என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீட் தேர்வை"
- எந்த ஒரு பணி கொடுத்தாலும் அதனை முதலில் செய்வது இளைஞர் அணியாக தான் உள்ளது.
- நுழைவு தேர்வை ரத்து செய்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள காட்டூர் கலைஞர் கோட்டத்தின் அருகில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பனங்குடி குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதில் தொழில்துறை அமைச்சர் டி. ஆர்.பி. ராஜா, திருவாருர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க.வில் 23 அணிகள் உள்ளன.
இவற்றில் கட்சி எந்த ஒரு பணி கொடுத்தாலும் அதனை முதலில் செய்வது இளைஞர் அணியாக தான் உள்ளது.
இதனை மேடையில் உள்ள தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும் ஒத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.
தமிழகத்தில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவுமில்லை விடவும் இல்லை.
அவருக்கு பின்னால் வந்த ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஒவ்வொருவரும் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க கழகம் சார்பில் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நீட் தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்காத தமிழக கவர்னர் பதவி விலக வேண்டும்.
தஞ்சாவூர்:
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட திராவிட கழக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பாக ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றி குமார் தலைமை தாங்கினார்.
மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் ஜெயக்குமார், குணசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்காத தமிழக கவர்னர் பதவி விலக வேண்டும்.
நீட் தேர்வை உடனே மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில மாணவர் கழக செயலாளர் சௌந்தர பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், தஞ்சை மாநகர இளைஞர் அணி தலைவர் பிரகாஷ், மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர் ரொனால்ட் சரண், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் மகேந்திரன், மாவட்ட மாணவர் கழக துணை தலைவர் விடுதலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்