search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • அரசின் புதிய அறிவிப்புகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
    • அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மாவட்ட கலெக்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம், போதைப் பொருளை கட்டுப்படுத்தும் செயல்பாடு குறித்து ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.

    அதற்கு முன்னோட்டமாக தலைமைச் செயலாளரும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா 3 நாட்கள் ஆய்வுக் கூட்டம் நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை கையாள்வது குறித்தும், அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவது பற்றியும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அதை கையாண்ட விதம், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை எவ்வாறு உள்ளது? எந்த அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அரசின் புதிய அறிவிப்புகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மாவட்ட கலெக்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

    இன்று நடைபெற்ற கூட்டத்தில் 14 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றது போல் நாளை நடைபெறும் 2-ம் கட்ட கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    15-ந்தேதி நடைபெறும் 3-ம் கட்ட ஆய்வுக் கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    • ஒவ்வொரு அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் பயத்துடன் தேர்தல் பணியாற்றினார்கள்.
    • தி.மு.க. வேட்பாளா வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

    அவர்களும் தேர்தல பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எந்த தொகுதியிலாவது வெற்றி வாய்ப்பு இழந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கட்சிக் கூட்டங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் பயத்துடன் தேர்தல் பணியாற்றினார்கள். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகும் அவர்கள் மனதில் கவலை நீங்கவில்லை. சில அமைச்சர்கள் கோவில் கோவிலாக சென்றும் வழிபட்டனர். தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடக் கூடாது. தி.மு.க. வேட்பாளா வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.


    கடந்த 2 மாதமாக ஒரு வித அச்சத்தில்தான் சில அமைச்சர்கள் காணப்பட்டனர். இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெற்ற பிறகே ஒவ்வொருவர் மனதிலும் வழக்கமான உற்சாகம் காணப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அளவில்லா மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இந்திய அரசியல் அரங்கில் அவர் கம்பீரமாக சென்று வரும் வகையில் 40-க்கு 40 வெற்றி கிடைத்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெருமைப்பட்டனர்.

    இதனால் தமிழக அமைச்சர்கள் மாற்றம் இப்போதைக்கு கிடையாது என்று அறிவாலய வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருப்பதால் இப்போதைக்கு அமைச்சர்கள் யாரையும் மாற்ற வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.

    • முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு.
    • தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்!

    பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
    • 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

    குடியரசு தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இவரைத் தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் மற்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.


    முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதிவில், "தொடர்ச்சியாக மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு. நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். பிரதமராக அரசியலமைப்பை நிலைநிறுத்தி, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரித்து, கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்தி, மாநில உரிமைகளை மதிக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்க உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.


    கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில், "தங்களின் மிகப்பெரிய பலத்தை பயன்படுத்தும் நாடுகள், அதன் மக்கள் மிகப் பெரிய பெருமைகளை சந்திப்பார்கள். மதிப்புக்குரிய இந்திய பிரமதர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தேச நலன், ஒற்றுமை மற்றும் தேசிய கடமை உணர்வில், 18-வது மக்களவையில் தேர்வாகியிருக்கும் பிரதிநிதிகள் ஒன்றிணைன்து பணியாற்றி மேலும் வலிமையான, பிரகாசமான இந்தியாவை உறுவாக்கும் கனவை நிறைவேற்ற செயல்படட்டும். ஜெய் ஹிந்த்!," என்று குறிப்பிட்டுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில், "இந்திய வரலாற்றில், ஜவகர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி அவர்களுக்கும், அவருடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டுவதிலும், பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதிலும் புதிய உச்சங்களை தங்களின் அரசு தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
    • சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    சென்னை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வி.டி.எம்.சார்லி - ஏ.அந்தோணியம்மாள் தம்பதியின் இளைய மகன் எம்.அஜய் தங்கசாமிக்கும், எம்.ஜான் கென்னடி - எல்.அனிட்டா அலெக்ஸ் தம்பதியின் மகள் ஜே.பெர்மீசியா டெமிக்கும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    இதில் நடிகர்கள் சிவகுமார், செந்தில், எஸ்.வி.சேகர், அழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இதையடுத்து திருமண விருந்து நிகழ்ச்சி சாந்தோம் கச்சேரி சாலையில் உள்ள பாஸ்டரல் சென்டர் ஹாலில் நடந்தது. சார்லியின் மூத்த மகன் எம்.ஆதித்யா சார்லி - எஸ்.எழில் அம்ரிதா, பேத்தி ஏ.ரேயா புஷ்பம் சார்லி உள்ளிட்டோர் விருந்தினர்களை வரவேற்றனர்.

    அதனைத்தொடர்ந்து எம்.அஜய் தங்கசாமி - ஜே.பெர்மீசியா டெமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.

    இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நியூஸ்-7 டி.வி. மேலாண்மை இயக்குனர் வி.சுப்பிரமணியன், நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, நாசர், விஜயகுமார், சின்னி ஜெயந்த், நடிகைகள் சச்சு, சுகன்யா, விஜி சந்திரசேகர், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு கே.எஸ்.ரவிகுமார், சந்தான பாரதி, ஆர்.சுந்தர்ராஜன், விஜய், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், பிரமிடு நடராஜன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    • நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • இங்கு எடுக்கப்படும் செல்பி புகைப்படங்கள் குறுஞ்செய்தியாக பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.

    சென்னை

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் பிரம்மாண்ட மெய்நிகர் அரங்கம், கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சர்ய அனுபவத்தை தூண்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க "காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

    இப்பிரம்மாண்ட அரங்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான "திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை" என நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


    இக்கண்காட்சி அரங்கிற்குள் உள்ளே நுழைந்ததும் முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் கூடிய 40 வயது தோற்றத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நேரடியாக மக்களுடன் தமிழை போற்றி பேசும் கவிதை காவியம் இடம்பெற்றுள்ளது. "வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல்" காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மற்றொரு அரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் எப்போதும் அவர் விரும்பும் முரசொலி அலுவலகத்தில் உரையாடுவதுபோல் ஒரு 'செல்பி பாயிண்ட்' மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எடுக்கப்படும் செல்பி புகைப்படங்கள் குறுஞ்செய்தியாக பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.


    மேலும், ஒரு அரங்கில் மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் பதிவு செய்த கலைஞரின் வரலாற்று காவியமும் கலைஞர் வழியில் தொடரும் திராவிட அரசை மக்கள் போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கம் திறக்கப்பட்ட நாள் முதல் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், ஆதீனங்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் வருகை தந்து கலைஞருடைய வாழ்க்கை வராலாறு, அரசியல் பயணம் போன்ற முக்கிய சாதனைகள் அனைத்தையும் விளக்கும் குறும்படங்கள், பல்வேறு துறைகளில் அவர் புரிந்த சாதனைகளை குறித்து ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    "காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை இன்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இக்காண்காட்சியகத்தை ஏற்பாடு செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, குறும்படத் தயாரிப்புக்கு உதவிய கவிஞர் பா.விஜய், புகைப்படங்களை வடிவமைத்த அரசு ஆர்ட்ஸ் கோபி, மெய்நிகர் பரிமாண தொழில்நுட்பத்திற்கு உதவிய பாரதி மற்றும் கண்காட்சிக்கு உதவிய அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, பி. வில்சன், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன், கவிஞர் பா.விஜய் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம்.
    • நாடு தழுவிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்.

    நீட் தேர்வை முன்கூட்டியே எதிர்த்தது திமுக தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நீட் ஆபத்தை முதலில் முன்னறிவித்து அதற்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது திமுக தான்.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தோம்.

    ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின்படி நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம்.

    ஆளுநர் தரப்பில் அதிக காலதாமதத்திற்கு பிறகு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது.

    நீட் தேர்வு முரண்பாடுகளால் நாடு தழுவிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்.

    தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களவை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.
    • பாஜகவுக்கு சரிக்குச் சமமாக இந்தியாக் கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம்.

    திமுக எம்பிக்கள் கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

    அப்போது கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240க்கு பாஜக அரசு இறங்கிவிட்டது.

    இந்தச் சூழலில் நாம் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும், போராட வேண்டும்.

    ஒரு விதத்தில் பார்த்தால் பாஜகவுக்கு சரிக்குச் சமமாக இந்தியாக் கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம். இந்த வாய்ப்பை ஆக்க பூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    பலவீனமான பாஜக அரசை, நம் முழக்கங்கள் மூலம் செயல்பட வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றியது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், 21 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த எம்.பி.க்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர்.

    பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிப்பதற்கு, பாராளுமன்ற குழுவில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வெற்றிக்கு வழி நடத்தி தி.முக. தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    ஜூன் 14ஆம் தேதி கோவையில் கலைஞருக்கு நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதி வெற்றி விழா, முதல்வருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரை மணி நேரம் நடைபெற்ற எம்.பி. கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது.

    நீட் தேர்வு விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு உணர்த்துமாறு சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாருக்கு கோரிக்கை விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது.
    • நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.

    நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன.

    பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது. இந்த புகாா்களை அத்தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) மறுத்தது.

    இந்த நிலையில், நீட் தோ்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

    'நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு பதில் அளித்த என்.டி.ஏ., 'என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும் தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது' என்று விளக்கம் அளித்தது.

    இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு மகாராஷ்டிரா மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது.

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பேசிய அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப், "நீட் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. நீட் தேர்வு, மாணவர்களை வஞ்சிப்பதாகவும், மகாராஷ்டிரா மாணவர்களை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

    "நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. சமூகநீதிக்கு எதிரானவை. தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை. நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம் கோப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று அவர் கூறியிருந்தார்.

    • ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
    • துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஊடகம், இதழியல், திரைப்படத் துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டுச்சென்றுள்ளார்.

    இத்துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.





    • பொருளாளர் பதவியில் இருந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • கூட்டத்தில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி பேசுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், 21 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த எம்.பி.க்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர்.

    பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிப்பதற்கு, பாராளுமன்ற குழுவில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம்பெறுகிறது.

    பொருளாளர் பதவியில் இருந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    ஆனால் அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி பேசுகிறார்.

    ×