search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கூட்டணி தேர்தல்"

    • 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.
    • பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க. நெல்லை மண்டலம் சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.

    இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தேர்தல் நிதியினை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.

    நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் மட்டும் ரூ.35 லட்சம் நிதியாக வழங்கப்பட்டது. இதில் துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ. நிஜாம், புதுக்கோட்டை செல்வம், ஆர்.எஸ். ரமேஷ், சுதா பாலசுப்பிரமணியன், ராம.உதயசூரியன், வக்கீல் வெற்றிவேல், ரவிச்சந்திரன், வேல்முருகன், கண்ணன், பகுதி செயலாளர் பொன் வெங்கடேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலை நாட்ட சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் முழுமையாக வறுமையை ஒழிக்க தாயுமானவர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தை நிறைவேற்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதுடன் வேலை வாய்ப்பு உருவாக்க பல ஜவுளி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது. மாற்றான் தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி, மத்திய அரசின் குறுக்கீட்டை கடந்து தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.


    மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழகத்திற்கு பெரிய நிதி நெருக்கடி உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு ரூ. 37 ஆயிரம் கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த ஆண்டு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழக அரசு தான் செலுத்தி உள்ளது.

    எதிர்கட்சிகளை தவிர அனைவரும் இந்த பட்ஜெட்டை பாராட்டுகின்றனர். மழை வெள்ள பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பு, நிலுவை தொகை வராதது போன்றவையே தமிழகத்தின் வருவாய் குறைய காரணம். நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

    தமிழக அரசு, முதலமைச்சரின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    விருதுநகர் தொகுதி, திருச்சி மையப்படுத்திய தொகுதி, சென்னையை மையப்படுத்திய தொகுதி, ஈரோட்டை மையப்படுத்திய தொகுதி என 4 பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

    எண்ணிக்கை முடிவான பின்னர் தொகுதி குறித்து ம.தி.மு.க. அறிவிக்கும். விருதுநகர் தொகுதியில் நான் (துரை வைகோ) போட்டியிட வேண்டும் என்பது ம.தி.மு.க. தொண்டர்களது விருப்பம்.

    கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து வேட்பாளர் அறிவிப்பு இருக்கும். இந்த முறை எங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கம், தொ.மு.ச. தனியாக ஊர்வலம் நடத்தினர்.
    • புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து இன்று ஊர்வலம், மறியல், ஆர்ப்பாட்டம், பந்த் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

    புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் இன்று நடந்தது. இந்த போராட்டம் 2 பிரிவாக நடந்தது. இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கம், தொ.மு.ச. தனியாக ஊர்வலம் நடத்தினர்.

    தாவரவியல் பூங்கா அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்றம் பின்புறத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அதேநேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யூ.சி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ., எல்.எல்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து தனியாக போராட்டம் நடத்தினர்.

    நகர பகுதியில் 3 மணி நேர பந்த், கிராமப்புற பகுதிகளில் கடையடைப்புடன் போராட்டமும் நடத்தினர்.

    நகர பகுதியில் சுப்பையா சிலை அருகிலிருந்து ஊர்வலமாக வந்து மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை பெறுவதில் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை தொழிற்சங்கங்களின் பிளவு வெளிப்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார்.
    • ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் எங்கு போட்டியிடுவார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    ஆனால் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. என்றாலும் உத்தரபிரதேசத்துக்கு செல்ல விரும்பாத அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடவே ஆர்வம் காட்டி உள்ளார்.

    சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் இந்த தடவை அந்த தொகுதியில் போட்டியிட அவர் விரும்பவில்லை.

    அதற்கு பதில் அவர் பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக முடிவு செய்துள்ளார். ராஜஸ்தான் அல்லது இமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மேல்சபை எம்.பி.யாக தேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

    முன்னதாக பிரியங்கா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி உயிரிழந்த அந்த தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

    அவரை தமிழகத்துக்கு கொண்டுவர காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவில் போட்டியிடுவதால் பிரியங்காவும் தென் இந்தியாவுக்கு வர சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

    ராகுல், பிரியங்கா தென் இந்திய மாநிலங்களில் கவனம் செலுத்தும்பட்சத்தில் வட மாநிலங்களில் காங்கிரசுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

    • சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது.
    • இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ஜெயந்த் சவுத்ரி தலைமையில் ராஷ்டீரிய லோக்தள் (ஆர்எல்டி) கட்சி இயங்கி வருகிறது.

    மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனான ஜெயந்த் சவுத்ரிக்கு உத்தரபிரதேசத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் ஜாட்யின மக்களின் ஆதரவு உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து ராஷ்டீரிய லோக்தள் கட்சி செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.


    சமீபத்தில் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஜெயந்த் சவுத்ரி நன்றி தெரிவித்தார். இதையடுத்து அவரது ராஷ்டீரிய லோக்தள் கட்சி அணிமாறும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜெயந்த் சவுத்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் பா.ஜ.க. தலைமையிலான அணியில் சேர முடிவு செய்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள 80 எம்.பி. தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஜெயந்த் சவுத்ரிக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. எனவே அந்த தொகுதிகளில் சிலவற்றை அவரது கட்சிக்கு பா.ஜ.க. ஒதுக்கும் என்று தெரிகிறது.

    • பஞ்சாப்பில் பா.ஜனதாவிடம் தனித்து போட்டியிடுகிறது.
    • 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிளை கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்த கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். அதை தொடர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் அதில் இருந்து விலகி பா.ஜனதா அணிக்கு தாவினார்.


    இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும், சண்டிகரில் உள்ள பாராளுமன்ற தொகுதி என 14 இடங்களிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்றும் அடுத்த 10-15 நாட்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

    இதேபோல பாஜக - சிரோமணி அகாலிதளம் இடையே இன்று  நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் பஞ்சாப்பில் பா.ஜனதாவும் தனித்து போட்டியிடும் வாய்ப்புள்ளது.

    இதனால் பஞ்சாப்பில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.

    • தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இருப்பினும் பா.ஜனதாவுக்கு பிரதான எதிர்க்கட்சி தி.மு.க. தான்.
    • வேறு எந்த கட்சியும் இல்லை.

    உடுமலை:

    பா.ஜனதா கட்சி சார்பில் மோடி 3.0, வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓ.பி.சி அணி, மருத்துவ பிரிவு, தொழில் பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு, பிரசார பிரிவு சார்பில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பேசியதாவது:-


    தமிழகத்திலேயே முதல் முறையாக உடுமலையில் மோடி 3.0 வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இருப்பினும் பா.ஜனதாவுக்கு பிரதான எதிர்க்கட்சி தி.மு.க. தான். வேறு எந்த கட்சியும் இல்லை. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். இந்தியா கூட்டணி வருகின்ற நாட்களில் காணாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரசை பொறுத்த வரை கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது.
    • கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு கட்டுப்படுவோம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் திடீர் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வை அழைத்து பொங்கல் விழாவை நடத்தியது புதுவை தி.மு.க.வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருவள்ளுவர் தினத்தில் காங்கிரசையும், காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகள் பேசினர். இதனால் காங்கிரஸ், தி.மு.க. உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் அஜோய்குமார், ஹரீஸ் சவுத்ரி ஆகியோர் புதுவைக்கு வந்தனர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளோடு அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என தி.மு.க.வுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் புதுச்சேரிக்கு வந்து பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினர். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    இம்முறை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில் அமோக வெற்றி பெற அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    2 நாட்கள் முன்பு தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த சில தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கத்தையும், என்னையும் ஒருமையில் பேசி விமர்சனம் செய்து, கூட்டணி தத்துவத்தை மீறியுள்ளனர்.


    காங்கிரசை பொறுத்த வரை கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. தி.மு.க. தலைவர்கள் இந்தியா கூட்டணியில், மதச்சார்பற்ற கூட்டணியில் பல போராட்டங்களை இணைந்து நடத்தியுள்ளோம்.

    என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசையும், அவர்களின் ஊழலையும், மத்திய மோடி அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்தும் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

    இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற தேர்தல் நேரம். நானும், வைத்திலிங்கமும், முஸ்லிம் சமுதாயத்தினர் நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோம்.

    மத ஒற்றுமை, மோடி அரசால் சிறுபான்மையினர் தாக்கப்படுவது, முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியின் ஊழல், மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை விளக்கினோம்.

    அந்த கூட்டத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ.வான நேரு கலந்து கொண்டார். அவர் எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. நாங்கள் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியைத்தான் விமர்சித்தோம். இதுதான் அங்கு நடந்தது. இதற்காக தி.மு.க. தலைவர்கள் எங்களை ஒருமையில் பேசி, விமர்சித்து, மக்கள் மத்தியில் எங்களுக்கு கெட்டபெயர் உருவாக்க சிலர் திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளனர்.

    நாங்கள் எந்த காலத்திலும் கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. கூட்டணி தர்மத்தை மீறியது தி.மு.க.தான்.

    வில்லியனூர் தொகுதியில் ஷாஜகான் காங்கிரஸ் வட்டார தலைவராக இருந்தார். அவரை தி.மு.க.வில் சேர்த்தது யார்? மணவெளி தொகுதி காங்கிரஸ் செயல்தலைவர் சண்முகத்தை தி.மு.க.வில் இணைத்தது யார்? கூட்டணி தர்மத்தை மீறி இவர்கள் செயல்பட்டு விட்டு, காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்க தி.மு.க.வுக்கு எந்த உரிமையும் கிடையாது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் செய்ய உரிமை உண்டு, கட்சியை வளர்க்க உரிமை உண்டு. தங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்க உரிமை உண்டு. இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தவறாக விமர்சித்து தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    முதலில் நாம் நம் நடவடிக்கையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க மாட்டோம். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளது. கூட்டணியில் தி.மு.க. குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.

    சீட் ஒதுக்கீடு செய்வது கூட்டணி கட்சித் தலைவர்கள்தான். கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு கட்டுப்படுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, 'இந்தியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவர் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வர். யாரை சொன்னாலும் அவர்களுக்கு வேலை செய்வோம்' என்றார். முதுகில் குத்தும் காங்கிரஸ் என தி.மு.க., கடுமையாக விமர்சனம் செய்துள்ளதே என அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அதை நாங்கள் நேரடியாக கேட்கவில்லை. எனவே அதை நாங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் காதில் அப்படிப்பட்ட விமர்சனம் விழவில்லை என்றார்.

    • இந்தியா கூட்டணியில் பிரச்சினையே இல்லை என்று சொல்லவில்லை.
    • கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்போது எங்கள் கருத்தை தெரிவிப்போம்.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூடுதல் சீட் கேட்க முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் பிரச்சினையே இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் தேர்தல் நெருங்க நெருங்க எல்லோரும் ஒன்றுபட்டு பா.ஜனதாவை வீழ்த்துவோம். எல்லா கட்சிகளுக்கும் கூடுதல் சீட்டுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்போது எங்கள் கருத்தை தெரிவிப்போம். கண்டிப்பாக கூடுதல் தொகுதிகளை தி.மு.க. தலைமையிடம் கேட்போம். தேர்தலில் தி.மு.க. எந்த நிதியும் எங்களுக்கு தந்தது கிடையாது. நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க. வினரின் செலவுக்கு தேவைப்படும் நிதியை வாங்கி தி.மு.க.வினரிடமே கொடுத்து விட்டோம். இந்த முறையும் அப்படித்தான். அவர்களிடம் நிதி வாங்கி நாங்கள் தேர்தல் செலவுக்கு பயன்படுத்த மாட்டோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பா.ஜனதா மறைமுகமாக ஈடுபடுகிறது.
    • காங்கிரஸ் இதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பா.ஜனதா மறைமுகமாக ஈடுபடுகிறது. அதற்கு துணை போகும் வகையில் சில கட்சிகளும் ராகுலை பிரதமராக ஏற்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.


    இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த வேண்டும். அதை ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி தேவையில்லை. காங்கிரஸ் இதில் உறுதியாக இருக்க வேண்டும். அகில இந்திய கட்சியாக இருந்து கொண்டு மாநிலக் கட்சிகள் வளர காங்கிரஸ் துணைபோக கூடாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • இந்தியா கூட்டணிகளில் சிக்கல் நீடிக்கும் 3-வது மாநிலம் பீகாராகும்.
    • சிவசேனாவுடனும் காங்கிரசுக்கு தொகுதி பங்கீட்டில் முரண்பாடுகள் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக 27 எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பாட்னா, பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் நடந்தது. நேற்று முன்தினம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதுவரை நடந்த எந்த கூட்டத்திலும் தொகுதி பங்கீடு குறித்து முடிவாகவில்லை. அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாத சிக்கல் நீடித்து வருகிறது.

    பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதுவரை அது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்கும் முடிவுக்கும் நிதிஷ்குமார் தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். இந்தியா கூட்டணியை உருவாக்கிய அவர் பல்வேறு விஷயங்களில் முரண்பட்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பீகாரில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடந்தப் போவது இல்லை என்று நிதிஷ்குமார் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளரும், பீகார் மந்திரியுமான சஞ்சய் குமார்ஷா இது தொடர்பாக கூறியதாவது:-

    தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகாமல் இருப்பதற்கு 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தீவிரமாக இருந்ததுதான் காரணம். பீகார் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் பேசப்போவது இல்லை. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம்.


    காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளுடன் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அவர்களுக்கு இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்ட பிறகு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் ஆலோசனை நடத்துவோம். எங்களிடம் 16 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் நாங்கள் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். ஆனாலும் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    16 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிடும் பேச்சுக்கே இடமில்லை. ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது எங்களின் நிலையை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணிகளில் சிக்கல் நீடிக்கும் 3-வது மாநிலம் பீகாராகும். ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும், மராட்டியத்தில் சிவசேனாவுடனும் காங்கிரசுக்கு தொகுதி பங்கீட்டில் முரண்பாடுகள் உள்ளன.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெற்று இருந்தது. இதில் பா.ஜனதா 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஒரு இடத்திலும், ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி (பா.ஜனதா கூட்டணி) 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    • வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
    • இந்தி தெரியாதவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.

    மானாமதுரை:

    மானாமதுரையில் காங்கிரஸ் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில காங்கிரஸ் தலைவர் என்பது நியமன பதவி. எப்போது கார்கே நினைக்கிறாரோ, அப்போது நியமனம் செய்வார். வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தற்போது பரிசோதனை முறையில் 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் விவிபேட் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதை அதிகப்படுத்த வேண்டும்.

    மேலும் ஒரே ஒரு தேர்தலிலாவது அனைத்து வாக்குச் வாவடிகளின் விவிபேட் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் எண்ணிக் காட்டினாலே வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகங்கள் போய்விடும். இந்தி தேசிய மொழி அல்ல. இந்தி தெரியாதவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.

    இந்தியா கூட்டணி ஆலோசனைக்கூட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பேரிடர் நடக்கும் இடங்களில் முதல்வர் நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய தொழில் நுட்பத்தில் முதல்வர் எங்கிருந்து வேண்டுமானாலும் பேரிடர் மீட்புப் பணிகளைக் கண்காணிக்கலாம். முதல்வரை அதனால் விமர்சனம் செய்யாமல், நிர்மலா சீதாராமன் பொறுப்போடு அரசியல் செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. தொகுதிப் பங்கீட்டில் இந்த முறை காங்கிரசுக்கு மனவருத்தம் கண்டிப்பாக இருக்காது. புதிய கட்சிகள் வந்தால் எங்களுக்குத் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இதில் வருத்தப்பட முடயாது. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட காங்கிரஸ் தலை வர் சஞ்சய் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அங்கே பூகம்பம் ஏற்பட்டது.
    • புயல், வெள்ளம் ஏற்பட்டு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டது. இதைப்பற்றி கவனர் தமிழிசை பேசவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் வேட்பாளராக இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்மொழியப்பட்டார். அவர் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும், பிரதமர் வேட்பாளரை பின்னர் தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

    எனவே யார் பிரதமர் என்ற சர்ச்சை இந்தியா கூட்டணியில் இல்லை.

    குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அங்கே பூகம்பம் ஏற்பட்டது. பல ஆயிரம் மக்கள் இறந்தனர்.


    இது இயற்கை பேரிடர். இதை சீர் செய்ய மோடிக்கு 2 ஆண்டாகியது. புயல், வெள்ளம் ஏற்பட்டு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டது. இதைப்பற்றி கவனர் தமிழிசை பேசவில்லை.

    ஆனால் தென் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 96 செ.மீ மழை பெய்தது. இது இயற்கை பேரிடர். இதை சமாளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    தமிழக அரசு செய்யும் நல்லவற்றை கவர்னர் தமிழிசை பாராட்டுவதில்லை. கூட்டணி ஆட்சி நடந்தாலும், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை முடக்கும் வேலையை பார்க்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×