search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல்கலாம் பிறந்தநாள்"

    • புதிய ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும்.
    • செங்குத்தான தூக்குப்பாலம் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

    மண்டபம்:

    தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் நிலப்பரப்பையும், பாம்பன் தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1914-ம் ஆண்டு ரெயில் பாலம் கட்டப்பட்டது.

    நூற்றாண்டுகளை கடந்த இந்த ரெயில் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து அவ்வப்போது தடைபட்டது.

    பாம்பன் தீவில் உள்ள ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் சிரமமடைந்தனர்.

    இந்தநிலையில் பழைய பாலத்திற்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்காக ரூ.550 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட என்ஜினீயர்கள் மேற்பார்வையில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகலாக இப்பணியில் ஈடுபட்டனர். புதிய ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும்.

    கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரம் கொண்ட புதிய ரெயில் பாலத்தை 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    புதிய ரெயில் பாலத்தின் நடுவே நவீன வசதியுடன் செங்குத்தான தூக்குப்பாலம் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த தூக்கு பாலத்தை மனித உழைப்பின்றி மோட் டார்கள் மூலம் ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தூக்குப் பாலத்தை 3 நிமிடத்தில் திறந்து 2 நிமிடத்தில் மூட லாம்.

    இதே போல் தூக்குப்பா லம் அருகிலேயே ஆப்பரேட்டர் அறை, மின்மாற்றி அறை அமைக்கப்பட்டுள்ளன. 4 வருட தீவிர கட்டுமான பணிக்கு பின் தற்போது பால பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    புதிய ரெயில் பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்யும் வகையில் கடந்த மாதம் சோதனை ரெயில் ஓட்டம் மற்றும் தூக்கு ரெயில் பாலம் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    பாம்பன் புதிய ரெயில் பாலம் அக்டோபர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    அதற்கேற்ற வாறு தற்போது பாலப்பணிகள் முடிவடைந்துள்ளதால் அதற்கான திறப்பு விழா குறித்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தென்னக ரெயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஷ்தவா நேற்று புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார்.

    மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மண்ணின் மைந்தருமான அப்துல்கலாம் பிறந்தநாளான அக்டோபர் 15-ந்தேதி பிரதமர் மோடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்து நாட்டுக்கு அர்பணிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


    இதற்கான விழா பாம்பனில் நடைபெற உள்ளது. மேடை அமைக்கும் இடம், ஹெலிகாப்டர் நிறுத்துவதற்கான ஹெலிபேடு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்னக ரெயில்வே மேலாளர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், வரலாறு சிறப்பு வாய்ந்த புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க பாம்பன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.

    இருப்பினும் பிரதமர் விழாவில் பங்கேற்றால் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த மாதம் இறுதிக்குள் புதிய ரெயில் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    • அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வேடியப்பன் ரூபவ்சாந்தி வேடியப்பன் ரூபவ், நிர்வாக இயக்குனர் தமிழ்மணி ரூபவ், பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம் ரூபவ், ஜான் இருதயராஜ் ரூபவ், ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி ரூபவ்,புவனேஸ்வரி ரூபவ், மணிமேகலை ரூபவ்,பிரவீணா மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.

    • அப்துல்கலாமின் 91-வது பிறந்த நாளையொட்டி ராமேசுவரம் நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சமாதி முன்பு பிராத்தனை நடந்தது.

    ராமேசுவரம்

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையடுத்து ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சமாதி முன்பு ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் பிராத்தனை நடந்தது. இதில் ஜமாத் நிர்வாகிகளும், அப்துல் கலாம் குடும்பத்தினரும் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அப்துல் கலாமின் பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் ஆயிஷா பேகம், மகன் ஜெயினுலாதீன், நடிகர் தாமு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முருகன், மணிகண்டன், டி.ஆர்.டி.ஓ. சார்பில் பொறுப்பாளர் அன்பழகன், சமூக ஆர்வலர் பழனிசாமி உட்பட ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    அப்துல்கலாமின் 87-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #AbdulKalam
    ராமேசுவரம்:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 87-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அப்துல்கலாமின் அடக்க ஸ்தலம் மலர் போர்வைகளால் போர்த்தப்பட்டு இருந்தது.



    காலை 9 மணிக்கு கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தாமு ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தூஆ ஓதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து மரியாதை செலுத்தி மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலாமின் அரிய புகைப்படங்களை கண்டு களித்தனர்.

    ராமநாதபுரம் வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கலாமின் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினர்.

    அப்துல்கலாம் படித்த ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    முன்னதாக அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பேக்கரும்பு மணிமண்டபத்தில் நேற்று பசுமை ராமேசுவரம் என்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #AbdulKalam


    ×