search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டாவி"

    • ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் அந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
    • அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

    அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை மூட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் அந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது எப்படி நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை. கொட்டாவியின் தீவிரம் காரணமாக எனது தாடை அப்படியே பிடித்துக்கொண்டது. இதனால் என்னால் வாய் பேச முடியாமல் தவிப்பிற்குள்ளானேன். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை நாடினேன். பின்னர் எக்ஸ்ரே எடுத்து உரிய சிகிச்சைகளை அளித்தனர். அதன் பிறகு தான் சரியானது என அவர் கூறி உள்ளார்.


    • சம அழுத்த நிலைக்கு யூஸ்டேசியன் குழல் உதவுகிறது.
    • தொண்டைப் பகுதியோடு ‘யூஸ்டேசியன்’ குழல் இணைக்கப்பட்டுள்ளது.

    மனிதனின் காது புறச்செவி, நடுச்செவி, உட்செவி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நடுச்செவியானது தொண்டைப் பகுதியோடு 'யூஸ்டேசியன்' என்ற குழல் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மிக அவசியமானதாகும்.

    நம் செவிப்பறையின் வெளிப்புறமும் உட்புறமும் ஒரே மாதிரியான அழுத்தம் இருக்க வேண்டும். இல்லையெனில் செவிப்பறை கிழிந்துவிடும். இந்த சம அழுத்த நிலைக்கு யூஸ்டேசியன் குழல் உதவுகிறது.

    கொட்டாவி விடும்போது, அதிக அளவு காற்று தொண்டைப்பகுதிக்கு வந்து வெளியேறுகிறது. அப்போது யூஸ்டேசியன் குழலுக்குள்ளும் அழுத்த வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் தான் சில நொடிப்பொழுது காது அடைத்துக்கொள்கிறது.

    தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கும்போது அல்லது யாராவது கன்னத்தில் அறையும்போது, காது முறுக்கப்படும்போது டென்சர் டைம்பானி காதை பாதுகாக்கிறது.

    குறிப்பாக அதிக ஒலிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்க தானியங்கியாக இயங்கும் தசை இது. கொட்டாவி விடும்போது இத்தசை தூண்டப்பட மூக்கு, காது, வாய் என மூன்று உறுப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைவு உருவாகிறது. அப்போது காது கேட்கும்திறன் மழுங்குகிறது. இதைத்தான் காது அடைக்கிறது என்கிறோம்.

    ×