search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசா தாக்குதல்"

    • மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.
    • இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    காசா:

    மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

    கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து, இஸ்ரேலுக்கு தக்க பாடம் கற்பிப்போம் என ஹமாஸ் தெரிவித்தது.

    இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி எம் 90 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளோம் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன் ஒரு ஏவுகணை காசா பகுதியின் எல்லையைக் கடந்து நாட்டின் மையத்தில் உள்ள கடல் பகுதியில் விழுந்தது கண்டறியப்பட்டது. இஸ்ரேலுக்குள் செல்லாத மற்றொரு ஏவுகணையும் கண்டறியப்பட்டது என தெரிவித்துள்ளது.

    • உக்ரைன் மற்றும் காசாவில் சமீபத்தில் கொடூர தாக்குதல்கள் நடந்தன.
    • அங்கு புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார் போப் பிரான்சிஸ்.

    வாடிகன் சிட்டி:

    உக்ரைன் ரஷியா இடையிலான போரில் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், காசாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போரும் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவில் ஆக்மத்தித் என்ற குழந்தைகள் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா திடீரென அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனாலும், உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள்மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை எனக்கூறிய ரஷியா, இதற்கு பொறுப்பேற்க முடியாது என மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், உக்ரைன் மற்றும் காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். அங்கு, புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வாடிகன் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    படுகொலை செய்யப்பட்ட ஒன்றுமறியாத மக்கள் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு தன்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதுடன், நடந்து வரும் மோதல்களுக்கு முடிவு ஏற்படுத்துவதற்கான வலுவான பாதைகள் அடையாளம் காணப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறார். அதற்கான நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கின்றார்.

    உக்ரைனில் மரணம் அடைந்தவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனியர்கள் விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • காசா மீதான இஸ்ரேல் போரில் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
    • தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டோம் என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

    காசா மீதான இஸ்ரேல் போரில் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இதில் ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 2 பேரை நீக்கம் செய்து இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 பேரை கண்டித்துள்ளதாகவும் தெரிவித்தது.

    • இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் திட்டமிடப்படாதது- நேதன்யாகு
    • பொதுமக்களைப் பாதுகாப்பதில் ‘போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை- ஜோ பைடன்

    இஸ்ரேல்- காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி மக்கள் உள்பட 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே மத்திய காசாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் பலியானார்கள்.

    கார் மீது குண்டு வீசப்பட்டதில் அரசு சாரா தொண்டு நிறுவனமான வேர்ல்டு சென்ட்ரல் கிச்சான் அமைப்பின் வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் தொண்டு நிறுவன பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறும்போது, "உதவிப் பணியாளர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வு கடுமையான தவறு. சிக்கலான சூழ்நிலைகளில் தவறாக அடையாளம் காணப்பட்டதன் விளைவாக இது ஏற்பட்டுவிட்டது. இது நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்றார்.

    இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும்போது, "இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் திட்டமிடப்படாதது. ஆனால் போர் காலத்தில் இது போன்று நடக்கும்" என்றார்.

    உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஸ்பெயினும் போலந்தும் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க இஸ்ரேலை இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, பொதுமக்களைப் பாதுகாப்பதில் 'போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    ×