என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94316"
- நடிகர் ரஜினி தனது 73-வது பிறந்தநாளை நேற்று தனது பேரன்களோடு கொண்டாடியிருக்கிறார்.
- இவர் சமீபத்தில் செய்த செயல் நெகிழ வைத்துள்ளது.
ரஜினிகாந்த்தின் 73-வது பிறந்த நாளின் போது ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன் குவிந்திருக்க ரஜினி கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் பேரன்களோடு தங்கி விட்டார். மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம் தனுசின் மகன்கள் லிங்கா, யாத்ரா ஆகியோருடன் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி செய்த ஒரு சம்பவம் நெகிழ வைத்திருக்கிறது. அதாவது, ரஜினி சென்னையில் வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நிலையான வருமானம் இல்லாததால் சில நாட்களில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்.
அப்போது சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலிருந்த உட்லண்ட்ஸ் ஓட்டலில் இரவு நேரத்தில் கிடைக்கும் காசை வைத்துச் சாப்பிட வந்து போயிருக்கிறார். அங்கே சர்வராக இருந்த நாராயண ராவ் என்பவர் ரஜினியின் நிலையை அறிந்து அவருக்குக் கொடுக்கும் பணத்திற்கு மேல் அதிகமாகவே சாப்பாடு கொடுத்திருக்கிறார்.
சில நேரங்களில் கையில் பணமில்லாத போது, பணம் வாங்காமலேயே சாப்பாடு கொடுத்திருக்கிறார். இது பற்றி ஓட்டலில் கேட்டபோது பணம் கொடுக்காவிட்டால் தனது சம்பளத்தில் எடுத்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். இப்படியே பல நாட்கள் ரஜினிக்குச் சாப்பாடு போட்டு வந்திருக்கிறார் நாராயணராவ்.
பின்னர் ரஜினி திரையுலகில் முன்னணி நடிகரானார். சில வருடங்களுக்கு முன்பு தனக்கு உதவியாக இருந்த நாராயணராவை தேடியிருக்கிறார். அவர் பல வருடங்களுக்கு முன்பே வேலையை விட்டு விலகி விட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அவர் உடுப்பியைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே ரஜினிக்குத் தெரிந்திருக்கிறது.
இதனால் தனது நெருங்கிய நண்பர் ஒருவரை ஏற்பாடு செய்து உடுப்பி நாராயண ராவைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறார். சில மாதங்கள் கழித்து வயதாகி, வறுமையான நிலையில் உடுப்பியில் நாராயணராவ் வாழ்ந்து வருகிறார் என்று தெரிய வந்தது. இந்தத் தகவலைக் கேட்டுத் தெரிந்து கொண்ட ரஜினி சஸ்பென்சாக நாராயணராவ் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். வயதான நிலையில் இருந்தாலும் ரஜினியைக் கண்டுகொண்டு உணர்ச்சி வயப்பட்டிருக்கிறார் நாராயண ராவ்.
அவரது குடும்ப நிலையை விசாரித்துத் தெரிந்து கொண்ட ரஜினிகாந்த் அவர் பெயரில் பெரிய தொகை ஒன்றை வங்கியில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையை குடும்பத்திற்குச் செலவு செய்யக் கிடைக்கும்படி செய்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அவரது மகனுக்குத் தனக்கு தெரிந்த ஐ.டி. கம்பெனியில் வேலையும் வாங்கி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
- நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- நடிகர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், தலைவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க... என்றும் உங்கள் ரசிகன் என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
- நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயிலர்
இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக புதிய போஸ்டரை ஜெயிலர் படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஜெயிலர்
அதன்படி, இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத் தெரிவித்து படக்குழு அந்த கதாபாத்திரத்தின் ஒரு முன்னோட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகர் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
- ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக புதிய போஸ்டரை ஜெயிலர் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இன்று 6 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து ஜெயிலர் படத்தில் ரஜினியின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இப்படத்தில் ரஜினிக்கு முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
- இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்கள் ரசிகர்கள் ஏராளமானோர் ரஜினிகாந்த்தை காண காத்திருக்கின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவரகள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "செப்பு மிங்கிளாகி வரும் தங்கம் அல்ல அவர்.. எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்..!!" சூப்பர் மனிதர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை - நீடூழி வாழ்க தலைவா!" என்று பதிவிட்டு அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
- இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- இந்திய கிரிக்கெட் வீரர் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்கள் ரசிகர்கள் ஏராளமானோர் ரஜினிகாந்த்தை காண காத்திருக்கின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவரகள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "செப்பு மிங்கிளாகி வரும் தங்கம் அல்ல அவர்.. எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்..!!" சூப்பர் மனிதர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை - நீடூழி வாழ்க தலைவா!" என்று பதிவிட்டு அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
- ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டு இருக்கிறார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
ரஜினி - ஏ.ஆர்.ரகுமான்
இவர் தற்போது 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
ரஜினி- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரகுமான்
இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடிகர் ரஜினியை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "இரண்டு அற்புதமான மனிதர்களின் சந்திப்பிற்கு நீங்கள் காரணமாக இருப்பது மிகப்பெரிய ஆசிர்வாதம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
When two amazing human beings meet and you happen to be the reason ..you are blessed and of course they are THE best! @arrahman sir @rajinikanth appa ! pic.twitter.com/8WC83GpV6E
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) November 30, 2022
- இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தற்போது 'லி மஸ்க்' என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ளார்.
- விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார்.
இந்திய திரையரங்குகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார். முன்னதாக '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார். அதே போல் 'லி மஸ்க்' என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 'விர்ச்சுவல் ரியாலிட்டி' மூலம் திரைப்படங்களை காண்பதற்கு பிரத்யேக கண்ணாடி போன்ற கருவி கொடுக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர் அமரும் நாற்காலியானது, திரைப்படத்தில் வரும் காட்சிக்கு ஏற்ப அசைவுகளை கொடுக்கிறது. இதனால் பார்வையாளர்கள் காட்சிக்குள் சென்றது போன்ற தத்ரூபமான அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்து கொண்டு ரஜினிகாந்த் படம் பார்க்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- நடிகர் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
- இவரை காமெடி நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் - ரஜினி
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ரோபோ சங்கர் தனது 22-வது திருமணநாளையொட்டி நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் குடும்பத்துடன் ரோபோ சங்கர்
ரோபோ சங்கர் இந்த சந்திப்பிற்காக ரஜினியிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், அவரது குடும்பத்தினரை நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து ரஜினி சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- '3', ‘வை ராஜா வை’ போன்ற படத்தை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
- தற்போது இவரின் இயக்கத்தில் ரஜினி இணைந்துள்ளார்.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர் 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
லால் சலாம்
இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் முதல் முறையாக ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#LalSalaam 🫡 to everyone out there!
— Lyca Productions (@LycaProductions) November 5, 2022
We are extremely delighted to announce our next project, with the one & only Superstar 🌟 @rajinikanth in a special appearance!
Directed by @ash_rajinikanth 🎬
Starring @TheVishnuVishal & @vikranth_offl in the leads 🏏
Music by @arrahman 🎶 pic.twitter.com/aYlxiXHodZ
- நடிகை குஷ்பு தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
- இவர் தற்போது விஜய்யுடன் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
90-களில் சினிமா திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது அரசியலில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினி - குஷ்பு
இந்நிலையில் குஷ்பு நடிகர் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள குஷ்பு, "சூப்பர் ஸ்டாருடன் ஒரு சாதாரண சந்திப்பு. அவருடன் தேநீர் அருந்தியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை
இவர் ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
When a casual meeting with the one n only #SuperStar over cup of tea and laughter, it brings so much joy and happiness. Thank you Sir for your valuable time. As always such a pleasure to be in your esteemed company. And must say you are looking amazing. Much love❤️ @rajinikanth pic.twitter.com/pUQ1oykFgW
— KhushbuSundar (@khushsundar) October 29, 2022
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்