search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர்கள் சிலை"

    • பூங்காவை குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார்.
    • சத்ரபதி சிவாஜி, காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள புதிய பாராளுமன்ற வளாகத்தில் "பிரேர்னா ஸ்தல்" என்னும் பூங்காவை குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார்.

    இந்த பூங்கா வளாகத்தில் ஒரே இடத்தில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சத்ரபதி சிவாஜி, காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    பழைய பாராளுமன்ற வளாகத்தில் பல்வேறு இடங்களில் தலைவர்கள் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

    • தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக முத்துக்குமார் நியமனம்
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    ஆரல்வாய்மொழி :

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் குமரி சட்ட மன்றத்தொகுதி உறுப்பின ருமான தளவாய்சுந்தரம் பரிந்துரையின்படி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்குமாரை நியமனம் செய்தார். இதையடுத்து புதியதாக நியமனம் செய்யப்பட்ட முத்துக்குமார் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, பெருமாள்புரம் காமராஜர் சிலை, வடக்கூர் வ.உ.சி.சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் ஆரல்வாய்மொழி நகர செயலாளராக அறி விக்கப்பட்டுள்ள சுடலை யாண்டி, பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பால கிருஷ்ணன், கவுன்சிலர்கள் மோகன், மணி, கிளை செயலாளர்கள் அய்யப்பன், ராமலிங்கம், வக்கீல் லட்சுமி நாராயணன், இணை செயலாளர் பேச்சியம்மாள், தொழிற்சங்கம் மாசாணம், கச்சேரி நாகராஜன், சிவ சங்கரன், எபநேசர், அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×