்தி பலம், தேக பலம், பிராண பலம் உண்டாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    ஒவ்வொரு அமாவாசை அன்றும் மாலை 6.30 மணிக்கு இங்கு கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.

    அப்போது 18 முறை கோவிலை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது.

    56 எலுமிச்சம் பழங்கள் கொண்ட மாலையை 18 பக்தர்கள் ஆளுக்கு ஒன்றாக கொண்டு வந்து 18 முறை கோவிலை வலம் வந்து வழிபடுவதை ஒவ்வொரு அமாவாசை அன்றும் இங்கு காணலாம்.

    அப்படி செய்தால் எப்பேற்பட்ட கிரக தோஷங்களும், உயிருக்கு ஆபத்தான நோய்களும் நீங்குவதாக சொல்கிறார்கள்.

    • இருப்பினும் பூர்வஜன்ம வினையின் காரணமாக அவரை தொழு நோய் பற்றியிருந்தது.
    • அவர் இத்தலத்து இறைவரை மனம் உருகி பூஜித்து வந்தார்.

    குடவாயில் என்னும் தலம் திருத்தலையாலங்காட்டிற்கு மேற்கே அமைந்துள்ளது.

    இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவரின் பெயர் கோணேசுவரர். இறைவியின் பெயர் பெரிய நாயகி.

    திருணபிந்து என்னும் முனிவர் சிவபக்தி நிறைந்தவர்.

    இருப்பினும் பூர்வஜன்ம வினையின் காரணமாக அவரை தொழு நோய் பற்றியிருந்தது.

    அவர் இத்தலத்து இறைவரை மனம் உருகி பூஜித்து வந்தார்.

    அந்த அன்பரின் துன்பத்தினைப் போக்க திருவுளம் கொண்ட எம்பெருமான் அங்கிருந்த குடத்திலிருந்து வெளிப்பட்டு அவருடைய தொழு நோயை நீக்கி அருளினார்.

    இறைவனின் பெருங்கருணையைக் கொண்டு அம்முனிவர் இறைவனின் திருப்பாதங்களில் வீழ்ந்து பணிந்தார்.

    எத்தகைய கொடிய நோய்கள் பீடித்தவராக இருந்தாலும் இத்தலத்தில் அமைந்திருக்கும் அமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவன் கோணேஸ்வரரையும் இறைவி பெரிய நாயகியம்மையையும் மனம் உருகி பூரண நம்பிக்கையுடன் வழிபட்டால் அனைத்து நோய்களும் விலகும்.

    குறிப்பாக தொழு நோய் மற்றும் சரும வியாதிகள் அனைத்தும் விலகும்.

    • பிரபஞ்சத்தில் ஓம் என்ற ஒலி கேட்பதாக சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
    • உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும். உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும்.

    மந்திரங்கள் மிக,மிக எளிமையானவை. தமிழிலேயே ஏராளமான மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன.

    ஓம் கணபதி நமஹ, ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயண, ஓம் சக்தி பராசக்தி, ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா, ஓம் சாய், ஸ்ரீசாய், ஜெய, ஜெய சாய் என்றெல்லாம் சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள்.

    இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குல தெய்வத்தின் பெயரையும் மந்திரமாக உச்சரிக்கலாம்.

    இந்த மூல மந்திர உச்சரிப்புக்கு இணையான மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.

    எந்த மந்திரம் உச்சரித்தாலும் ஓம் என்று முதலில் சொல்லி தொடங்குங்கள்.

    ஓம் என்று அடி வயிற்றில் இருந்து உச்சரிக்கும் போது உடலும், மனமும் வலு அடையும்.

    குறிப்பாக இதயத்துக்கு நல்லது.

    பிரபஞ்சத்தில் ஓம் என்ற ஒலி கேட்பதாக சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

    உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும்.

    வாழ்க வளமுடன் என்று சொல்வது கூடமிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக கருதப்படுகிறது.

    திருமந்திரம், பெரிய புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி வாய்ந்தவை.

    பன்னிரு திருமுறைகளில் சகல காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக புதைந்து கிடப்பதை காணலாம்.

    • இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலியின் அதிர்வலைகள் செடிகொடி, மரங்களையும் உற்சாகப்படுத்துகிறது.
    • அதனால் அவைகள் மள மளவென்று செழிப்பாக வளர்ந்து பூத்து, காய்த்து குலுங்குகிறது.

    இப்படி 'ஓம்' மாதிரியான வேதமந்திரங்கள் நம் உடலுக்குள் மட்டும் தனது முழு சக்தியைப் பயன்படுத்தி நற்செயல்களை செய்வதில்லை.

    வெளியிலும் தன் ஆற்றலை பிரயோகிக்கிறது.

    இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலியின் அதிர்வலைகள் செடி, கொடி, மரங்களையும் உற்சாகப்படுத்துகிறது.

    அதனால் அவைகள் மள மளவென்று செழிப்பாக வளர்ந்து பூத்து, காய்த்து குலுங்குகிறது.

    நமது முன்னோர்கள் பலர் தங்களை வருத்தும் கொடிய நோய்கள் தீர விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி, துளசி அர்ச்சனை செய்து வந்திருக்கிறார்கள்.

    அவர்கள் நோயும் குணமாகி இருக்கிறது.

    ஓம் சக்தி பராசக்தி என்று சொன்னால் நமக்கு நல்ல துணிவும், உள்ளத்தில் நல்ல தெளிவும் கிடைக்கும்.

    கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம் இந்த மந்திரங்களைச் சொல்லி வந்தால் அதன் பலன் அநேகம்.

    பொதுவாக மந்திரங்களை 108 முறை தொடர்ந்து சொல்ல வேண்டும்.

    அல்லது 1008 முறை சொல்ல வேண்டும்.

    • ‘உ’ என்பது நடுப்பகுதியிலும், ‘ம’ என்பது மேல் பகுதியிலும் தொடர்பு கொண்டிருக்கிறது.
    • எனவே ‘ஓம்’ என்று நாம் உச்சரிக்கும் போது அது நுரையீரல் முழுவதையும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது.

    வேத மந்திரங்களின் ஒலிகளுக்கு நரம்புகளை மிருதுவாக்கி தூய்மைப்படுத்தும் சக்தி இருக்கிறது.

    பிராண வாயுவை ரத்தக் குழாய்களில் எந்தவிதமான இடையூறும் இன்றி எடுத்துச் செல்லப் பயன்படுகிறது.

    ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பு, கசடு, அடைப்புகளை நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

    மந்திரம் என்று சொல்கிறபோது அதன் முதல் நிலையாக அமைந்திருப்பது 'ஓம்' என்னும் மந்திரச்சொல்.

    ஓம் என்பதில் அ, உ, ம என்ற மூன்று ஒலிகள் இருக்கின்றன.

    'அ' என்கிற ஒலியானது நுரையீரல் பகுதியின் கீழ் பகுதியில் உள்ளது.

    'உ' என்பது நடுப்பகுதியிலும், 'ம' என்பது மேல் பகுதியிலும் தொடர்பு கொண்டிருக்கிறது.

    எனவே 'ஓம்' என்று நாம் உச்சரிக்கும் போது அது நுரையீரல் முழுவதையும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது.

    நுரையீரல் இப்படிச் செயல்படுவதால் அதோடு இணைந்து செயல்படும் மூளையும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.

    • ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.
    • சில மந்திரங்களை காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்கவேண்டும்.

    பிரணவ மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள், வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

    சில மந்திரங்களை ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.

    ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.

    சில மந்திரங்களை காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்கவேண்டும்.

    சில மந்திரங்களை திருமணம் ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.

    ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல் மந்திரங்களை சொல்லக்கூடாது.

    இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்.

    தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 தடவை சொல்வது மிகவும் நல்லது.

    வீட்டில் அமர்ந்து மந்திரங்களை சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு பலன்களை அள்ளித்தரும்.

    • சுவாமிகளின் மூல மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும்.
    • பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து செல்லும்.

    மனம் + திரம் = மந்திரம். மனதுக்கு திடம் கொடுப்பதுதான் மந்திரம்.

    சுவாமிகளின் மூல மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும்.

    பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து செல்லும்.

    இந்த உண்மையை நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து கொண்டனர்.

    சரியான மந்திரங்களை உச்சரித்து பலன் பெற்றனர்.

    மந்திரங்கள் பல கோடி உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த மந்திரங்கள் சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம் இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.

    பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது.

    பூஜைக்கு ஆகாத பூக்கள்

    அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது. கொண்டுவரப்பட்டது. தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது. அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது.

    பறித்த பிறகு மலர்ந்து பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டி வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள் ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள்.

    தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது.

    பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.

    தெய்வங்களுக்கு ஆகாத மலர்கள்

    அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை, செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசர, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை.

    அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்கு கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.

    விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.

    துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது.

    வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

    சமபகமாட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

    முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.

    கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூஜை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும்.

    குருக்கத்தி, ஆனந்ததிதா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை.

    விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

    • வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள்.
    • தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம்.

    பூக்களுள் சிறந்த பூ

    பூங்களுள் சிறந்தது தாமரைப்பூவே.

    வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு.

    மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான்.

    தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை.

    திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ.

    பவுர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் அகலும்.

    முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

    பூக்களின் குணங்கள்

    வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றை வைத்து இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும்.

    சிவப்பு வர்ணப்பூக்கள் இராஜச குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தால் இகலோக இன்பங்களைத் தரும்.

    பொன்மயமான மஞ்சள் வண்ணப் பூக்கள் கொண்டு பூஜை செய்து வந்தால் போகத்தையும் மோட்சத்தையும் தரும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சித்தி அடைய அவை உதவும். நம் பரம்பரை விருத்தி அடைய வைக்கும்.

    கறுப்பு நிறம் கொண்ட பூக்கள் தாமச குணம் கொண்டவை. ஆகவே பொதுவாக இவற்றை உபயோகித்து பூஜை செய்வது கூடாது.

    எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம்?

    தற்போது எல்லார் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. ஆகவே மலர்களை வாங்கி குளிர்ச்சியான சூழலில் வைத்திருந்து பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகவிட்டது.

    இருந்தாலும் அவ்வப்போது பறித்த மலர்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்வது சிறப்பானது. காலையில் பூத்த மலர்களை காலையிலேயே பூஜைக்கு பயன்படுத்துவதால் நறுமணம், இனிமை, புதுமை, இளமை ஆகியவை கூடுதலாக இருக்கும்.

    தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம். அரளிப்பூக்களை மூன்று நாள்களுக்குள்ளும், வில்வ இலையை பறித்து ஆறுமாதங்கள் வரையிலும், உபயோகிக்கலாம்.

    இவ்வாறே துளசி இலைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், சிவனைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு உபயோகப்படும் தாழம்பூக்களை ஐந்து நாள்களுக்குள்ளும், செண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணு கிரந்தியை மூன்று நாள்களுக்குள்ளும் பயன்படுத்தலாம்.

    ×