search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவுலர்கள்"

    • பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் பவுலர்கள் பவுண்டரி எல்லை சென்று தண்ணீர் குடித்து வருகின்றனர்.
    • அப்படி பவுண்டரி எல்லைக்கு சென்று அடிக்கடி குடித்தால் பின்னர் தண்ணீர் இடைவெளி எதற்கு?

    புதுடெல்லி:

    அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அடிக்கடி பவுலர்கள் ஓவர்களுக்கு இடையேயும், பவுண்டரி எல்லைக்கும் சென்று தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

    குறிப்பாக, பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் அடிக்கடி பவுலர்கள் பவுண்டரி எல்லைக்குச் சென்று தண்ணீர் குடித்து வருகின்றனர். அப்படி பவுண்டரி எல்லைக்கு சென்று அடிக்கடி குடித்தால் பின்னர் தண்ணீர் இடைவெளி எதற்கு? தண்ணீர் இடைவெளி வரை காத்திருக்கும் பேட்ஸ்மேன்கள் மனிதர்கள் இல்லையா? என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, சுனில் கவாஸ்கர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

    6 பந்துகள் வீசி முடித்தபின் ஒரு பந்துவீச்சாளர் டிரிங்ஸ் பிரேக் எடுக்கிறார் என்றால், பிறகு எதற்கு கூடுதலாக டிரிங்ஸ் பிரேக் என ஒன்றை வழங்க வேண்டும்.

    6 பந்து வீசிய பவுலருக்கே டிரிங்ஸ் பிரேக் என்றால், ஒரு ஓவரில் 8 ரன் அல்லது அதற்கு மேல் அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு எந்த டிரிங்ஸ் பிரேக்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    எனவே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, எதிர் கேப்டனின் அனுமதி பெற்ற பிறகு பானங்கள் மைதானத்திற்குள் எடுத்து வரவேண்டும் என்ற முறையை திரும்ப கொண்டுவர வேண்டும்.

    ரிசர்வ் வீரர்கள் ஓவர்களுக்கு இடையே மைதானத்துக்குள் சென்று தங்களுடைய வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்காதவாறு நடுவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரது சக வீரருக்கு குளிர்பானம் தர வேண்டுமானால் அது பவுண்டரி லைனில் இருந்தே கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×