search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு"

    • பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1-ந்தேதி இரண்டு குண்டுகள் வெடித்ததில் 9 பேர் காயம்.
    • குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தது. இதில் ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது.

    இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக முசாவீர் உசேன் சாஜிப், அப்துல் மதீன் அகமது தாகா, மாஸ் முனீர் அகமது, முஜாமில் ஷெரீப் ஆகிய 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் 4 பேர் மீதும் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவமொகா மாவட்டத்தை சேர்ந்த முசாவீர், அப்துல் மதீன் ஆகிய 2 பேரும், தங்களது சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விட்டு வந்துள்ளனர்.

    இதுபோன்று, மற்ற 2 பயங்கரவாதிகளான மாஸ் முனீர் அகமது, முஜாமில் ஷெரீப்பும் தங்களது சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை, பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்திய சிம் கார்டுகள், இந்திய வங்கி கணக்குகளை வைத்திருந்ததுடன், வங்காளதேச நாட்டின் அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களையும் டார்க் நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருந்தார்கள்.

    அத்துடன் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருக்கும் முகமது சகீத் பைசலுக்கு, சோயிப் அகமது மிர்ஜியை அறிமுகம் செய்து வைத்திருந்ததும் அப்துல் மதீன் அகமது தாகாதான் என்பதும் தெரியவந்தது. அல்ஹிந்த் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமது சகீத் பைசலை தனது தலைமை அதிகாரியாகவும் அப்துல் மதீன் அகமது தாகா கொண்டு செயல்பட்டார்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்துவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கர்நாடக பா.ஜனதா தலைமை அலுவலத்தைதான் பயங்கரவாதிகள் குண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அவர்களது திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இதன் காரணமாக மார்ச் 1-ந்தேதி ராமேஸ்வரம் கபே ஓட்டலில் 2 வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வெடிக்க செய்திருந்தார்கள்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் கடந்த ஜனவரி 22-ந்தேதி பெங்களூருவில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தை குண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது. அங்கு மக்கள் நடமாட்டம் இருந்ததாலும், அலுவலகத்திற்குள் செல்ல முடியாத காரணத்தாலும், எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டத்துடன் இருக்கும் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டுவெடிப்பை அரங்கேற்றியது என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மூலமாக அம்பலமாகி உள்ளது.

    • குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்களுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அமைச்சர் ஷோபா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஷோபா கோரிக்கை விடுத்திருந்தார்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்களுக்கு தொடர்பு உள்ளது என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்பு கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து, பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் ஷோபா சார்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதை அடுத்த அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அமைச்சர் ஷோபாவின் மன்னிப்பை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக ஏற்று கொள்வதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    • தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஷோபா கோரிக்கை விடுத்துள்ளார்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்களுக்கு தொடர்பு உள்ளது என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்பு கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் வாதிட்டார்.

    தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக் கொள்ளப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தெரிவித்தார்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் ஷோபா சார்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

    • ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
    • பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும்.

    பெங்களூரு:

    பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மூன்று மாநிலங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாமில் செரிப் ஹுசைன் கைது செய்யப்பட்டார் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    • ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பு தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என்றார்.
    • ஷோபாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

    இதற்கிடையே, மத்திய இணை மந்திரி ஷோபா கரந்தலாஜே சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஷோபாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜேவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பாஜக அமைச்சருக்கு கடும் கண்டனம். பா.ஜ.க.வின் பொறுப்பற்ற அறிக்கை. ஒருவர் விசாரணை அதிகாரியாக இருக்கவேண்டும் அல்லது ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்புடன் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்கவேண்டும். அத்தகைய கூற்றுகளுக்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவாகிறது.

    பா.ஜ.க.வின் இந்தப் பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் மறுப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    பிரதமர் முதல் கேடர் வரை, பா.ஜ.க.வில் உள்ள அனைவரும் இந்தக் கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

    இந்த வெறுப்புப் பேச்சை இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    ×